- வாழும் கலையும் வாழ்வின் நோக்கம் அறிதலும்: காயத்ரி மந்திர பாவனையால் மனம் அடையும் ஞானத்தின் பயனாக சாதகன் தனது வாழ்வினை தனக்கும் மற்றவற்களுக்கும் பயனுடையதாக்கி கொள்கிறான். தான் ஆன்மா என்பதனை அறிவதன் மூலம் மரணபயத்திலிருந்து விடுபடுகிறான். இதனால் இன்ப துன்பங்கள் அவனை பாவிக்காத நிலையினை அடைகிறான். இந்த நிலையால் மனம் ஒருமை அடைகிறது. இதனால் வாழ்வில் அவன் தனது முயற்சிகளை முழுமனதுடன் ஈடுபட்டு வெற்றி அடைகிறான்.
- பிராணசக்தியிற்கான கவசம்: பிராணசக்தியே ஒரு மனிதனின் உயிராற்றல். காயத்ரி என்பதன் பொருளே பிராணனை ரட்சிப்பது என்பதே. காயத்ரி சாதகனது பிராணன் காயத்ரி சாதனையினால் காப்பாற்றப்படுகிறது. பிராணனின் இழப்பிற்கு மனதின் தவறான நடவடிக்கைகளே காரணம். பிராணன் அதிகமாக சேமிக்கப்பட உடல் நோய்களில் இருந்து விடுபட ஆரம்பிக்கிறது.
- வாழ்வில் மேன்மை அடைதல்: காயத்ரி மந்திர ஜெபத்தினால் புத்திமயகோசம் மனதுடன் தொடர்புகொள்ள ஆரம்பிப்பதால் வாழ்வு அனைத்து விடயங்களிலும் மேன்மையினை அடைய ஆரம்பிக்கிறது. அதாவது எண்ணும் எண்ணம், செய்யும் செயல் சரியான வழியில் செல்வதால் மேன்மை அடைய ஆரம்பிக்கிறது.
- தூய்மை: அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் ஏற்படுவதால் சாதகனை சூழ காந்த சக்தி தூய்மை அடைந்து அவனை அனைவரும் விரும்ப ஆரம்பிப்பர்.
- தெய்வீக பார்வை: இன்று உலகில் யாரைப்பார்த்தாலும் தீயதைப் பேசி, தீயதை நினைத்து, தீய செயலாகவே நடப்பதை கவனித்து வெருகிறோம். உலகம் என்பது ஒவ்வொருவருடைய மனமும் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தின் பிரதிபலிப்பே, தீய எண்ணங்களை உணர்ந்தவர்களுக்கு தீயதாகவும், நல்ல எண்ணங்களுடையவர்களுக்கு நல்லதாகவும் உலகம் தோன்றும்.உண்மையில் உலகம் என்பது எமது ஆழ்மனதில் சேர்ந்த பதிவுகளில் பிரதிபலிப்பே, காயத்ரி சாதகனது மனம் தெய்வ சக்தியினால் நிரப்பப்படுவதால் உலகினை தெய்வ சக்தி நிறைந்த உலகாகவே காண்பான். இந்த ஆற்றலை காயத்ரி சாதனை தரும்.
- உயர்ந்த குணங்களும் பண்புகளும்: ஒரு மனிதனின் ஆளுமை என்பது அவனது பண்புகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. காயத்ரி சாதகன் கீழ்வரும் பண்புகளை தனது காயத்ரி சாதனையினால் அடைகிறான். மனிதபிமானம், ஈகை, இனிய பேச்சு, நட்புடன் பழகல், நேர்மை, பொறுமை, பாராட்டும் குணம், கடின உழைப்பு போன்ற குணங்கள்.
- பகுத்தறியும் தன்மை: அதாவது எது நல்லது? எது கெட்டது? இதனைச் செய்தால் நனமை வருமா? இல்லையா? இது தேவையா? இல்லையா? இப்படியான ஆற்றல் இல்லாமையினாலேயே மனிதன் மனம் போன போக்கில் சென்று துன்பத்தில் விழுந்து கொள்கிறான், காயத்ரி சாதனை செய்பவனுக்கு பகுத்தறியும் தன்மை அதிகரிக்கும். இதுவே உண்மையான பகுத்தறிவு! காயத்ரி சதகனே உண்மையான பகுத்தறிவாளன்.
