குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 15, 2021

ஆட்டக்கோட்பாடு

 

நாம் இன்னொருவருடன் எண்ண ரீதியாக, பொருள் ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக ஏதாவது ஒரு பரிமாற்றத்தை ஆரம்பிக்கும்போது, செல்வாக்குச் செலுத்தும்போது நாம் ஆட்டத்திற்குள் (Game) நுழைகிறோம்.

ஆட்டத்திற்குள் நுழைந்தபின்னர் ஆட்ட விதிகளை (rules of the Game) புரிந்துகொண்டு அந்த ஆட்டத்தை நன்கு ஆடமுடிந்தால் மாத்திரமே ஆட்டம் சிறக்கும்!

வியாபாரம், அரசியல், சமூகத் தொடர்பாடல்கள், முரண்பாடுகள், காதல், உறவுகள் அனைத்தும் ஒருவித ஆட்டம்தான்!

கண்ணன் ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை என்பதன் அர்த்தமும் அவன் ஒரு strategic game player என்பதுதான்! மகாபாரதம் பண்டைய ஆட்டவிதிகளுக்கான ஒரு கோவை என்று கூறலாம்!

ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள் ஆட்டத்திற்குரிய தர்க்க விதிகளைப் புரிந்துகொண்டு அந்த விதிகளுக்கு அமைய ஆடுவோம் என்றால் மாத்திரமே ஆட்டம் இரசிக்கக்கூடியதாக, இன்பம் தரக்கூடியதாக இருக்கும்.

ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள், உத்திகள், ஆட்டத்தின் பலன் (players, strategies, and payoffs) இந்த மூன்றும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்!

ஆட்டக்காரர்கள் தகுந்த தர்க்க விதிகள் இன்றி மனம் பிறழ்ந்த நிலையில் ஆட்டம் ஆடுவது எப்போதும் குழப்ப நிலையிலேயே (Chaotic state) ஆட்டத்தினை வைத்திருக்கும்!

ஆட்டம் இரு வகைப்படும். ஒத்திசைந்த கூட்டுறவு ஆட்டம் (co-operative game) ஒத்திசையாத கூட்டுறவற்ற எதிர்ப்பு ஆட்டம் (non co-operative game) என இரு வகைப்படும்!

எனக்கும் வெற்றி - உனக்கும் வெற்றி என்பது கூட்டுறவு ஆட்டம்! எனக்கு வெற்றி - உனக்குத் தோல்வி என்பது எதிர்ப்பு ஆட்டம்.

ஆட்டம் தொடரும்....

#எனதுகோட்பாடுகள்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...