குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 23, 2019

கதைகளும் வரலாறுகளும்

கதைகளும் வரலாறுகளும் சலனமுறும் மனதிற்கு சற்று ஆற்றுப்படுத்தி காரியத்தை சாதிக்கும் வல்லமை தரும் ஒருவித ஊக்கிகள்!
இரசாயனவியல் கற்றவர்கள் ஊக்கிகள் பற்றி அறிந்திருப்பார்கள். ஊக்கிகள் தாக்கத்தில் பங்குபெறாது, ஆனால் ஊக்கி இல்லாமல் தாக்கம் நடைபெறாது.
இவ்வாறான ஒன்றே எமது புராணங்களும், இதிகாசங்களும்! எமது மனதை மேம்படுத்தும் கருத்துக்களை மனதுக்கு உவந்து கொடுக்கும் ஒருவித முறையாகவே அவை இருக்கிறது.
இன்று பலரும் புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை நவீன தொல்லியல் மூலம் நிறுவினால்தான் உண்மை என்ற போக்கில் சிந்திக்கிறார்கள். அப்படி நிறுவினால் மிக்க மகிழ்ச்சி!
அப்படி நிறுவப்பட முடியாவிட்டால் அதில் கூறப்பட்ட அனைத்தும் பொய் என்று வாதிடும் முட்டாள்தனத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
பிறப்புச் சான்றிதழ் என்பது தற்போதைய நடைமுறை, எமது தாத்தா, பூட்டனார் காலத்தில் அப்படியொரு நடைமுறை இருந்திருக்காது. தாத்தாவின் பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் தாத்தாவே இல்லை என்று நினைப்பதைப்போன்றது இது.
இதைப்போல்தான் அகத்தை பண்படுத்தும் முயற்சியில் இறங்கும் பலர் புறவயப்பட்டு தமது தேடலை மேற்கொண்டு குழம்பிப் போய் விடுகிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணம் குண்டலினி எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? எந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது? போன்ற கேள்விகள்.
யதார்த்தத்தில் இந்தக் கேள்விகளுக்குரிய பதில் எதுவும் பலனைத்தராது. குண்டலினி என்பது ஒருவன் தனது உணர்வை உயர்ந்த தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குரிய ஒரு குறியீடு. இதைப்பற்றி ஆராய்வதால் இந்த நிலை கிட்டாது! அதற்குரிய பயிற்சியை சரியாக செய்தால் கிட்டும் நிலை இது!
ஆனால் குழம்பிய மனத்திற்கு இந்தக்கேள்விகளும் மனம் திருப்தியுறும் பதில்களும் அவசியம்! அதனால் தான் இத்தனை நூறு நூற்களும், உபதேசங்களும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...