குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, September 23, 2012

காயத்ரி சாதனை மூலம் சாதகன் அடையும் நவ சித்திகள் (ஒன்பது அரிய ஆற்றல்கள்)

பெரும்பாலானோர் சித்திகள் என்றவுடன் வானில் பறத்தல், நீரில் மிதத்தல், உருவை மறைத்தல் என்பன மட்டுமே சித்தி என எண்ணிக்கொண்டுருக்கின்றனர். அதை விட மனித வாழ்க்கை இன்பமாக அமைய மனதினை பயன்படுத்தி மனிதன் அடைய வேண்டிய சித்திகள் பலது உள்ளது. அத்தகைய ஒன்பது ஆற்றல்களை காயத்ரி சாதனை சாதகனுக்கு கொடுக்கும்.
  1. வாழும் கலையும் வாழ்வின் நோக்கம் அறிதலும்: காயத்ரி மந்திர பாவனையால் மனம் அடையும் ஞானத்தின் பயனாக சாதகன் தனது வாழ்வினை தனக்கும் மற்றவற்களுக்கும் பயனுடையதாக்கி கொள்கிறான். தான் ஆன்மா என்பதனை அறிவதன் மூலம் மரணபயத்திலிருந்து விடுபடுகிறான். இதனால் இன்ப துன்பங்கள் அவனை பாவிக்காத நிலையினை அடைகிறான். இந்த நிலையால் மனம் ஒருமை அடைகிறது. இதனால் வாழ்வில் அவன் தனது முயற்சிகளை முழுமனதுடன் ஈடுபட்டு வெற்றி அடைகிறான்.
  2. பிராணசக்தியிற்கான கவசம்: பிராணசக்தியே ஒரு மனிதனின் உயிராற்றல். காயத்ரி என்பதன் பொருளே பிராணனை ரட்சிப்பது என்பதே. காயத்ரி சாதகனது பிராணன் காயத்ரி சாதனையினால் காப்பாற்றப்படுகிறது. பிராணனின் இழப்பிற்கு மனதின் தவறான நடவடிக்கைகளே காரணம். பிராணன் அதிகமாக சேமிக்கப்பட உடல் நோய்களில் இருந்து விடுபட ஆரம்பிக்கிறது.
  3. வாழ்வில் மேன்மை அடைதல்: காயத்ரி மந்திர ஜெபத்தினால் புத்திமயகோசம் மனதுடன் தொடர்புகொள்ள ஆரம்பிப்பதால் வாழ்வு அனைத்து விடயங்களிலும் மேன்மையினை அடைய ஆரம்பிக்கிறது. அதாவது எண்ணும் எண்ணம், செய்யும் செயல் சரியான வழியில் செல்வதால் மேன்மை அடைய ஆரம்பிக்கிறது.
  4. தூய்மை: அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் ஏற்படுவதால் சாதகனை சூழ காந்த சக்தி தூய்மை அடைந்து அவனை அனைவரும் விரும்ப ஆரம்பிப்பர்.
  5. தெய்வீக பார்வை: இன்று உலகில் யாரைப்பார்த்தாலும் தீயதைப் பேசி, தீயதை நினைத்து, தீய செயலாகவே நடப்பதை கவனித்து வெருகிறோம். உலகம் என்பது ஒவ்வொருவருடைய மனமும் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தின் பிரதிபலிப்பே, தீய எண்ணங்களை உணர்ந்தவர்களுக்கு தீயதாகவும், நல்ல எண்ணங்களுடையவர்களுக்கு நல்லதாகவும் உலகம் தோன்றும்.உண்மையில் உலகம் என்பது எமது ஆழ்மனதில் சேர்ந்த பதிவுகளில் பிரதிபலிப்பே, காயத்ரி சாதகனது மனம் தெய்வ சக்தியினால் நிரப்பப்படுவதால் உலகினை தெய்வ சக்தி நிறைந்த உலகாகவே காண்பான். இந்த ஆற்றலை காயத்ரி சாதனை தரும்.
  6. உயர்ந்த குணங்களும் பண்புகளும்: ஒரு மனிதனின் ஆளுமை என்பது அவனது பண்புகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. காயத்ரி சாதகன் கீழ்வரும் பண்புகளை தனது காயத்ரி சாதனையினால் அடைகிறான். மனிதபிமானம், ஈகை, இனிய பேச்சு, நட்புடன் பழகல், நேர்மை, பொறுமை, பாராட்டும் குணம், கடின உழைப்பு போன்ற குணங்கள்.
  7. பகுத்தறியும் தன்மை: அதாவது எது நல்லது? எது கெட்டது? இதனைச் செய்தால் நனமை வருமா? இல்லையா? இது தேவையா? இல்லையா? இப்படியான ஆற்றல் இல்லாமையினாலேயே மனிதன் மனம் போன போக்கில் சென்று துன்பத்தில் விழுந்து கொள்கிறான், காயத்ரி சாதனை செய்பவனுக்கு பகுத்தறியும் தன்மை அதிகரிக்கும். இதுவே உண்மையான பகுத்தறிவு! காயத்ரி சதகனே உண்மையான பகுத்தறிவாளன்.
  8. சுயகட்டுப்பாடு: மனித உடமும், மனமும் பேராற்றலின் இருப்பிடம்,அதனை சரியான வழியில் பயன்படுத்த ஒரு ஒழுங்குமுறை தேவை. அந்த ஒழுங்குமுறையினை தருவது சுயகட்டுப்பாடு. காயத்ரி சாதகன் சுயகட்டுப்பட்டினை அடைவான்.
  9. சேவை புரியும் மனம்: இன்று பலரும் சேவை என்று மனிதனை கையேந்தும் பிச்சைக்கார்களாக, பச்சாதாபத்துடன் செய்து வருகிறார்கள். உண்மையான சேவை என்பது உதவி தேவைப்படும் நபரிற்கு நாம் செய்யும் உதவியால் அவர் தனது சொந்த முயற்சியில் உந்துதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைய வைக்கும் உதவி. இத்தகைய உதவும் ஆற்றம் காயத்ரி சாதகனுக்கு ஏற்படும்.
இந்த ஒன்பது வகையான ஆற்றல் தனிமனிதனையும் சமூகத்தினையும் அமைதியான, ஆனந்தமான, ஆக்கப்பாதையில் இட்டுச் செல்லும்.

ஆக‌வே இந்த அரிய‌ சாத‌னையினை நீங்க‌ளும் ப‌ய‌ன்படுத்தி உங்க‌ள் வாழ்வினையும் சூழ‌ உள்ளோர் வாழ்வினையும் இன்ப‌பாதையில் இட்டுச் செல்ல‌ குருதேவ‌ரை பிரார்த்திக்கிறோம்.
ஸத்குரு பாத‌ம் போற்றி!

Saturday, September 22, 2012

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்!


எமது பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் அன்பர்களுக்கு எமது வேலைப்பளு காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியாமல் போனமைக்கும் வருத்தத்தினை தெரிவித்துக்கொண்டு குருவருளால் உங்கள் எதிர்பார்ப்பினை சிறிதளவாவது பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 

இதுவரைகாலமும் யோகமார்க்கம், சித்தர்களது வித்தைகள் என்பவற்றிற்கு எமது கற்கையில் எமது மனதில் உண்டாகும் தெளிவுகளை நேரம் கிடைக்கும் போது எழுத்துருவேற்றி பதிவித்து வந்தோம். எது வித ஒழுங்குமுறையும் இருக்கவில்லை. சில பதிவுகள் அரைகுறையாக விடுபட்டும் உள்ளன. ஆதலால் குருவருளுடன் ஒரு சில எல்லைகளை வகுத்துள்ளோம். இனி வரும் ஒரு மாதகாலத்திற்கு அக்டோபர் 31 ம் திகதிவரையிலான காலப்பகுதியிற்கு ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணியளவில் ஒரு பதிவு பதிப்பிக்கும் படி கட்டுரைகளை ஒழுங்கு படுத்த எண்ணியுள்ளோம். செப்டெம்பர் 30 வரையிலான பதிவுகள் முற்றாக எழுதி வலையேற்றியாகி விட்டது, ப்ளாக்கர் தானியங்கியாக தினசரி 10.00 IST மணிக்குபதிப்பிக்கும். 