- சுயகட்டுப்பாடு: மனித உடமும், மனமும் பேராற்றலின் இருப்பிடம்,அதனை சரியான வழியில் பயன்படுத்த ஒரு ஒழுங்குமுறை தேவை. அந்த ஒழுங்குமுறையினை தருவது சுயகட்டுப்பாடு. காயத்ரி சாதகன் சுயகட்டுப்பட்டினை அடைவான்.
- சேவை புரியும் மனம்: இன்று பலரும் சேவை என்று மனிதனை கையேந்தும் பிச்சைக்கார்களாக, பச்சாதாபத்துடன் செய்து வருகிறார்கள். உண்மையான சேவை என்பது உதவி தேவைப்படும் நபரிற்கு நாம் செய்யும் உதவியால் அவர் தனது சொந்த முயற்சியில் உந்துதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைய வைக்கும் உதவி. இத்தகைய உதவும் ஆற்றம் காயத்ரி சாதகனுக்கு ஏற்படும்.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Sunday, September 23, 2012
காயத்ரி சாதனை மூலம் சாதகன் அடையும் நவ சித்திகள் (ஒன்பது அரிய ஆற்றல்கள்)
Saturday, September 22, 2012
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
காயத்ரி மந்திர பாவனை தியானம்
Friday, September 21, 2012
காயத்ரி மந்திரத்தின் உள்ளார்ந்த பொருளும் தியான சாதனையும்
- ஓம்: பிரம்மம்
- பூர்: பிராணன்
- புவ: துன்பத்தினை அழிக்கும் சக்தி
- ஸ்வஹ: இன்பத்தினை தரும் சக்தி
- தத்: அது
- ஸவிது:சூரியனைப் போன்று பிரகாசமான
- வரேண்யம்: சிறந்த
- பர்கோ: பாவங்களை அழிக்கும்
- தேவஸ்ய::: தெய்வ சக்தி
- தீமஹி: என்னுள் உறையட்டும்
- தியோ: புத்தி
- யோ: யார்?
- ந:: எங்கள்
- ப்ரசோதயாத்: தூண்டட்டும்
Thursday, September 20, 2012
காயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் (பகுதி 02)
-
அனுஷ்டான சாதனையின் போது பிரம்மச்சரியம் இருத்தல் அவசியம், இல்லறத்தவர்கள் 15 நாட்களுக்கொருமுறை இல்லறத்தில் ஈடுபடலாம்.
- கீழ்வரும் ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது மனதினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவும்; சாத்னை காலத்தில் மற்றவரைக்கொண்டு சாதகன் தலைமுடி வெட்டிக்கொள்வது, சவரம் செய்துகொள்வதை தவிர்க்க வேண்டும், தானகவே சவரம் செய்துகொள்ளலாம்; வெறும் தரையில் நித்திரை செய்ய வேண்டும்; உணவு முடியுமானால் ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும், மற்ற வேளைகளில் பழங்கள், பால் என்பன உண்ணலாம்; தனது வேலைகளை தனே செய்து கொள்ளவேண்டும், மற்றவர்கள சாதகனது உடலை, உடைகளை தொடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். இவை மிக மிக முக்கியமானவை அன்று, ஆனால் கடைப்பிடிதால் உடலிலும் மனதிலும் ஜெபசக்தியினை அதிகளவு சேர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
- ஜெபமாலையின் நடுவில் மேரு மணி இருக்கும், ஜெபம் பூர்த்தியாகும் போது அந்த மணியினை கடந்து செல்லக்கூடாது. மாலையினை திருப்பி அடுத்த மாலை ஜெபத்தினை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜெப முடிவிலும் மேரு மணியினை கண்களிலும் நெற்றிப் பொட்டிலும் வைத்து மறுபுறமாக திருப்ப வேண்டும். இப்படி செய்யும் போது ஆக்ஞா சக்கரத்தினுள் எமது ஜெப சக்தி இழுத்துக்கொள்ளப்படும்.
