குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 22, 2021

காயத்ரி உபதேசமும் பெண்களும்

 

தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரின் கருத்து! எது சரி என்பதற்கு ஆப்த பிரமாணம் - உண்மையை உணர்ந்த பெரியவர்கள் கூறுவது என்பது உயர்ந்த ஒன்று! இவற்றை சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். மந்திர சாதனை என்பது தானாக புத்தகங்களைப் படித்துக்கொண்டு அந்த மகான் இப்படிக் கூறியிருக்கிறார், இந்த மகான் இப்படிக் கூறியிருக்கிறார் என்று விதண்டாவாதம் செய்பவர்களுக்குரியதல்ல!

அவரவர் குரு முகமாகப் பெற்றுக்கொண்ட உபதேசத்தின் வழி பயிற்சிக்க வேண்டியது! ஆகவே கீழே உள்ள உபதேசம் குறித்த அந்த குருபரம்பரை கடைப்பிடிக்கும் நியதி என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சில குருபரம்பரை இந்த உபதேசம் இன்னாருக்கு மாத்திரம் என்று வகுத்திருக்கிறது. சில குருபரம்பரை அகத்தகுதியுள்ள அனைவருக்கும் என வகுத்திருக்கிறது. எனது குருநாதர் போன்றவர்கள் கேட்பவர்கள் அனைவருக்கும் என்ற நியதி வைத்திருந்தார்கள். இவை அவரவர் ஆன்ம சுதந்திரம்! இதைப் புரியாமல் அறியாமையில் ஒப்பிடுவது, வாதிடுவது சாதகர்களுக்குத் தேவையற்ற, பயனற்ற விஷயம்.

*******************************************************

உரையாடல்

காயத்ரி/உபநயனம் ஆண்களுக்கு மாத்திரம் உரியதா?

அப்படியானால் அப்படி ஏன் சொல்லப்படுகிறது?

ஸ்ரீ அம்ருதானந்த நாதர்: காயத்ரி (மந்திரம்) ஆண், பெண் இருவருக்கும் உரியது. பெண்கள் உபவீதத்தை சன்னவீரமாக (மாலையாக) அணிந்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது. நான் பல பெண்கள், சிறுமிகள், இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்களுக்கும் காயத்ரி உபதேசம் தந்துள்ளேன். பிரம்மத்தை அறியும் பிரம்ம உபதேசம் அனைவருக்கும் உரியது. இதுவே எனது நம்பிக்கை! நம்புவதற்கு மேலாக செயலில் அனைவருக்கும் உபதேசித்திருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் செய்வது பிழையாக இருந்தால்? (சாஸ்திர விரோதமாக இருந்தால்)

ஸ்ரீ அம்ருதானந்த நாதர்: நான் எவ்வளவு உயர்வடைந்திருக்கிறேன் என்பது பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த சிறிய அறிவிற்குள் இதைக் கூறுகிறேன். என்னுடைய பதில் பூரணமற்றதாக இருக்கலாம், அப்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

மகாகவி காளிதாசர் கூறுகிறார்: பிரபஞ்ச மாதாவாகிய அன்னை அனைத்திற்கும், அனைவருக்கும் அன்னை! அவன் மூடனோ, அறிவாளியோ! அனைவரும் அவளை அவர்கள் அறிந்த வகையில் வணங்கலாம். அனைத்தையும் ஏற்று, தவறுகளை மன்னித்து அவளை அடையும் பாதையில் செலுத்துபவள்.

இதை நாம் புரிந்துகொண்டு அன்னையின் மந்திரம், யந்திரம் (மேரு) காரண சரீரத்தில் இருப்பது; காரண சரீரம் பௌதீக உடலைத் தாண்டி குண்டலினி ரூபமாக இருப்பது; அங்கு ஆண், பெண், ஜாதி, மதம், நிறம் ஆகிய எவையும் இல்லை.

நான் கூறுகிறேன் என்று நம்ப வேண்டாம்; நான் பிழையாக இருக்கக்கூடும், பொதுவாக அனேகமானவை பிழையாகவும் இருந்திருக்கிறது. நீங்களே சாக்த உப நிஷதங்களைக் கற்றுக்கொண்டு உணர்ந்துகொள்வது சிறந்தது. திரிபுரதாபினி காயத்ரியிற்கும் ஸ்ரீ வித்தைக்கும் உள்ள தொடர்பினை ஆழமாக விளக்குகிறது.

தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...