இந்தப்பதிவுகள் கீழ் வரும் விடயங்களை உள்ளடக்கி இருக்கும்; 

காயத்ரி சாதனை: அடுத்த மாதம் நவராத்ரியினை ஒட்டி எமது வலைப்பின்னலைப்படிப்பவர்கள் பயன் பெற எமது குருபரம்பரையில் பெற்ற காயத்ரி சாதனை நுணுக்கங்களை எதுவித பாகுபடின்றி அனைவரும் செய்யக்கூடிய விதத்தில் வெளியிட உள்ளோம். இதுவே நவராத்ரி முடியும் வரையிலான பெரும்பகுதியாக இருக்கும். 

சூஷ்ம திருஷ்டி பதிவுகள்: இதன் மிகுதி பகுதிகள் பதிவிக்கப்படும், கிட்டத்தட்ட 05 - 06 பதிவுகளில் இது முடியும். இது முடியும் தருவாயின் அடுத்த பதிவாக முன்னைய பதிவுகளில் விடுபட்ட ஞானகுரு, அகத்தியர் ஞானம் மற்றும் சிறு குறிப்புகள் பதிவுகள் முடிவுக்கப்படும். 

வாசகர்களே எம்மை எழுதவேண்டும் எனத்தூண்டுவது யாராவது ஒருவரவது இந்த எழுத்துக்களால் பயன்படுகிறார்கள் என்ற மனத்திருப்தியே! ஆதலால் வாசிக்கும் பதிவுகளுக்கு ஒருவரியிலாவது உங்கள் ஆவலை தெரியப்படுத்துங்கள், இது எம்மை மேலும் சிரத்தையுடன் எழுதத்தூண்டும். அந்த வகையில் சிரத்தையுடன் கருத்து தெரிவுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்! 

காயத்ரி மந்திர பாவனை தியானம்




சென்ற பதிவில் காயத்ரி மந்திரத்தின் பொருளை பாவனை மூலம் ஜெபிப்பவன் தெய்வ சக்தியினை ஆகர்ஷிக்கும் தன்மையினை பெறுவான எனப் பார்த்தோம், அதனை சாதிக்கும் பாவனையினை எப்படிச் செய்வது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். கீழே தரப்பட்டுள்ள மூன்று பாவனைகளையும் காயத்ரி மந்திரத்தினை மனதில் ஜெபித்த வண்ணம் மனத்திரையின் கண்டு வரவேண்டும்.

முதலாவது பாவனை:
பிரணவ மந்திரமான ஓம் இன மூலம் குறிப்பிடப்படும் பிரம்மம் எனப்படும் எல்லாம் வல்ல இறைசக்தி எல்லா உலகிலும் பரந்து நீக்கமற நிறைந்துள்ளது. மனதில் பூர், புவ, ஸ்வ எனும் மூன்று உலகிலும் இறை சக்தி ஒளிவடிவாய் வியாபிப்பதை காணவும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் இறைசக்தியின் வடிவே, அனைத்திலும் இறைவனையே காண்கிறேன், என்னிடமுள்ள தீயசக்திகள் விலகி இறை சக்தி நிறைவதை உணர்கிறேன், இதன் மூலம் என்னை தொடர்பு கொள்ளும் அனைத்திலும் இறைசக்தி நிறைகின்றது, அதன் பயனாக இறைவனின் குணங்களான சந்தோஷம், அமைதி, ஆனந்தம், அழகு என்பன என்னை சூழ‌ நிறைவ‌தை உண‌ர்கிறேன்.


இந்த‌ப் பாவ‌னையினை 'ஓம் பூர் புவ‌ ஸ்வ‌' என்ற‌ வ‌ரியினை உச்ச‌ரித்து பாவிக்க‌வும்.

இர‌ண்டாவ‌து பாவ‌னை:
இந்த‌ (த‌த்) இறைச‌க்தி அதீத பிரகாசமான ஒளிச் சக்தி, அது அதி உயர்ந்த (வரேண்யம்) பாவங்கள் அற்ற (பர்கோ) தெய்வ சக்தி (தேவஸ்ய. இத்தகைய தெய்வ சக்தியினை நான் என்னுள் ஈர்த்து எனது ஆன்மா அத்தகைய சக்தியினை, குணத்தினை, வல்லமையினை அடைகிறது. இதனால் எனது அறிவு சுத்தமடைகிறது. தெய்வ குணங்களும் சக்திகளும் என்னுள் வளர்கின்றது, நான் தெய்வமாகவே மாறிவிட்டேன்.


இந்த‌ பாவ‌னையினை "த‌த் ஸ்விதுர் வ‌ரேண்ய‌ம் ப‌ர்கோ தேவ‌ஸ்ய‌ தீம‌ஹி" வ‌ரியினை உச்ச‌ரித்து பாவிக்க‌வும்.

மூன்றாவ‌து பாவனை: 
தெய்வ‌ ச‌க்தி எம‌து அறிவினை தூண்ட‌ட்டும், அத‌னால் பெறும் ஞான‌ம் எம்மை ச‌ரியான‌ வ‌ழியில் ந‌ட‌த்த‌ட்டும். எம‌து புத்தி, என‌து குடும்ப‌த்த‌வ‌ர‌து புத்தி, என்னைச் சார்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள‌து புத்தி ஆகிய‌வ‌ற்றை இந்த‌ தெய்வ‌ ச‌க்தி தூய்மைப்ப‌டுத்தி அனைவ‌ரையும் ச‌ரியான‌ வ‌ழியில் ந‌டாத்த‌ட்டும். ச‌ரியான‌ ஞான‌த்தினைப் பெறுத‌லே உல‌கில் உண்மையான‌ இன்ப‌த்தினைப் பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழி, இத‌ன் ப‌ய‌னாக‌ பூவுல‌கிலேயே இன்ப‌ம‌யமான‌ வாழ்வினை பெறுகிறோம்.


இத‌னை 'தியோ யோ ந‌ ப்ர‌சோத‌யாத்" என்ற‌ வ‌ரியினை உச்ச‌ரிக்கும் போது பாவிக்க‌வும்.

இந்த‌ பாவ‌னைக‌ளை செய்யும் போது மெதுவாக‌ ம‌ன‌தில் அவ‌ற்றை உருவ‌க‌ப்ப‌டுத்து உண்மையிலேயே உல‌க‌ம் அப்ப‌டி மாறுவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும்.

முத‌லாவ‌து பாவ‌னையினை செய்யும் போது இறைவ‌ன‌ மூன்று உல‌க‌ங்க‌ளான‌ பூமி, சொர்க்க‌ம், பாதாள‌ உல‌க‌ங்க‌ளில் இறைச‌க்தி ப‌ர‌வுவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ உல‌க‌ங்க‌ளில் காண‌ப்ப‌டும் வெப்ப‌ம், ஒளி, ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள், ம‌ண், ஆகாய‌ம் என்ப‌வ‌ற்றில் இறைவ‌ன் நிறைந்துள்ள‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ பிர‌ப‌ஞ்சமே இறை ச‌க்தியால் நிர‌ம்பி உள்ள‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இறைவ‌ன‌து ம‌டியில் தான் இருப்ப‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ நிலையில் த‌ன்னை எந்த தீய‌ ச‌க்திக‌ளும் பாதிக்காது என்ப‌த‌னை உண‌ர‌வேண்டும்.

இர‌ண்டாவ‌து பாவ‌னையில் த‌ன‌து இஷ்ட‌ தெய்வ‌ம் த‌ன‌து இத‌ய‌த்தில் இருப்ப‌த‌னை உண‌ர‌ வேண்டும். இஷ்ட‌ தெய்வ‌த்தினை விள‌க்கு சுட‌ராக‌ அல்ல‌து க‌ண‌ப‌தி, அம்பாள், இராம‌ன்,கிருஷ்ண‌ன் என‌ விரும்பிய‌ உருவில் பாவித்து இத‌ய‌த்தில் இருத்த‌ வேண்டும். காய‌த்ரி மாதாவின் உருவினை இருத்தி தியானிப்ப‌து மேலும் ப‌ய‌ன‌ளிக்கும். அது முழுமையான‌ தெய்வ‌ ச‌க்தி விழிப்பையும் ஞான‌த்தினையும் கொடுக்கும்.

மூன்றாவ‌து பாவ‌னையில் காய‌த்ரி மாதாவின் தெய்வ‌ ச‌க்தி எம‌து புத்தி உண‌ர்ச்சிக‌ளில் ப‌ர‌வி அவ‌ற்றை தெய்வ‌ ச‌க்தியுடைய‌தாக்குவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இத‌னால் புத்தி ந‌ல்வ‌ழிப்ப‌ட்டு ச‌ரியான‌ வ‌ழியில் செல்ல‌ ஆர‌ம்பிக்கும். இத‌ன் ப‌ய‌னாக‌ வாழ்வின் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு ச‌ரியான‌ தீர்வினை காணும் ஆற்ற‌ல் உண்டாகும்.