- ஜெபமாலை, யந்திரங்கள், சாதனை பொருட்களை சாதகன் தவிர்ந்த வேறு நபர்கள் தொடக்கூடாது.
- காயத்ரி சாதனை எந்த விதத்திலும் தீமை பயக்காதது. ஆதலால் யாவரும் பயமின்றி செய்யலாம். நன்மையினை மட்டுமே தரவல்லது. இந்த நிபந்தனைகளை கடைப்பிடிப்பதால் நன்மைகள் அதிகமாகவும், துரிதமாகவும் கிடைக்கும்.
- மந்திரம் சரியாக பயனளிக்க அதனை சரியான உச்சரிப்புடன் கூறுவது அவசியமாகும். காயத்ரி மந்திரத்தில் அந்த உச்சரிப்பு பிழையானாலும் பலதடவை முயற்சிக்க தேவியின் அருளால் சரியான உச்சரிப்பினை அறிந்துகொண்டு பயன்பெறும் ஆற்றலை தருவாள்.
- ஒருமுறை காயத்ரி சாதனை முயன்று விருப்பத்துடன் செய்து விட்டீர்கள் என்றால் உங்கள் மனது அதன் பயன் கண்டு மீண்டும் மீண்டும் செய்யத்தூண்டும். இதன் பயனாக படிப்படியாக உங்களில் ஞான வளர்ச்சியும், ஆன்ம வளர்ச்சியும் ஏற்படும். ஆதலால் எப்படியாவது இலட்சியத்துடன் ஒரு அனுஷ்டானத்தினை பூர்த்தி செய்ய முயலுங்கள். அதாவது 125 000 ஜெபத்தினை பூர்த்தி செய்தல் ஒரு அனுஷ்டானம் எனப்படும்.
- இப்படி ஒரு அனுஷ்டானம் பூர்த்தியான பின்னர் உங்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வீர்கள், மனம் அன்பு, கருணை, உற்சாகம் போன்ற உணர்வுகளால் நிரம்பி இருப்பதையும், எந்தவொரு சிக்கலான பிரச்சனைக்கும் நொடியில் தீர்வு காணும் ஆற்றலும் உண்டாகும்.
- இந்த சாதனையினை செய்வதற்கு ஜாதி, மதம், பால், வேற்றுமை, சமூக வேற்றுமை எதுவுமில்லை. யாருக்கு மனதில் விருப்பம் இருக்கிறதோ அவர்கள் குருவருளுடன் தொடங்கி பயன் பெறலாம். இறைவன் நீர் நிலம், காற்று என இயற்கையினை அனைவருக்கும் பொதுவாகத்தான் கொடுத்திருக்கிறான், அதுபோல் பிரபஞ்ச சக்தியான காயத்ரியும் அனைவருக்கும் பொதுவான ஒன்றே! ஆதலால் ஆர்வமுடைய எவரும் இதனை ஜெபிக்கலாம்.
- இடைக்காலத்தில் இந்த அரியவித்தை ஞானம் ஒரு வகுப்பாரிற்கு மட்டும் உரியது என மறைக்கப்பட்டு பெண்கள் ஜெபிக்கககூடாது என்று சுயநலமாக்கப்பட்டது. இவற்றில் எந்தவித உண்மையும் இல்லை, காயத்ரி மந்திரத்தில் வணங்கப்படும் தெய்வமே பெண்ணாக இருக்கும் போது எப்படி பெண்கள் ஜெபிக்கக்க கூடாது என்று சொல்லலாம். பெண்கள் தாராளாமாக ஜெபிக்கலாம். இந்த சாதனையினை செய்யலாம். இதனால் நல்ல ஒழுக்குமும் அறிவும் உடைய சமூகம் மிளிரும்.
