குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 15, 2022

தலைப்பு இல்லை

அண்மையில் மாத்தளையில் முதல் 20 இடங்களுக்குள் உயர்தரத்தில் மூன்று A சித்திபெற்ற ஒரு மாணவி எமக்கு அருகில் இருக்கும் ஊரில் வசிப்பவர்கள். அவரின் தாய் தனது மகளிற்கு படிப்பதற்கு மடிக்கணணி தேவை என்று வங்கிக்கு கடனுக்காக விண்ணப்பித்து கடன் எடுப்பதற்கு கூட வங்கிக்கணக்கு இல்லாத ஒரு விவசாயக் குடும்பம்! அந்த மாணவியின் ஊக்கமும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைப்பவை! தாய் பிள்ளையின் படிப்பிற்கு காட்டிய அக்கறை நிச்சயமாக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த எனது நண்பர்கள் வட்டத்திற்குள் செய்தி அனுப்பினோம்!

இரண்டு நண்பர்கள் உடனடியாகப் பதில் அனுப்பியிருந்தார்கள். அவற்றுள் எமது பாடசாலைத் தோழர் Kalimuththu Naguleshwaran அவர்களது நிறுவனம் StudyBuddy உடனடியாக புதிய கணனியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தது. இன்று பாடசாலை அதிபரூடாக குறித்த மாணவிக்கு கையளித்தோம்!

Kalimuththu Naguleshwaran மற்றும் இன்னுமொரு இளைஞரும் சேர்ந்து StudyBuddy என்றொரு கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதன்படி ஒரு SDT card இல் சாதாரண தரத்திற்கு தேவையான அனைத்துப் பாடங்களும் பல்வேறு ஆசிரியர்களை வைத்து காணொளி ஆக்கி தயார்படுத்தியுள்ளார்கள். இலங்கையில் நிகர் நிலைக் கல்வி என்பது உண்மையில் சாத்தியம் இல்லை என்பதை புள்ளி விபரவியல் மூலம் ஆராய்ந்து அதற்கு மாற்றாக இதை உருவாக்கி உள்ளார்கள்.

எவரும் உதவி என்று கேட்க முன்னர் உதவும் மனமுடைய மனித சமுதாயம் இருந்தால் உலகில் எவரிற்கும் துன்பமில்லை!

இந்தப் பதிவு எம்மிடம் பணமில்லாவிட்டாலும் உதவும் உள்ளங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உதவலாம் என்ற எண்ணத்தை அனைவருக்கும் பகிர்வதற்கான ஒரு பதிவு

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...