இந்த‌ மூன்று பாவ‌னைக‌ளின‌தும் ப‌ல‌ன் சாத‌க‌ன் இந்த‌ சாத‌னை ஆர‌ம்பித்து சிறிது கால‌த்திலேயே எல்லாவித‌ தீய‌ எண்ண‌ங்க‌ளிலுமிருந்து விடுப‌ட்டு ந‌ற்காரிய‌ங்க‌ளில் த‌ன‌து ம‌ன‌தினை செலுத்த ஆர‌ம்பிப்பான். இத‌ன் மூல‌ம் அந்த‌ சாத‌க‌ன் இறைவ‌னை அடையும் பேரின்ப‌ பாதையில் இல‌குவாக‌ ப‌ய‌ணிக்க‌ ஆர‌ம்பிப்பான்.

Friday, September 21, 2012

காயத்ரி மந்திரத்தின் உள்ளார்ந்த பொருளும் தியான சாதனையும்

 
 
காயத்ரிமந்திரத்தினை சிலர் வெறும் சூரியனை நோக்கிய பிரார்த்தனை மந்திரமெனவே கருதி வருகின்றனர். உண்மையில் அது ஒளியான பரம்பொருளை குறிக்கும் பிரார்த்தனை, அத்துடன் பிரார்த்தனை மட்டுமல்ல அதன் சொல் அமைப்புகளும் ஒலியமைப்புகளும் மந்திர சாஸ்திரத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியின் ஒலிஅதிர்வுகளை ஜெபிப்பவர்கள் உடலிலும் மனதிலும் உருவாக்கும் வண்ணம் ரிஷிகள் ஒழுங்கமைத்திருக்கிறார்கள். ஆக அது பிரார்த்தனை மந்திரமாக இருக்கும் அதேவேளை பிரபஞ்ச மஹாசக்தியை ஆகர்ஷிக்கும் மந்திரமாகவும் இருக்கின்றது என்பது தனிச் சிறப்பு.
  
அதன் மூலக்கருத்து ஞானத்தினை அடைவதியே வலியுறுத்துகிறது, புத்தி ஞானத்தினை அடைந்தால் வாழ்க்கையின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் உண்டாகின்றது. காயத்ரிமந்திரத்தின் மூலக்கருத்தும் அதை ஜெபிப்பதால் உண்டாகும் தெய்வ சக்தியும் இந்த ஆற்றலை சாதகனில் ஏற்படுத்துகிறது. ஆக இது ஒரு கண்மூடித்தனமான விளக்கமற்ற மத வழிபாடல்ல! மந்திர அலைகளால் உருவான சக்தி சாதகனின் மனப்பரிணாமத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி ஞானத்தினை தந்து அதனூடாக சாதகனது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழி முறையே காயத்ரி சாதனையாகும்.

இனி காயத்ரி மந்திரத்தினை பார்ப்போம்

ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரசோதயாத்

இனி இவற்றின் உள்ளர்த்ததினைப் பார்ப்போம்;

  • ஓம்: பிரம்மம்
  • பூர்: பிராணன்
  • புவ: துன்ப‌த்தினை அழிக்கும் ச‌க்தி
  • ஸ்வ‌ஹ‌: இன்ப‌த்தினை த‌ரும் ச‌க்தி
  • த‌த்: அது
  • ஸ‌விது:சூரிய‌னைப் போன்று பிர‌காச‌மான‌
  • வ‌ரேண்ய‌ம்: சிற‌ந்த‌
  • ப‌ர்கோ: பாவ‌ங்க‌ளை அழிக்கும்
  • தேவ‌ஸ்ய‌:::  தெய்வ‌ ச‌க்தி
  • தீம‌ஹி: என்னுள் உறைய‌ட்டும்
  • தியோ: புத்தி
  • யோ: யார்?
  • ந‌:: எங்க‌ள்
  • ப்ர‌சோத‌யாத்: தூண்ட‌ட்டும்

சுருக்க‌மாக‌, எல்லாம் வ‌ல்ல‌ இறை ச‌க்தியே, பிர‌ப‌ஞ்ச‌த்தினை ப‌டைத்த‌ ம‌ஹாச‌க்தியே, எம‌து வாழ்விற்கு ஆதார‌மான‌ ச‌க்தி எதுவோ அது எம‌து துன்ப‌ங்க‌ளை நீக்கி, இன்ப‌த்தினை அளித்து அத‌னுடைய‌ தெய்வ‌ ச‌க்தி எங்க‌ளில் உறைந்து அத‌ன் மூல‌ம் எங்க‌ள் புத்தி தூண்ட‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌ வ‌ழியில் சென்று ச‌ரியான‌ ஞான‌த்தினை பெறுவோமாக‌ என‌ பொருள் ப‌டுகிற‌து.

எந்த‌ ஒரு ம‌னித‌ன் காய‌த்ரி மந்திர‌த்தினை ஜெபித்து இந்த‌ அர்த்த‌த்தினை ம‌ன‌தி பாவ‌னை மூல‌ம் நிலை நிறுத்துகிறானோ அவ‌ன் ப‌டிப்ப‌டியாக‌ இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ ச‌க்தியினை த‌ன‌து மன‌திலும் உட‌லிலும் ஆக‌ர்ஷிக்கும் ஆற்ற‌லைப்பெறுகிறான்.

அடுத்த‌ ப‌திவில் ம‌ன‌த்திரையில் இந்த‌ ப‌வ‌னையினை எப்ப‌டி செய்வ‌து என்ப‌து ப‌ற்றி விரிவாக‌ப் பார்ப்போம்.

Thursday, September 20, 2012

காயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் (பகுதி 02)