- காயத்ரி சாதனை என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை, அதனை பயன்படுத்தி நன்மை பெறுவது அவரவர் விருப்பத்தினை பொறுத்தது. ஆகவே அனைவரும் காயத்ரி சாதனை செய்ய குருதேவரை பிரார்த்திக்கிறோம்.
- மேலும் காயத்ரி சாதனை பற்றிய பதிவுகள் சாதனை புரிய விரும்பும் சாதகர்களுக்காக இந்த வலைப்பதிவில் வெளியிடப்படும்.
Wednesday, September 19, 2012
காயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் (பகுதி 01)
- உடல் சுத்தமாக இருக்கவேண்டும், குளித்து சுத்தமான ஆடை அணிந்து சாதனையில் அமரவேண்டும். அப்படி முடியாத சமயத்தில் கை, கால் அலம்பி முகத்தினை கழுவிக்கொண்டும் அமரலாம். ஆக முடியாத காலத்தில் உடலினை ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டு சாதனையில் அமரலாம்.
- உடலை தளர்வாகவைத்திருக்க கூடிய ஆடகளையே சாதனையின் போது அணியவேண்டும். இறுகிய காற்சட்டைகள், காலணி அணிந்து செய்யக்கூடாது. குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள் சால்வையால் உடலை போர்த்திக் கொள்ளலாம்.
- சாதனை செய்வதற்கு அமைதியான் சுத்தமான இடமொன்றினை தேர்ந்தெடுக்க வேண்டும். இவை புனித தலம், ஆற்றங்கரை, பூந்தோட்டம் போன்றவையாக இருக்கலாம். அல்லது வீட்டின் ஒரு மூலையில் அமைதியான தனியிடம் ஒதுக்கி கொள்ளவேண்டும்.
- சாதகன் பத்மாசன நிலையிலோ, அர்த்த பத்மாசனம், சுகாசனம் போன்ற நிலைகளில் அமர்ந்து கொள்ளலாம். அப்படி கால் மடித்து அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொள்ளலாம்.
- எப்படியாயினும் அமரும் போது முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும். இது மிக அவசியமான ஒன்றாகும், ஏனெனில் சாதனையின் போது பிராண ஓட்டம் அதிகரிக்கும், அது தடைப்படாமல் உடல் முழுவதும் பரவ ஏதுவாக முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்.
- சாதனையின் போது உடல் வெறும் தரையுடன் தொடர்பு கொள்ளும் படி இருக்க கூடாது. இது உடலின் பிராண சக்தி ஓட்டத்தில் தடங்கல்களை ஏற்படுத்தும், ஆதலால் வெள்ளை அல்லது மஞ்சள் நிற பருத்தி துணியினையோ அல்லது தர்ப்பை பாயினையே ஆசனமாக இட்டுக்கொள்ளவேண்டும்.
- ஜெபத்திற்கு நூற்றூ எட்டு மணிகொண்ட துளசி அல்லது சந்தனம் அல்லது படிக ஜெபமாலை ஒன்று பாவிக்கலாம்.
- ஜெபம் சூரியோதயத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக அதாவது பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை 04.00 மணீயிலிருந்து 06.30 இற்குள் செய்யவேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் செய்யவேண்டும்.
- தகுந்த பலனைப்பெற குறைந்தது ஒரு மாலை அதாவது 108 தடவை ஜெபம் செய்வது அவசியமாகும். அதிகம் செயவதும் நன்மை பயக்கும், ஆனால் ஒவ்வொரு நாளும் சம அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சாதனையினை தொடங்க முன்னர் ஒரு சாதனா குருவினை (யார் இந்த காயத்ரி சாதனையினை செய்து பயன்பெற்ற ஒருவர்) தொடர்புகொண்டு தனது சாதனைங்குவதற்கான முறையினை கேட்டறிதல் வேண்டும். பின்னர் அவரது வழிகாட்டலில் சாதனையினை தொடர்வேண்டும். இந்த விடயத்தில் எமது வலைத்தளத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
- ஜெபத்தின் போது காலையில் கிழக்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும் அமர்ந்து செய்யவேண்டும்.
