குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, March 12, 2022

தலைப்பு இல்லை

 

எழுதியிருப்பவற்றை தமிழில் சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி அணி கொண்டு வாசிக்கவும்; இவை என்னவென்று தெரியாத சீரியஸ் தலையர்கள் விலகிச் செல்லவும்!

தற்போது மின்வெட்டுக் காரணமாக மின்சாரம் இல்லாத நேரத்தினை ஓய்வு நேரமாக உறக்கத்திற்கும் இரவில் மின்சாரம் உள்ள நேரத்தில் பணிபுரியும் நேரமாகவும் மாற்றலாம் என்று எண்ணுகிறேன்!

இதைத்தான் Go with the flow என்பதோ?

எப்படியோ நான்கு ஐந்து மணி நேரம் கணனியைப் பார்க்காமல், வேலையில்லாமல் பகலில் ஓய்வெடுக்கச் சொல்லி நாட்டுப் பிரஜைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டிருக்கும் அரசினை நாம் மனமாரப் பாராட்ட வேண்டும்!

அதுபோல் பிறகு செய்யலாம் என்று பிற்போடலாம் என்று வாழும் எம்மையெல்லாம் இந்த நேரத்திற்குள் திட்டமிட்டு பணியாற்றும் ஒழுக்கத்தை இலங்கை வாழ் மக்கள் பழக வேண்டும் என்ற உயரிய எண்ணமும் அரசிற்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.

மேலும் காபன் மாசு குறைத்தல், இயற்கையுடன் வாழப் பழகி கற்கால வாழ்க்கைக்கு திரும்புதல், இரசாயன உரம் பாவிக்காமல் பழங்காலத்து புராதன அறிவினை பயிற்சித்தல் போன்ற உயரிய கொள்கைகள் நாடி நரம்பில் ஊறிய அரசாக இருப்பது எமக்கெல்லாம் பெருமையான விஷயமன்றோ!!!

இருவேளை உணவே ஒருவன் ஆரோக்கியம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது; ஒரு வேளை உணவு உண்பவன் யோகம் பயின்று சித்திபெறும் தகுதியைப் பெறுவான் என்று உணர்ந்துகொண்ட அரசு விலைகளைக் கூட்டி கண்ட கண்ட நொறுக்குத் தீனி உண்டு ஆரோக்கியம் கெடக்கூடாது; ஒரு வேளை உணவு நாட்டு மக்களுக்கு போதும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தான் உணவுப் பொருட்கள் விலை கூட்டுகிறது என்ற நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த சில மாதங்களாக டெமோ காட்டப்பட்டதிலிருந்து எரிவாயு எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமைத்துச் சாப்பிடாமல் எல்லோரும் பச்சையாக இயற்கை உணவு உண்ண வேண்டும் என்ற கொள்கை வெகுவிரைவில் என்றாவது ஒரு நாள் இரவு தூங்கி எழுந்தவுடன் அமுல்படுத்துவதற்கு இப்பொழுதே ஒத்திகை என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏ.சி, மின்விசிறி பயன்படுத்துவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் ஆரோக்கியம் கெடுகிறது என்பதை அறிந்து இந்தக் கோடைக்காலத்தில் நான்கு ஐந்து மணித்தியாலம் வியர்க்க வைத்து உடலாரோக்கியம் பேணவைக்கிறது எமது புத்திசாலி அரசு!

எப்படி இருப்பினும் எம்மைக் காப்பாற்ற சின்னண்ணன் சீனத்து சிங்காரமும் பெரியண்ணன் டெல்லி பாபுவும் இருக்க இலங்கைத் தம்பி கடன் வாங்கினால் என்ன, மீளக்கட்டாவிட்டால் என்ன?

எல்லா வளங்கள் இருந்தும், புத்தனின் ஞானமும் மறந்து, மனிதர்களை இணைக்கத் தெரியாமல் குரோதமும், துவேஷமும், தலைக்கனமும் பிடித்து, பிரிவினை விதைத்து ஆசியாவின் ஆச்சரியமாக மாறிக்கொண்டிருக்கிறோம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...