பகுதி 01 இனை படிக்க இங்கே அழுத்தவும்

  • அனுஷ்டான சாதனையின் போது பிரம்மச்சரியம் இருத்தல் அவசியம், இல்லறத்தவர்கள் 15 நாட்களுக்கொருமுறை இல்லறத்தில் ஈடுபடலாம்.
  • கீழ்வரும் ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது மனதினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவும்; சாத்னை காலத்தில் மற்றவரைக்கொண்டு சாதகன் தலைமுடி வெட்டிக்கொள்வது, சவரம் செய்துகொள்வதை தவிர்க்க வேண்டும், தானகவே சவரம் செய்துகொள்ளலாம்; வெறும் தரையில் நித்திரை செய்ய வேண்டும்; உணவு முடியுமானால் ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும், மற்ற வேளைகளில் பழங்கள், பால் என்பன உண்ணலாம்; தனது வேலைகளை தனே செய்து கொள்ளவேண்டும், மற்றவர்கள சாதகனது உடலை, உடைகளை தொடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இவை மிக மிக முக்கியமானவை அன்று, ஆனால் கடைப்பிடிதால் உடலிலும் மனதிலும் ஜெபசக்தியினை அதிகளவு சேர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
  • ஜெபமாலையின் நடுவில் மேரு மணி இருக்கும், ஜெபம் பூர்த்தியாகும் போது அந்த மணியினை கடந்து செல்லக்கூடாது. மாலையினை திருப்பி அடுத்த மாலை ஜெபத்தினை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜெப முடிவிலும் மேரு மணியினை கண்களிலும் நெற்றிப் பொட்டிலும் வைத்து மறுபுறமாக திருப்ப வேண்டும். இப்படி செய்யும் போது ஆக்ஞா சக்கரத்தினுள் எமது ஜெப சக்தி இழுத்துக்கொள்ளப்படும்.
  • ஜெப‌மாலை, ய‌ந்திர‌ங்க‌ள், சாதனை பொருட்க‌ளை சாத‌க‌ன் த‌விர்ந்த‌ வேறு ந‌ப‌ர்க‌ள் தொட‌க்கூடாது.
  • காய‌த்ரி சாத‌னை எந்த‌ வித‌த்திலும் தீமை ப‌ய‌க்காத‌து. ஆத‌லால் யாவ‌ரும் ப‌ய‌மின்றி செய்ய‌லாம். ந‌ன்மையினை ம‌ட்டுமே த‌ர‌வ‌ல்ல‌து. இந்த‌ நிப‌ந்த‌னைக‌ளை க‌டைப்பிடிப்ப‌தால் ந‌ன்மைக‌ள் அதிக‌மாக‌வும், துரித‌மாக‌வும் கிடைக்கும்.
  • ம‌ந்திர‌ம் ச‌ரியாக‌ ப‌ய‌ன‌ளிக்க‌ அத‌னை ச‌ரியான‌ உச்ச‌ரிப்புட‌ன் கூறுவ‌து அவ‌சிய‌மாகும். காய‌த்ரி ம‌ந்திர‌த்தில் அந்த‌ உச்ச‌ரிப்பு பிழையானாலும் ப‌ல‌த‌ட‌வை முய‌ற்சிக்க‌ தேவியின் அருளால் ச‌ரியான‌ உச்ச‌ரிப்பினை அறிந்துகொண்டு ப‌ய‌ன்பெறும் ஆற்ற‌லை த‌ருவாள்.
  • ஒருமுறை காய‌த்ரி சாத‌னை முய‌ன்று விருப்ப‌த்துட‌ன் செய்து விட்டீர்க‌ள் என்றால் உங்க‌ள் ம‌ன‌து அத‌ன் ப‌ய‌ன் க‌ண்டு மீண்டும் மீண்டும் செய்ய‌த்தூண்டும். இத‌ன் ப‌ய‌னாக‌ ப‌டிப்ப‌டியாக‌ உங்க‌ளில் ஞான‌ வ‌ள‌ர்ச்சியும், ஆன்ம‌ வ‌ள‌ர்ச்சியும் ஏற்ப‌டும். ஆத‌லால் எப்ப‌டியாவ‌து இல‌ட்சிய‌த்துட‌ன் ஒரு அனுஷ்டான‌த்தினை பூர்த்தி செய்ய‌ முய‌லுங்க‌ள். அதாவ‌து 125 000 ஜெப‌த்தினை பூர்த்தி செய்த‌ல் ஒரு அனுஷ்டான‌ம் என‌ப்ப‌டும்.
  • இப்ப‌டி ஒரு அனுஷ்டான‌ம் பூர்த்தியான‌ பின்ன‌ர் உங்க‌ள் ம‌ன‌தில் பெரும் மாற்ற‌ம் ஏற்ப‌ட்டிருப்ப‌தை உண‌ர்வீர்க‌ள், ம‌ன‌ம் அன்பு, க‌ருணை, உற்சாக‌ம் போன்ற‌ உண‌ர்வுக‌ளால் நிர‌ம்பி இருப்ப‌தையும், எந்த‌வொரு சிக்க‌லான‌ பிர‌ச்ச‌னைக்கும் நொடியில் தீர்வு காணும் ஆற்ற‌லும் உண்டாகும்.
  • இந்த‌ சாத‌னையினை செய்வ‌த‌ற்கு ஜாதி, ம‌த‌ம், பால், வேற்றுமை, ச‌மூக‌ வேற்றுமை எதுவுமில்லை. யாருக்கு ம‌ன‌தில் விருப்ப‌ம் இருக்கிறதோ அவ‌ர்க‌ள் குருவ‌ருளுட‌ன் தொட‌ங்கி ப‌ய‌ன் பெற‌லாம். இறைவ‌ன் நீர் நில‌ம், காற்று என‌ இய‌ற்கையினை அனைவ‌ருக்கும் பொதுவாக‌த்தான் கொடுத்திருக்கிறான், அதுபோல் பிர‌ப‌ஞ்ச‌ ச‌க்தியான‌ காய‌த்ரியும் அனைவ‌ருக்கும் பொதுவான‌ ஒன்றே! ஆத‌லால் ஆர்வ‌முடைய‌ எவ‌ரும் இத‌னை ஜெபிக்க‌லாம்.
  • இடைக்கால‌த்தில் இந்த‌ அரிய‌வித்தை ஞான‌ம் ஒரு வ‌குப்பாரிற்கு ம‌ட்டும் உரிய‌து என‌ ம‌றைக்க‌ப்ப‌ட்டு பெண்க‌ள் ஜெபிக்க‌க‌கூடாது என்று சுய‌ந‌ல‌மாக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ற்றில் எந்த‌வித‌ உண்மையும் இல்லை, காய‌த்ரி ம‌ந்திர‌த்தில் வ‌ண‌ங்க‌ப்ப‌டும் தெய்வ‌மே பெண்ணாக‌ இருக்கும் போது எப்ப‌டி பெண்க‌ள் ஜெபிக்க‌க்க‌ கூடாது என்று சொல்ல‌லாம். பெண்க‌ள் தாராளாமாக‌ ஜெபிக்க‌லாம். இந்த‌ சாத‌னையினை செய்ய‌லாம். இத‌னால் ந‌ல்ல‌ ஒழுக்குமும் அறிவும் உடைய‌ ச‌மூக‌ம் மிளிரும்.
  • காய‌த்ரி சாத‌னை என்ப‌து ஒரு ம‌னித‌னின் அடிப்ப‌டை உரிமை, அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ன்மை பெறுவ‌து அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்தினை பொறுத்த‌து. ஆக‌வே அனைவ‌ரும் காய‌த்ரி சாத‌னை செய்ய‌ குருதேவ‌ரை பிரார்த்திக்கிறோம்.
  • மேலும் காய‌த்ரி சாத‌னை ப‌ற்றிய‌ ப‌திவுக‌ள் சாத‌னை புரிய‌ விரும்பும் சாத‌க‌ர்க‌ளுக்காக இந்த வலைப்பதிவில் வெளியிட‌ப்ப‌டும்.

Wednesday, September 19, 2012

காயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் (ப‌குதி 01)


இந்த பிரபஞ்சம் ஓர் ஒழுங்குமுறைக்கேற்பவே இயங்கி வருகிறது, ஆன்மீகம், சூஷ்ம சாதனைகள் புரிய விரும்புபவர்கள் அந்த நியதிக்கேற்ப்ப தம்மை ஒத்திசைய (Harmoney) வைத்துக்கொண்டால் மட்டுமே அவர்களால் தமது முயற்சியில் வெற்றியடைய முடியும். அதனால் காயத்ரி சாதனையின் போதுகடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள பற்றி இங்கு கூறுகிறோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தால் அனைத்தையும் கடைப்பிடிக்கமுடியாவிட்டால் இயன்றளவு கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால் பலன் முழுமையாக கிடைக்கும் அன்றி தவறுவதால் துன்பங்களோ, பிழைகளோ நடந்துவிடாது. ஆகாயால் பயம் இன்றி நீங்கள் சாதனை செய்யலாம், காயத்ரி அறிவின் தாய், தாய் ஒரு நாளும் உங்களுக்கு தீங்கு செய்யமாட்டாள், தனது அன்பால் திருத்தி நல்வழிப்படுத்துவாள். அதுபோல் உங்கள் சாதனையில் உபாசனையில் பிழை இருப்பினும் மெது மெதுவாக உங்களில் அறிவில் அவள் அருள் காந்த சக்தியினை செலுத்தி மெது மெதுவாக உங்களை சரியான பாதையில் செலுத்துவாள்.

எமது வாழ்க்கையின் அனுபவம் என்பது மனதின் வழியே நடக்கிறது, மனமே இன்பத்திற்கும் துன்பத்தினையும் அனுபவிக்கும் காரணி. அதுபோல் எந்த தெய்வ சக்தியினையும், உயர்ந்த ஆற்றலையும் பெறுவதற்கும் மனதே தேவை.மனமே காயத்ரி மந்திர சக்தியின் மூலம் தெய்வசக்தியினை ஆகர்ஷிக்கின்றது. இது நமது எண்ணங்கள் மூலம் நடைபெறுகிறது. ஆக தெய்வ சக்தியினை ஆகர்ஷிக்க விரும்புவபர்கள் நல்ல எண்ணங்களை எண்ணுவதற்கு பழகிகொள்ளவேண்டும்.

நம்பிக்கைதான் (faith)  வாழ்க்கை என்பது பொதுவாக கூறப்படும் வார்த்தை, இது சாதனைக்கும் பொருந்தும். நம்பிக்கை இன்றி செய்யப்படும் எதுவும் முழுமையாக பயன் அளிப்பதில்லை. நம்பிக்கை என்பது ஆழமான ஒரு உணர்வு. மனதின் ஆற்ற்லை ஒரு விடயத்தில் குவிக்கும் குவிவு ஆடி (lence) போன்ற சாதனம். ஆகவே செய்யும் செயலில் ஆழமான நம்மிக்கை இருக்கவேண்டும்.