- ஒரு ஆசனத்தில் இருந்து ஜெபம் செய்யும் போது கால் வலி, மேல் வலி ஏற்படின் ஆசனத்தினை மாற்றி தமக்கும் வசதியான் படி இருந்து செய்யவேண்டும்.
- ஜெபத்தின் இடையில் ஏதாவது தடங்கல் (உதாரண்மாக மல சலம் கழிக்க வேண்டிய உணர்வு, வேறு தேவைகளுக்காக) காரணமாக எழும்ப வேண்டி வந்தால் மேலதிகமாக ஒரு மாலை ஜெபம் செய்ய வேண்டும்.
- சாதனையின் போது தொடர்ச்சி இருத்தல் வேண்டும். குறைந்தது ஆரம்பத்தில் 48 நாட்கள் தொடர்ச்சியாக செய்யவேண்டும். இடையில் ஒருநாள் ஜெபம் செய்ய முடியாமல் போனால் அடுத்த நாள் அதே அளவு அதிகமாக செய்து தொடரவேண்டும்.
- பொதுவாக வீட்டில் ஏதும் தீட்டு விடயங்கள் (மரணம் பிறப்பு) நடைபெறும் போது மாலை கொண்டு முறையான உபாசனை இன்றி மானசீக ஜெபம் செய்யவேண்டும். மானசீக ஜெபம் செய்வதற்கு எதுவித நிபந்தனைகளும் இல்லை.
- ஏதாவது அவசர தெய்வ உதவி தேவைப்படின், அல்லது எதிர்பாராத துர்சம்பவங்கள் நடந்தால், அல்லது அவற்றை தடுக்க முழுமையான அனுஷ்டானத்தின் மூலம் சாதிக்கலாம். முழுமையான அனுஷ்டானம் என்பது தொடர்ச்சியாக ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ஜெபம் முடிப்பதாகும், இதை 48 நாட்களுக்குள் முடிப்பது துரித பலனைத்தரும்.
- தொடர்ச்சியான நீண்ட பயணங்கள் செய்யும் போதோ, நோயுற்றிருக்கும் போதோ புறச்சுத்தம் பற்றி அதீத கட்டுப்பாடு தேவையில்லை, மானசீக ஜெபம் மட்டும் செய்யலாம் .
- உணவில் மாமிசங்களை தவிர்க்க வேண்டும், அதிக காரம், புளிப்பு சுவையுடைய தமஸிக உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிய சைவ உணவுகள் மட்டுமே உண்ண வேண்டும். மாமிச உணவுகள் உண்பதால் தவறு கிடைக்கும் பலனின் அளவு குறைவாக கிடைக்கும். `
Tuesday, September 18, 2012
காயத்ரி சாதனைக் குறிப்புகள் - பகுதி 01
காயத்ரி மந்திரமானது பாரத ரிஷிகள் மக்களுக்கு கொடுத்த பெரும் செல்வம், இதனை குறித்த ஒரு வகுப்பினருக்கு மாத்திரமுரியது என்று வரலாறுகள் திரித்து சாதாரண பாமர்களுக்கு கிடைக்கமுடியாதபடி செய்யப்பட்டு வந்தது. மதம் அரசியலானதன் விளைவு இந்த அரிய விடயம் தமிழ் மக்களால் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அகஸ்தியமகரிஷியிடம் வித்தை கற்று 108 வருடங்கள் இந்த பூவுலகில் வாழ்ந்து கண்ணைய யோகியார் தன்னை அண்டி வந்த சாதகர்களுக்கு சித்தர் முறைப்படி சாபவிமோசனம் செய்வித்து காயத்ரி தீட்சை செய்வித்து வந்தார். அந்த வகையில் எமது குருநாதர் இலங்கையில் சாதாரண தோட்டத்தொழிலாளி ஒருவரின் மகனாக பிறந்து ஆன்ம தாகம் கொண்டு குருவைத்தேடி அலைந்த போது அவரை ஆட்கொண்டு காயத்ரி தீட்சை அளித்து குப்தவித்தையாக வைக்கப்பட்டிருந்த இரகசியங்களை உலகமக்கள் அறிந்துகொள்ளும்படி கற்பிக்கும் படி குரு இட்ட ஆணைப்படி, தன்னை அண்டி வந்த சாதகர்களுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்து வந்தார், அவர் காயத்ரி சாதனையில் சித்தி பெற்றமையினால் காயத்ரி சித்தர் எனவே அழைக்கப்பட்டு வந்தார்.
