குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, September 11, 2020

சிவயோக சுவாமிகளின் என் குருபர புங்கவ சிங்கமே

ஈழத்துச் சித்தர் மரபில் சிவயோகர் சுவாமிகள் அற்புதமானவர்! மற்றெல்லாச் சித்தர்களும் தமது சித்துக்களாலும் ஆற்றல்களாலும் தமது காலத்தில் வாழ்ந்தவர்களை உயர்த்தவும், அருளவும் செய்த போது, யாழ்ப்பாணத்திற்கேயுரிய புலமை மரபையும், சித்தர் நெறிக்குரிய அறிவினை, அனுபவத்தை நூலாக்கி காலம் கடந்து நிற்கும் பணியைச் செய்து நற்சிந்தனை தந்தவர்!

2003ம் ஆண்டளவில் யாழ் சிவதொண்டனில் செல்லத்துரை சுவாமியை சந்திக்கும் போது “நற்சிந்தனை படியும்” என்று சொல்லி நற்சிந்தனை புத்தகம் தந்தார்! ஒரு நான்கு மாதம் அவருடன் தினசரி நெருங்கிய உரையாடல் இருந்தது! அதில் குண்டலினி யோக நெறி பற்றியும், திருமந்திரம் பற்றியும் உரையாடக் கிடைத்தது!

நீண்ட காலத்திற்குப் பிறகு நண்பர் சாந்தரூபன் அவர்கள் காலையில் வாட்ஸப்பில் இந்தப் பாடலை அனுப்பினார்! பாடல் சிவயோக இரகசியத்தைச் சொல்லுகிறதே என்று மனம் மகிழ்ந்தது!

இந்தப் பாடல் தொகுப்பு சிவ யோக சுவாமிகளின் நற்சிந்தனையில் இருக்கும் எங்குருபர புங்கவச் சிங்கமே என்ற சிவபரம்பொருளை குருவாக அல்லது குருவை சிவப்பரம்பொருளாகக் கொண்டு தனக்கு யோக சித்தி வேண்டிப் படிக்கும் பாடல்!

இந்தப்பாடல்களுக்கு நாம் பொருள் கூறுகிறோம் என்று எவரும் எண்ணக்கூடாது! இவை சிவயோக சுவாமிகளின் உயர்ந்த அனுபவம்! பாடலைப் படிக்கும் போது மனதில் ஏற்பட்ட அனுபவத்தை எமது வார்த்தைகளில் தொகுத்துத் தந்துள்ளோம்!

முதல் இரண்டு பாடல்களிலும் ஒரு சாதகன் அறிய வேண்டியதையும், விலக்க வேண்டியதையும் சுவாமிகள் குரு நாதரிடம் வேண்டுதலாக வைத்து தனது குருபக்தியைத் தெரிவிக்கிறார்!

மூன்றாவது பாடலில் உயர்ந்த சிவயோக அனுபவத்தை தனக்கு வேண்டுகிறார்.

நான்காவது பாடலில் அந்த உயர்ந்த அனுபவம் வாய்த்த பின்னர் தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை வேண்டுகிறார்.

ஐந்தாவது பாடலில் சிவயோகத்தின் உயர்ந்த நிலையான ஐந்தெழுத்தால் மூன்றுடலைச் சேர்க்கும் உயர்ந்த இரகசியத்தைப் போதிக்கும்படி வேண்டி அதற்குத் தடை ஆணவ மலம் என்றும் அதன் நீக்கம் என்றும் வேண்டுகிறார்! சிவபரம்பொருளின் பெருமையுடன் பாடல் முடிகிறது!

இந்தப் பாடல் தொகுப்பு யோக சாதனை செய்பவர்களுக்கு நல்ல தினசரி அப்பியாசம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...