மற்றைய சாதனைகளினை விட காயத்ரி சாதனையின் சிறப்பு என்னவேன்றால் நீங்கள் மனத்தூய்மை இன்றி நம்பிக்கை இன்றியும் காயத்ரி ஜெபித்தாலும் அந்த மந்திர அலைகளின் மூலம் மனம் தூய்மையாக்கப்பட்டு உங்களில் அந்த பண்பு வளர்க்கப்படும். அதாவது சாதனையின் ஆரம்ப கால சக்தி உங்கள் மனதினை, பஞ்ச கோசங்களை தூய்மைப்படுத்த பயன்படுத்தி அந்த தகுதியையும் கொடுக்கும்.  இதற்கான  ப‌ய‌ன்பெறுவ‌த‌ற்கான‌ கால‌ம் அதிக‌மாகும்.
இனி கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளை பற்றி கூறுவோம்.
  1. உடல் சுத்தமாக இருக்கவேண்டும், குளித்து சுத்தமான ஆடை அணிந்து சாதனையில் அமரவேண்டும். அப்படி முடியாத சமயத்தில் கை, கால் அலம்பி முகத்தினை கழுவிக்கொண்டும் அமரலாம். ஆக முடியாத காலத்தில் உடலினை ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டு சாதனையில் அமரலாம்.
  2. உடலை தளர்வாகவைத்திருக்க கூடிய ஆடகளையே சாதனையின் போது அணியவேண்டும். இறுகிய காற்சட்டைகள், காலணி அணிந்து செய்யக்கூடாது. குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள் சால்வையால் உடலை போர்த்திக் கொள்ளலாம்.
  3. சாதனை செய்வதற்கு அமைதியான் சுத்தமான இடமொன்றினை தேர்ந்தெடுக்க வேண்டும். இவை புனித தலம், ஆற்றங்கரை, பூந்தோட்டம் போன்றவையாக இருக்கலாம். அல்லது வீட்டின் ஒரு மூலையில் அமைதியான தனியிடம் ஒதுக்கி கொள்ளவேண்டும்.
  4. சாதகன் பத்மாசன நிலையிலோ, அர்த்த பத்மாசனம், சுகாசனம் போன்ற நிலைகளில் அமர்ந்து கொள்ளலாம். அப்படி கால் மடித்து அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொள்ளலாம்.
  5. எப்படியாயினும் அமரும் போது முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும். இது மிக அவசியமான ஒன்றாகும், ஏனெனில் சாதனையின் போது பிராண ஓட்டம் அதிகரிக்கும், அது தடைப்படாமல் உடல் முழுவதும் பரவ ஏதுவாக முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்.
  6. சாதனையின் போது உடல் வெறும் தரையுடன் தொடர்பு கொள்ளும் படி இருக்க கூடாது. இது உடலின் பிராண சக்தி ஓட்டத்தில் தடங்கல்களை ஏற்படுத்தும், ஆதலால் வெள்ளை அல்லது மஞ்சள் நிற பருத்தி துணியினையோ அல்லது தர்ப்பை பாயினையே ஆசனமாக இட்டுக்கொள்ளவேண்டும்.
  7. ஜெபத்திற்கு நூற்றூ எட்டு மணிகொண்ட துளசி அல்லது சந்தனம் அல்லது படிக ஜெபமாலை ஒன்று பாவிக்கலாம்.
  8. ஜெபம் சூரியோதயத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக அதாவது பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை 04.00 மணீயிலிருந்து 06.30 இற்குள் செய்யவேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் செய்யவேண்டும்.
  9. தகுந்த பலனைப்பெற குறைந்தது ஒரு மாலை அதாவது 108 தடவை ஜெபம் செய்வது அவசியமாகும். அதிகம் செயவதும் நன்மை பயக்கும், ஆனால் ஒவ்வொரு நாளும் சம அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  10. சாத‌னையினை தொட‌ங்க‌ முன்ன‌ர் ஒரு சாத‌னா குருவினை (யார் இந்த‌ காய‌த்ரி சாத‌னையினை செய்து ப‌ய‌ன்பெற்ற‌ ஒருவ‌ர்) தொட‌ர்புகொண்டு த‌ன‌து சாத‌னைங்குவ‌தற்கான‌ முறையினை கேட்ட‌றித‌ல் வேண்டும். பின்ன‌ர் அவ‌ர‌து வ‌ழிகாட்ட‌லில் சாத‌னையினை தொட‌ர்வேண்டும். இந்த‌ விட‌ய‌த்தில் எம‌து வ‌லைத்த‌ள‌த்துட‌ன் தொட‌ர்பு கொண்டு ஆலோச‌னை பெற‌லாம்.
  11. ஜெப‌த்தின் போது காலையில் கிழ‌க்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும் அம‌ர்ந்து செய்ய‌வேண்டும்.
  12. ஒரு ஆச‌ன‌த்தில் இருந்து ஜெப‌ம் செய்யும் போது கால் வ‌லி, மேல் வ‌லி ஏற்ப‌டின் ஆச‌ன‌த்தினை மாற்றி த‌ம‌க்கும் வ‌ச‌தியான் ப‌டி‌ இருந்து செய்ய‌வேண்டும்.
  13. ஜெப‌த்தின் இடையில் ஏதாவ‌து த‌ட‌ங்க‌ல் (உதார‌ண்மாக‌ மல‌ ச‌ல‌ம் க‌ழிக்க‌ வேண்டிய‌ உண‌ர்வு, வேறு தேவைக‌ளுக்காக‌) கார‌ண‌மாக‌ எழும்ப வேண்டி வ‌ந்தால் மேல‌திக‌மாக‌ ஒரு மாலை ஜெப‌ம் செய்ய‌ வேண்டும்.
  14. சாத‌னையின் போது தொட‌ர்ச்சி இருத்த‌ல் வேண்டும். குறைந்த‌து ஆர‌ம்ப‌த்தில் 48 நாட்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ செய்ய‌வேண்டும். இடையில் ஒருநாள் ஜெப‌ம் செய்ய‌ முடியாம‌ல் போனால் அடுத்த‌ நாள் அதே அள‌வு அதிக‌மாக‌ செய்து தொட‌ர‌வேண்டும்.
  15. பொதுவாக‌ வீட்டில் ஏதும் தீட்டு விட‌ய‌ங்கள் (மரணம் பிறப்பு) ந‌டைபெறும் போது மாலை கொண்டு முறையான‌ உபாச‌னை இன்றி மான‌சீக‌ ஜெப‌ம் செய்ய‌வேண்டும். மான‌சீக‌ ஜெப‌ம் செய்வ‌த‌ற்கு எதுவித‌ நிப‌ந்த‌னைக‌ளும் இல்லை.
  16. ஏதாவ‌து அவ‌ச‌ர‌ தெய்வ‌ உத‌வி தேவைப்ப‌டின், அல்லது எதிர்பாராத துர்சம்பவங்கள் நடந்தால், அல்லது அவற்றை தடுக்க‌ முழுமையான‌ அனுஷ்டான‌த்தின் மூல‌ம் சாதிக்க‌லாம். முழுமையான‌ அனுஷ்டான‌ம் என்ப‌து தொட‌ர்ச்சியாக‌ ஒரு ல‌ட்ச‌த்து இருப‌த்தி ஐயாயிர‌ம் ஜெப‌ம் முடிப்ப‌தாகும், இதை 48 நாட்க‌ளுக்குள் முடிப்ப‌து துரித‌ ப‌ல‌னைத்த‌ரும்.
  17. தொட‌ர்ச்சியான‌ நீண்ட‌ ப‌ய‌ண‌ங்க‌ள் செய்யும் போதோ, நோயுற்றிருக்கும் போதோ புற‌ச்சுத்த‌ம்  ப‌ற்றி அதீத‌ க‌ட்டுப்பாடு தேவையில்லை, மான‌சீக‌ ஜெப‌ம் மட்டும் செய்ய‌லாம் .
  18. உண‌வில் மாமிச‌ங்க‌ளை த‌விர்க்க‌ வேண்டும், அதிக‌ கார‌ம், புளிப்பு சுவையுடைய‌ த‌ம‌ஸிக‌ உண‌வுக‌ளை த‌விர்க்க‌ வேண்டும். எளிய‌ சைவ‌ உண‌வுக‌ள் ம‌ட்டுமே உண்ண‌ வேண்டும். மாமிச‌ உண‌வுக‌ள் உண்ப‌தால் த‌வ‌று கிடைக்கும் ப‌ல‌னின் அள‌வு குறைவாக‌ கிடைக்கும்.  ` 
அடுத்த‌ ப‌திவில் தொட‌ரும்...

