குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 21, 2022

எண்ணப் புரட்சி #03

 

இன்று நாம் அதிகாரம், அரசியல், உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இவை எல்லாம் கிடைத்தால் எமக்குள் இருக்கும் மைய நீக்க விசைகளை நீக்கிவிட்டு ஒன்றுபட்டு ஒரு இலக்கிற்கு பாடுபடுவோமா என்று எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கேட்டுக்கொள்ள வேண்டும்.

மைய நீக்க விசை என்பது ஒரு குழுவாகச் சேர்ந்து செயற்படும்போது தமது தனிப்பட்ட அபிலாசைகளை, சுயநலங்களை அடிப்படையாக வைத்துக் குழப்பி பிரிதல். நான் பெரிது, சரி என்று முரண்டு பிடித்தல் என்பவை.

பொதுவான ஒரு கோயில் நிர்வாகமாக இருந்தாலும் சரி, பாடசாலை பழைய மாணவர் சங்கமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, இறுதியாக என் வழி தனி வழி என்று கூட்டத்தைக் குழப்பிவிட்டு வெளியே வருவது முதல் படி! பிறகு தலைமையிற்கு தெரிவு செய்யப்பட்டவரை வாழ்நாள் பூராக எதிர்த்துக்கொண்டு அவர் எப்போது கவிழ்வார்! திண்ணை காலியாகும் நாம் ஏறி உட்காரலாம் என்று போராடிக்கொண்டிருப்பது என்ற வகையிலேயே அதிகாரப் போட்டி நிகழ்கிறது,

இப்படி இல்லாமல் அனைவரையும் புரிந்து, ஒன்றிணைத்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் இலக்கினை நிர்ணயிக்கத்தெரிந்தவர்களே உண்மையான தலைமைப் பண்பு கொண்டவர்கள். இப்படி இல்லாதவர்களது ஆக்கிரோஷமான மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களிலேயே நாம் கவர்ச்சியுறுகிறோம். இப்படி சினிமாத்தனமான தலைமைத்துவம் ஒரு போதும் சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதில்லை.

ஜனநாயக அரசியலின் அடிப்படை குடித்தொகையின் எண்ணிக்கை - வாக்கு எண்ணிக்கை; ஜனநாயக அரசியலில் அதிகாரத்தைப் பெற தன் சமூகம் சார்ந்த குடித்தொகையை ஒரு மையத்தில் குவிக்கும் தலைமைத்துவ ஆற்றல் வேண்டும். அதைவிடுத்து ஒன்றுபடாமல் ஒவ்வொன்றாகப் பிளந்தால் ஆற்றல் சிதறும்.

ஒரு குழு அதிகாரத்தை அடைய முடியாமல் இருப்பதற்குக் காரணம் தமக்குள் இருக்கும் மைய நீக்க விசைகளை நீக்கி பொது இலக்கை நிர்ணயித்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய மனம் - எண்ண ஓட்டம் - thought process - இல்லை என்பதாகும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...