குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 27, 2022

தலைப்பு இல்லை

மிகக் சுருக்கமான அறிமுகங்கள் என்ற இந்த புத்தகத் தொகுதிகள் புதிய விஷயத்தைப் பற்றிய அடிப்படைகளைப் பற்றி அறிமுகத்தைத் தருகிறது. மொத்தம் இதுவரை 450க்கு மேற்பட்ட தலைப்புகள் வெளிவந்திருக்கிறது. இதில் சில நூறு எனது வாசிப்பில் இருக்கிறது. இந்த நூல்களைப் பற்றி அவ்வப்போது பதிவு போடலாம் என்பது அவா; தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. எத்தனை தலைப்புகள் உண்டு எனத் தெரியவில்லை. 

முதலாவது அறிமுகம்:

சந்தேகம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். 

ஒரு குறிப்பிட்ட அளவு சந்தேகம் பெரும்பாலும் ஒரு நல்ல விஷயம். உண்மையில், ஒரு 'ஆரோக்கியமான சந்தேகம்' கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அதாவது ஒருவர் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துக்கொண்டு இருக்காமல் அதற்குரிய மாற்றுக்காரணம் இன்னும் ஆழமாக இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சந்தேகப்படுதல் எனும் பண்பு பாதையை அமைக்கிறது. 

ஒரு விஷயத்தின் காரணத்தை சந்தேகத்திற்கு உட்படுத்தி அதைவிட மேலான ஒரு காரணம் இருக்கிறது என்ற நம்பிக்கைக்குள் புகுந்து அறிவினைப் பெற சந்தேகம், அறிவினை வளர்க்கும் ஒரு ஆரம்ப உத்தியாக ஒருவனுக்கு உதவி செய்யலாம். 

ஒரு ஆரோக்கியமான சந்தேகம் நம்மை ஏமாற்ற விரும்புபவர்கள் எம்மை ஏமாற்றாமல் தடுக்க உதவுகிறது. 

சந்தேகத்தின் அடுத்த பக்கம் தர்க்க சிந்தனை இன்றி "எழுந்தமானமாக சந்தேகப்படுதல் அல்லது தீவிர சந்தேகம்" 

இதற்கு உதாரணம் அறிவியல் அடிப்படையில் சந்தேகப்படுகிறோம் என்பதில் ஒரு அடிப்படை இருக்கிறது. அறிவியலையே சந்தேகப்படுகிறோம் என்பது தீவிர சந்தேகம் எனப்படுகிறது. இந்த நிலைக்குப் போகும்போது அறிவியலை நாம் எமக்கு பயன்படுத்த முடியாத நிலையை அடைவோம். 

உறவுகளில் இவர் எனக்கு நம்பிக்கையானவரா என்ற ஆரோக்கியமான சந்தேகத்தினை உள்வைத்து அவதானித்து இன்னும் உறவுகளை மேம்படுத்தி புரிந்துணர்வினை ஏற்படுத்த முடியும்; ஆனால் உறவிற்குள் அதிதீவிர சந்தேகத்தைக் கொண்டுவந்தால் அந்த உறவே இல்லாமல் போகும். 

சந்தேகம் பற்றி சந்தேகமில்லாமல் அறிந்துகொள்ள, சந்தேகபுத்தியில் இருந்து எப்படி எமது அறிவினை, விவேகத்தினை வளர்க்கலாம், அறிவின் ஆதாரம் சந்தேகத்திலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள நல்ல அறிமுக நூல்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...