ஸத்குருபாத‌ம் போற்றி!

Tuesday, September 18, 2012

காயத்ரி சாதனைக் குறிப்புகள் - பகுதி 01


காயத்ரி மந்திரமானது பாரத ரிஷிகள் மக்களுக்கு கொடுத்த பெரும் செல்வம், இதனை குறித்த ஒரு வகுப்பினருக்கு மாத்திரமுரியது என்று வரலாறுகள் திரித்து சாதாரண பாமர்களுக்கு கிடைக்கமுடியாதபடி செய்யப்பட்டு வந்தது. மதம் அரசியலானதன் விளைவு இந்த அரிய விடயம் தமிழ் மக்களால் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அகஸ்தியமகரிஷியிடம் வித்தை கற்று 108 வருடங்கள் இந்த பூவுலகில் வாழ்ந்து கண்ணைய யோகியார் தன்னை அண்டி வந்த சாதகர்களுக்கு சித்தர் முறைப்படி சாபவிமோசனம் செய்வித்து காயத்ரி தீட்சை செய்வித்து வந்தார். அந்த வகையில் எமது குருநாதர் இலங்கையில் சாதாரண தோட்டத்தொழிலாளி ஒருவரின் மகனாக பிறந்து ஆன்ம தாகம் கொண்டு குருவைத்தேடி அலைந்த போது அவரை ஆட்கொண்டு காயத்ரி தீட்சை அளித்து குப்தவித்தையாக வைக்கப்பட்டிருந்த இரகசியங்களை உலகமக்கள் அறிந்துகொள்ளும்படி கற்பிக்கும் படி குரு இட்ட ஆணைப்படி, தன்னை அண்டி வந்த சாதகர்களுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்து வந்தார், அவர் காயத்ரி சாதனையில் சித்தி பெற்றமையினால் காயத்ரி சித்தர் எனவே அழைக்கப்பட்டு வந்தார்.

இதுபோல் ரிஷிகளால் இந்த உலகிற்கு இவை கிடைக்கவேண்டிய காலப்பகுதியில் அவற்றை வெளிப்படுத்த தகுந்த ஆட்கள் மூலம் அவற்றை வெளிப்படுத்தியே வருகின்றனர்.

ஹரித்துவாரில் சாந்திகுஞ் எனும் நகரில் காயத்ரி சாதனையினை விஞ்ஞான முறைப்படி நிருபணத்துடன் இலவசமாக கற்பித்து வருகிறார்கள். இதன் நிறுவனர் பண்டிட், ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் காயத்ரி மந்திரத்தின் அனைத்து உண்மைகளையும் உலக மக்கள் அறியும் வண்ணம் வெளியிட்டுள்ளார்கள்.

எமது வலைப்பின்னல் தமிழ் மக்கள் இந்த உண்மைகளினை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக காயத்ரி சாதனை பற்றி எமது கற்கையிலும், சேகரிப்பிலும், தேடலிலும், குருமுகமாய் அறிந்த விடயங்களை தொகுத்து காயத்ரி சாதனை என்ற தொடராக வெளியிட முயல்கிறோம்.

இவற்றை எழுதுவதற்கான நேர அவகாசம் தர எல்லாம் வல்ல குருவருளை பிரார்த்திக்கிறோம்.

Monday, September 03, 2012

தெய்வ உபாசனை செய்வது எப்படி? - அறிவியல் விளக்கம்

பொதுவாக தெய்வத்தினை வணங்குவது பகுத்தறிவுக்கு ஒவ்வாது, பக்திமார்க்கம் இளகிய மக்களின் மனதினை வசப்படுத்தும் ஒரு உத்தி என தெய்வ வழிபாட்டினை ஒதுக்குவோர் பலர் உள்ளனர். அதுபோல் பல வருடங்கள் தெய்வத்தினை வணங்கி ஒருபயனும் பெறாதோர் பலர் விரக்தி உற்று வணங்காமல் விட்டு விடுகின்றனர். ஒரு சிலர் சிவவாக்கியர் பாடல்களை எடுத்து வைத்துக்கொண்டு புறவழிபாடு தேவையில்லை அக வழிபாடு மட்டும்தான் சித்தர்கள் கூறியுள்ளார்கள் என வாதிடுவர். இந்தக் காலகட்டத்தில் மேற்கூறிய கருத்துக்களை மறுப்பதற்கில்லை. குருதத்துவத்தினை என்பது முற்றாகவே தவறாக பிரச்சார உத்தியாக்கப்பட்டு, தனிமனித வழிபாடாக்கி மதிமயங்கி மயக்கமுற்று திரிவோர் பலர், இன்றைய காலகட்டத்தில் தெய்வ வழிபாடு, பூஜை, கோயில், ஆசிரமம் என்பனவெல்லாம் பணம் சேர்க்கும் படோபமான இடங்கள் ஆகிவிட்ட நிலையில் மக்கள் மனதில் விரக்தியும், ஏக்கமுமே மிஞ்ச்சி நிற்கின்றன. 

அது சரி இத்தனையும் வகுத்தவர்கள் எமது முன்னோர்களே, இவ்வளவற்றையும் ஒருவித பிரயோசனம் ஏதும் இல்லாமலா செய்துவைத்தார்கள்? என்பதும் வலுவான கேள்வி. இதற்கு சரியான பதிலே மக்கள் மனதில் உள்ள இந்த நிலையினை ஆற்றக்கூடியது. அந்த வகையில் தெய்வ வழிபாடு, கோயில் என்பவற்றின் தத்துவத்தினை விளங்க முற்படுவோம். 

எமது முன்னைய பதிவுகள் பலவற்றில் விளக்கியுள்ளோம், மனிதனின் அடிப்படை மனம், பிராணன், உடல் என்ற இந்த மூன்றும்தான். நாம் எதைச் செய்தாலும் இந்த மூன்றையும் உபயோகித்துதான் செய்கிறோம். எமது முன்னோர்கள்/சித்தர்கள் மனிதன் பெறவேண்டிய அடிப்படை கல்வி என்பது ஒருவன் தன்னை அறிதலே ஆகும் என எண்ணி அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார்கள். அதாவது வெளியில் உள்ள அண்டத்தினை அறியவேண்டுமானால் முதலில் தன்னில் உள்ள பிண்டத்தினை அறியவேண்டும் என்பதற்கான வழிமுறைகளே இந்த தெய்வ உபாசனை/வழிபாடு, கோயில் வழிபாடு. பொதுவாக எந்த உயரிய விதியும் சரியாகவும் பயன்படுத்தலாம், பிழையாகவும் பயன்படுத்தலாம். இது விஞ்ஞானத்திற்கும் பொருந்தும், மெய்ஞ்ஞானத்திற்கும் பொருந்தும். ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சக்தி சமன்பாடு இன்று உலகை அழிக்கவல்ல அணுகுண்டாகவும் உருவாகியுள்ளது, அதே நேரம் மின் உற்பத்தி முதற்கொண்டு பல பிரயோசனமான பௌதீக சக்திகளை விளங்கிக்கொள்ளவும் பயன்படுகிறது. இதே கதிதான் எமது சித்தர்கள் உருவாக்கிய தெய்வ வழிபாடுகள், கோயில் வழிபாட்டு முறைகளுக்கும் நடந்தது. அதாவது பிழையான பிரயோகங்களின் விளைவே முதற்பந்தியில் கூறிய நிலையின் காரணமாகும். 

சரி பீடிகை ஏதுமில்லாமல் தெய்வ வழிபாட்டின், கோயில் வழிபாட்டின் உண்மைத்தத்துவம் என்னதான் என்று சொல்லிவிடுங்கள் எனக்கூறுகிறீர்கள் அல்லவா! அதன் சுருக்கம் வருமாறு;

அனைத்து தெய்வவழிபாடுகளும் ஆழ்மனது மூலம் தெய்வ சக்தியினை தொடர்புகொள்ளும் செயல்முறைகளே. பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் அனைத்தும்  மனிதனின் மனம் மூலமே செயற்படுகிறது. 