இதுபோல் ரிஷிகளால் இந்த உலகிற்கு இவை கிடைக்கவேண்டிய காலப்பகுதியில் அவற்றை வெளிப்படுத்த தகுந்த ஆட்கள் மூலம் அவற்றை வெளிப்படுத்தியே வருகின்றனர்.
ஹரித்துவாரில் சாந்திகுஞ் எனும் நகரில் காயத்ரி சாதனையினை விஞ்ஞான முறைப்படி நிருபணத்துடன் இலவசமாக கற்பித்து வருகிறார்கள். இதன் நிறுவனர் பண்டிட், ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் காயத்ரி மந்திரத்தின் அனைத்து உண்மைகளையும் உலக மக்கள் அறியும் வண்ணம் வெளியிட்டுள்ளார்கள்.
எமது வலைப்பின்னல் தமிழ் மக்கள் இந்த உண்மைகளினை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக காயத்ரி சாதனை பற்றி எமது கற்கையிலும், சேகரிப்பிலும், தேடலிலும், குருமுகமாய் அறிந்த விடயங்களை தொகுத்து காயத்ரி சாதனை என்ற தொடராக வெளியிட முயல்கிறோம்.
இவற்றை எழுதுவதற்கான நேர அவகாசம் தர எல்லாம் வல்ல குருவருளை பிரார்த்திக்கிறோம்.
Monday, September 03, 2012
தெய்வ உபாசனை செய்வது எப்படி? - அறிவியல் விளக்கம்
இந்த செயற்பாடு இயற்கையாக அமைந்த அளவில் இருக்கும் போது சீரான வாழ்க்கையினையும் அல்லாத போது துன்பத்தினையும் அனுபவிக்கிறோம். ஆக இந்து மதத்தில் ஏன் பலகடவுள்கள் உள்ளார்கள் என்பதற்கும் இதுவே விளக்கம். ஒவ்வொரு சக்தியினையும் மனதினை ஒருமைப்படுத்த வல்ல வகையில் உருவமைத்து உள்ளனர்.
ஒரேகடவுளை வணங்குபவர்கள் எப்படி நன்மை பெறுவது? பலவித பிரார்த்தனை மூலம், தமக்கு வேண்டியவற்றை தகுந்த கருத்து வாக்கியங்களை அமைத்துக்கொண்டு ஆழ்மனதினை செயற்படுத்தி பயன் பெறலாம்.
அப்படியானால் மனச்சக்தி மட்டும்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ளதா ? என்ற கேள்வி எழலாம் . அதற்கு பதில் அலை வேகம் கூடிய பிரபஞ்ச மனச்சக்தியினையே தெய்வ சக்தி என்கிறோம். அவற்றை ஈர்க்கும் செயன்முறையே தெய்வ உபாசனையும் அவற்றின் மற்றைய வடிவங்களும். அதாவது மனிதமனம் அத்தகைய உயர் சக்திகளை ஈர்த்து அறியகாரியங்களைசெய்ய வல்லது.
இத்தகைய அரிய உண்மைகள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு பிற்காலத்தில் மதம் சமயம் என்பன ஒரு அதிகார அலகாக மற்றப்பட்டதன் விளைவே இன்றைய சமூகத்தின் நிலையாகும்.
Sunday, September 02, 2012
கும்பகப் பிரணாயாமத்தின் அவசியம்
Monday, August 13, 2012
யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள் - 02
சிஷ்ய அதிகார மதிப்பீடு
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...
-
உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களு...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...



