குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 29, 2019

தலைப்பு இல்லை

இயற்கை விவசாயத்திலும், சூழலியலிலும் மூழ்கிப் போன என்னை சித்தர் பாடல் பக்கமாக வம்பிழுப்பதற்காக    நண்பர் ரகு (Raguram Annur) வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார்! அனுப்பப்பட்ட பாடல் வழமையாக முக நூலிலும், வாட்ஸப்பிலும் பரப்பப்படும் அரை குறைச் செய்தி! அந்தப் படம் (மஞ்சள் நிற பாடல் உள்ள படம்) கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் வரி விடுபட்டுள்ளது. 
சரியான முழுமையான பாடல் வருமாறு: 
வாதுக்குறி வைத்தியரே சொல்லக்கேளீர் 
வாகாக்கண் மூன்று தலைகள் நான்கு
நீதமுடன் முகங்களைந்து கைகளாறு
நிலை சரீரங்களெட்டு கால்கள் பத்து
வீதமிதன் பயனறிந்தார் வியாதி தீர்ப்பார்
விதமறியார் மானிடரைப் பழியே செய்வார்
செதமாஞ்ச் செய்மருந்து பலித்திடாது
செத்தபின்பு தீ நரகிற் சேருவாரே
அகத்திய முனிவர் அருளிச் செய்த வைத்திய சாரம் என்ற நூலில், ஐந்தாவது பாடல் இது!
இதன் பொருள் அறிந்து வைத்தியம் செய்பவரே உண்மை வைத்தியர் என்கிறார் அகத்தியர் பெருமான்! 
இதை ஒரு விடுகதை என்று நினைத்து முக நூலில் பலர் பதிவிடுகிறார்கள். நூலிலுள்ள ஒரு பாடலை எங்காவது பொறுக்கி விட்டு மனம் போன போக்கில் பொருள் காண்பதல்ல சித்தர் பாடல்கள்! நூலை முழுமையாகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு வரியாக ஆழமாக சிந்தித்து குருமுகமாய் அறிய வேண்டும். 
மேற்கூறிய பாடலிற்குரிய பதிலை அதற்கு அடுத்த ஆறாவது பாடலில் கூறிவிடுகிறார்! அதைப் படிக்காமல் இதை அகத்தியர் ஏதோ விடுகதை போடுகிறார் என்று எண்ணி விடை காண அலையத் தேவையில்லை. 
மருந்து சுத்தி குணம் நிகண்டு மூன்றாம்
வாத பித்தசிலேட்டும தொந்தந்தலைகள் நான் காம்
அருந்தும் அறுசுவையறிதல் கைகளாறாம்
அஷ்டவிதக்குறியறிதல் சரீரமெட்டாம்
இருந்த தச நாடி தசவாயுவிரண்டும் 
இதமாகப் பார்த்திடில் கால்கள் பத்தாம்
பொருந்தியதோர் பிணட நிலை முகங்களைந்தாம் 
பொதிகைமலை அகஸ்தியனார் புகன்றவாறே 
ஆக கேள்வியும் நானே! பதிலும் நானே!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...