இந்த செயற்பாடு இயற்கையாக அமைந்த அளவில் இருக்கும் போது சீரான வாழ்க்கையினையும் அல்லாத போது துன்பத்தினையும் அனுபவிக்கிறோம். ஆக இந்து மதத்தில் ஏன்  பலகடவுள்கள் உள்ளார்கள் என்பதற்கும் இதுவே விளக்கம். ஒவ்வொரு சக்தியினையும் மனதினை ஒருமைப்படுத்த வல்ல வகையில் உருவமைத்து உள்ளனர். 

ஒரேகடவுளை வணங்குபவர்கள் எப்படி நன்மை பெறுவது? பலவித பிரார்த்தனை மூலம்,  தமக்கு வேண்டியவற்றை தகுந்த கருத்து வாக்கியங்களை அமைத்துக்கொண்டு  ஆழ்மனதினை செயற்படுத்தி பயன் பெறலாம். 

அப்படியானால் மனச்சக்தி மட்டும்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ளதா ? என்ற கேள்வி எழலாம் . அதற்கு பதில் அலை வேகம் கூடிய பிரபஞ்ச மனச்சக்தியினையே  தெய்வ சக்தி என்கிறோம். அவற்றை ஈர்க்கும் செயன்முறையே தெய்வ உபாசனையும் அவற்றின் மற்றைய வடிவங்களும்.  அதாவது மனிதமனம் அத்தகைய உயர் சக்திகளை ஈர்த்து அறியகாரியங்களைசெய்ய வல்லது.

இத்தகைய அரிய உண்மைகள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு பிற்காலத்தில் மதம் சமயம் என்பன ஒரு அதிகார அலகாக  மற்றப்பட்டதன் விளைவே இன்றைய சமூகத்தின் நிலையாகும். 

Sunday, September 02, 2012

கும்பகப் பிரணாயாமத்தின் அவசியம்

இன்று யோகம் பயில்பவர்கள் பலர் பிரணாயாம பயிற்சியின் முக்கியத்துவம் அறிந்து அதனை பயிலவேண்டும் என்ற பெரும் ஆவலினால் புத்தகங்களை வாசித்து செய்யத் தொடங்கி விடுகிறார்கள். அதிலும் எல்லா நூற்களிலும் கும்பகப் பிரணாயாமம் செய்தால்  பல சித்திகள் வரும் என்று இருப்பதால் பலரும் அதனைச் செய்வதற்கு ஆர்வப்படுகின்றனர். இது பற்றி ஒரு சில கருத்துக்களை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம். 

எமது முன்னைய பதிவுகளை படித்தவர்கள் மனம், உடல், பிராணன் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும் இடைத்தாக்கமடைவதும் என்பதனை அறிந்திருப்பீர்கள். இவை மூன்று ஆன்மாவினைச் சூழ்ந்துள்ள கவசங்கள். இந்த மூன்றுமே பஞ்ச கோசங்களாக விரிவடைகின்றது. சாதனை அடிப்படையில் மனிதன் நேரடியாக இந்த மூன்றின் மூலமாகத்தான் அடுத்த இரண்டு கோசங்களை தொடர்புகொண்டு விரிவடையச் செய்யமுடியும்.  இந்த கோசங்கள்  "நான்" இல்லை என்ற அறிவு பெற்று இவற்றை ஒளிரச் செய்யும் உண்மையான ஆன்மாவினை அறிதலே யோக சாதனையின் நோக்கம். 

இந்த அடிப்படையில் பிரணாயாமம் என்பது பிராணன் மூலம் மனதினையும் உடலினையும் வலுப்படுத்தும் செயல்முறையாகும். இது மூச்சுடன் இரண்டற பிணைந்தது. மூச்சு சுவாசப் பையினூடாகவும் நரம்புத்தொகுதியின் ஊடாக கட்டுப்படுத்தப்படுகிறது . மூச்சினை உள்ளிழுக்கும் பொது மனிதனின் எழாதார சக்கரத் தொகுதியினூடாக (மூலாதாரம் தொடக்கம் சஹஸ்ராரம் வரை) பிராணன் உட்புகிகின்றது.  இதன் பின் இந்த சக்கரங்களில் சேமிக்கப்பட்டு சூஷ்ம உடலின் மூலம் மெதுவாக எமது உணர்ச்சிகள் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்தூல உடலிற்கு வெளிப்படுத்தப் படுகிறது. இந்த செயன்முறையே சாதாரணமாக ஒவ்வொரு கணமும் நடை பெற்றவண்ணம் உள்ளது. 

மூச்சினை ஆழமாக சுவாசிக்கும் பொது அதிகளவு பிராணன் உட்புகுகின்றது. இதனாலேயே பிரணாயாமத்தில் ஆழ்ந்து மூச்செடுக்கும் பயிற்சி ஆரம்ப பயிற்சியாக்கப்படுள்ளது.

இனி நாம் எடுத்துக்கொண்ட தலைப்பினைப் பற்றி பார்ப்போம். கும்பகப் பிரணாயாமம்  ஏன் அவசியம் என்று? ஏற்கனவே  மனம், உடல், பிராணன் ஆகியமூன்றும்  தொடர்புடையவை என்று பார்த்துவிட்டோம். இதில் பிராணன் சக்தியினை வழங்குகின்றது, உடல் ஆன்மாவிற்கான தளத்தினை (base ) வழங்குகின்றது .  மனம் ஆன்மாவினைச் சூழ கவசமாக பரிணமித்து மாயையில் ஆழ்த்துகின்றது. 

மனதின் நிலைகள் விழிப்பு, கனவு, நித்திரை, தூரியம், தூரியாதிதம் என ஐந்து வகைப்படும். முதல்மூன்று நிலைகளும் சாதாரணமாக உலக மாயையிற்கு ஆட்பட்டு வாழும் அனைவருக்கும் உள்ள நிலையாகும். ஆன்ம சாதனையில் ஈடுபட்டு ஆன்மாவினை அறிந்த விழிப்புணர்வு பெற்ற நிலை தூரியம் - விழிப்புணர்வு (awakened state ) எனப்படும். இந்த நிலைவாய்க்கும் போது ஆன்மா மனதினை தனது இச்சா சக்தியினால் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறது. அதாவது இதுவரை மனம் போன போக்கில் சென்ற உடல், பிராணன், புத்தி, ஆன்மா எல்லாம் தற்பொழுது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இது மனம் வசப்பட்ட நிலையாகும். இதுவே எந்த ஒரு சாதனையிலும் சாதாரண  மனிதன் அடையக்கூடிய அடுத்த நிலையாகும். 

இந்த தூரிய நிலையினை அடைவதுவே கும்பகப்  பிரணாயாமத்தின் உண்மையான நோக்கமாகும்.  இது எப்படி சாத்தியம் என்பதனை சற்று விளக்குவோம்.  

மேலே விளக்கப்பட்டது போல் மன-பிராண-உடல் இடைத்தொடர்புகளில்  பிராணன் ஓர் இணைப்புப் பாலமாகும். அதாவது binding  energy, இந்த ஓட்டத்தினை ஒருகணம் நிறுத்தினால் ஆன்மாவினைச் சூழ உள்ள கவசங்கள் அறுந்துபோகும். மரணத்தில்  பிராணனிற்கும் உடலிற்கும் இடையிலான தொடர்பு அறுந்தாலும் ஆன்மாவினைச் சூழ பிராண, மன, புத்தி கவசங்கள் ஒட்டிய வண்ணமே இருக்கும். அதாவது மரணம் என்பது உடலினைவிட்டு மற்றைய நான்கு கவசங்களும் பிரிதலேயாகும்.  

யோக இறை சாதனையில் உடலில் இருந்தவண்ணம் ஆன்மாவினைச் சூழுவுள்ள மற்றைய   கவசங்களை பிரித்து ஆன்மாவினை அறிகிறோம். இதற்கு கும்பகப்  பிரணாயாமம் துணைபுரிகிறது. எப்படி? மூச்சினை சில வினாடிகள் அடக்கும் போது பிராணன் அடங்க ஆன்மா தனது கவசங்களில் இருந்து பிரிந்து சுயத்தன்மை பெறுகிறது. இப்படி ஆகும் போது மனம் விழிப்புணர்வு அடைகிறது.  அதாவது தூரிய நிலை அடைகிறது. 

அப்படியாயின் மரணத்தின் போதும் மனிதன் பிராணனை இழக்கின்றானே? அப்போது  ஏன் அந்த நிலையினை பெறவில்லை!  

இந்த இடத்தில் எமது முன்னோர்கள் தேவர்களாக இருந்தாலும் மனித உடலிற்கு வந்துதுதான் தமது இறை சாதனையினை  பூர்த்தி செய்யவேண்டும்  , சித்தர்கள் மனித உடலினை போற்றியதன்  இரகசியத்தினை விளக்குவோம். 

தூரிய  நிலையினை அடைவதற்கு பிராணன், மனம், புத்தி கவசங்களை ஆன்மாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்பதனை அறிவோம். அவற்றை பிரித்து அழித்துவிட இயலாது, அப்படிச் செய்தால் அடுத்த நிலையினை (தூரியாதீதம் ) அடைய இயலாது. அவற்றின் பிடியிலிருந்து ஆன்மா வெளியில் வந்து அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருதலே தன்னையறிந்த நிலையாகும். இதன் பின்னரே ஆன்மா தலைவனை அறிந்து இறைவனை அடைதல் எனும் துரியாதீத நிலையினை அடைய முடியும். இப்படி மனம், பிராணன், புத்தி கவசங்களை சாதனையினால்  பிரிக்கும் போது அவற்றை இழுத்து பிடித்து வைத்திருக்க ஒரு தளம் வேண்டும், அந்த செயற்பாட்டினை உடல் செய்கிறது.  ஆக உடல் இன்றி மனிதன் தனது உண்மையான ஸ்வரூபமான ஆன்மாவினையும் அறிய முடியாது. இறைவனையும் அறிய முடியாது. 

இந்த நிலையே கும்பகப் பிரணாயாமத்தில் ஏற்படுகின்றது. ஒரிருகணம் பிராணனை கட்டுப்படுத்தும் போது மற்றைய கவசங்கள் ஆன்மாவிலிருந்து பிரிந்து ஆன்மா மனதினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மனம் விழிப்புணர்வு  நிலையடைகிறது. மனம் விழிப்புணர்வு அடைந்த நிலையில்  சித்திகள் வாய்க்கின்றது. 

தற்போது அன்பர்களுக்கு சித்தர்கள் ஏன் கும்பக பிரணாயாமத்தினை வலியுறுத்தினார்கள் என்பதன் உண்மை நோக்கம் விளங்கியிருக்கும். ஓரளவு மன, உடல் சுத்தி இல்லாமல் அதிகளவு கும்பக பிரணாயாமம் செய்தல் உடலிற்கும் மனதிற்கும் கேடு விழைவிக்கலாம் என்பதில் அவதானமாக இருத்தல் வேண்டும். இன்னொரு வார்த்தையில் கூறுவதானால் கும்பகப் பிரணாயாமம் ஒருவகையில் உடலுடன் இருந்ததே விழிப்புணர்வுடன் மரணத்தின் அனுபவத்தினை பெறுதல் எனலாம். 

இறுதியாக பிராணாயாமம் பழக  விரும்பும் அன்பர்கள் தம் நோக்கத்தினை துணிந்து அதற்கேற்றவாறு தம்மை தயார்படுத்தி பழகுதல் வேண்டும் என்பதனை நன்கு அறிதல் வேண்டும். 

கும்பகப் பிரணாயாமம் ஆத்ம சித்திக்குரிய அரிய சாதனம். 

ஸத் குரு பாதம் போற்றி !

Monday, August 13, 2012

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள் - 02


கண்ணைய யோகியார் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது சாதாரண மனிதன் போல் எந்த பகட்டும் இல்லாமல் தன்னை தேடி வரும் மாணவர்களுக்கு மாத்திரம் தமது கைப்பட பாடங்களாக யோக வித்தை, சித்த வித்தை, மந்திர தந்திர நுட்பங்களை எழுதிக் கொடுத்து நேரடி செய்முறை விளக்கங்களும் கொடுத்து கற்பித்து வந்தார். இப்படிக் கற்றவர்களில் இலங்கை காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் முதன்மையானவர், கிட்டத்தட்ட 44 வருடங்கள் இலங்கையில் இருந்து கொண்டு சென்னைக்கு வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் சென்று அவரிடம் அனைத்து வித்தைகளும் கற்றுக்கொண்டவர். அவர் தான் குருவிடம் கற்ற வித்தைகளை அனைவரும் பயன் படும்படி சிறு சிறு புத்தகங்களாக வெளியிட்டு வந்துள்ளார். இந்த புத்தகங்கள் இலங்கை நுவரெலியாவில் காயத்ரி பீடத்தில் விற்பனைக்கு உள்ளன. அவை பற்றிய சிறிய அறிமுக விபரங்க்கள் வருமாறு;

எளிய முறை யோகப்பயிற்சி: யோக சாதனை இன்று பலராலும் பயிற்றுவிக்கப்படுகிறது, அவை எல்லோராலும் செய்யக்கூடிய அளவிற்கு எளிமையாக இருப்பதில்லை, உதாரணமாக பிரணாயாமம், ஆசனம், தாரணை, தியானம், சமாதி என்பன அனிவராலும் விளங்கிகொள்ள முடிவதில்லை. இப்படியான உயர்ந்த விடயங்களை எளிய வடிவில் அந்த சாதனையினால் கிடைக்க கூடிய பயன் அனைத்தையும் தரவல்ல பயிற்சிகள் இதில் கூறப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள விடயங்க்கள் 1) யோக சாதனை, 2) ஜெப சாதனை 3) பிராண சக்தி 4) மந்திர பீஜங்கள் 5) தீர்க்க சுவாசம் 6) நோயற்ற வாழ்வு 7) மனக்கட்டுப்பாடு 8) சும்மா இருக்க வழி 9) தாரணையின் பயன் 10) மானச சாதனைகள் 11) காரியம் கைகூட வழி 12) கருத்துபதிவு 13) இரகசிய அனுபவங்கள் 14) மன அலை சிகிச்சை 15) மனச்சிருஷ்டி 16) யோக ஷேமம் 17) உருவ பாவனா தியானம் 18) அரூப தியானம் 19) சமாதி நிலை 20) எளிய பயிற்சிகள். 

இந்த நூலைக்கற்று அதன் பயிற்சி செய்தால் யோகத்தின் அத்தனை படி நிலைகளினை பற்றிய அடிப்படை புரிந்துணர்வும், அதன் அனுபவமும் கிட்டும் என்பதற்கு உறுதி கூறுகிறோம். அதன் பின் நீங்கள் யோகப்பாதையில் விரைவாக முன்னேறுவதற்கான அடிப்படை அறிவினை இந்த நூல் தரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. 

இன்னும் மொத்தமாக 40 மேற்பட்ட நூற்கள் இருக்கின்றன. அவற்றில் சிலது பற்றிய விபரங்களையும் இங்கு தந்துள்ளோம்,

நூற்களில் தலைப்புகள் வருமாறு; 

காயத்ரி குப்த விஞ்ஞானம்: காயத்ரி சாதனையில் ரிஷிகளால் மறைக்கப்பட்ட அரிய இரகசியங்கள், சாதனை முறைகள் அடங்க்கிய நூல்,

ஏகாக்கிர விஞ்ஞானம்: மனச் சக்தியினை ஏகாக்கிரப் படுத்தி என்னென்ன காரிய சாதகங்கள், சித்திகள் பெறலாம் என விளக்கும் பயிற்சி நூல். 

தியானம் என்றால் என்ன?: தியானம் பற்றிய விளக்கமும் எளிய தியானங்களும்

அருவமும் உருவமும்: கோயில் வழிபாட்டின் விஞ்ஞான தத்துவ விளக்கம்.

யாக விஞ்ஞானம்: அனைவரும் தமது வீட்டிலேயே சிறியளவில் யாக வளர்க்க கூடிய செய்முறை விளக்கங்கள், யாகங்களில் ஒவ்வொரு காரியங்க்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைகள், மந்திரங்கள், அவற்றிற்கான விளக்கங்கள் அடங்கிய நூல். 

காயத்ரி ஸ்ம்ருதி: காயத்ரி மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரத்தின் அதிர்வும் மனிதனில் விழிப்பிக்கும் தெய்வசக்திகள் எவை என்பது பற்றி விளக்கும் நூல். 

இவற்றை கற்க வேண்டும் என ஆர்வம் உள்ளவர்கள் கீழ்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்'

திரு. ச. சந்திரமோகன்
அறங்காவலர், காயத்ரி பீடம் சர்வதேச நம்பிக்கை நிதியம்
82, லேடி மக்கலம்ஸ் ட்ரைவ், நுவரெலியா, இலங்கை,
கைபேசி: (0091) 07773249554
தொலைபேசி: (0091) 522222609
மின்னஞ்சல்: srigayathripeetam@gmail.com 

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...