குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, February 24, 2019

தலைப்பு இல்லை

இன்றைய கருத்தரங்கில் பகிரப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்: 

Nishānthan Ganeshan இனது உரையில் இலங்கையில் இன விகிதாசரமும் கல்வித் தகமை விகிதாசாரமும் என்ற ஆய்வுத் தரவு மிக அருமையாக இருந்தது! சிங்களவர் சனத் தொகையில் அதிகமாயிருக்க பல்கலைக்கழகத் தெரிவில் குறைவாகவும் இருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் தமது சனத்தொகை விகிதத்தை விட பல்கலைக்கழக விகிதாசாரத்தில் Merit இற்கூடாக அதிகவிகிதத்தில் காணப்படுகிறார்கள். இஸ்லாமியர்கள் ஏறத்தாள சனத்தொகை விகித அடிப்படையில் இருக்க, மலையகத் தமிழர்கள் 0.04 விகிதத்தில் {எனது ஞாபகத்தில் இருந்தவாறு???} இருக்கிறார்கள் என்ற ஆய்வுத்தரவு வந்திருந்த அனைத்து மாணவர்களையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும! நிசாந்தன் கலாநிதிப் பட்ட ஆய்வாளன் என்ற தனது திறனை அழகாக சமூக உணர்வுடன் வெளிப்படுத்தியிருந்தார்!

அடுத்தது மாத்தளையின் இளம் சட்டத்தரணி Logesh Waran, மாத்தளை வரலாற்றில் சட்டக் கல்லூரிக்கு தெரிவாகிய விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழர்களில் ஒருவர். சமூக நலத்துடன் தனது நண்பர் குழாமை சமூகப் பணிக்கு வழிகாட்டும் நல்ல இளைஞன்! வந்திருந்த எல்லோரையும் கவரும் வகையில் உத்வேகப்படுத்தி பேசினார்! முன்னேற நினைப்பவர்களுக்கு எதுவும் தடை இல்லை என்பதை தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தினூடாக பகிர்ந்திருந்தார்! மாத்தளை தமிழ் சமூகத்திற்கு கிடைத்த நல்ல வரப்பிரசாதம்!

அடுத்தது அண்ணன் அருண்நாத், ஏன் நாம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் அதற்கான அருமையான பதிலாக; நாளைக்கு எங்களதும் உங்களதும் பிள்ளைகள் இந்த சமூகத்தில் தான் வாழப் போகிறார்கள், அவர்களின் சுற்றத்தில் வாழ்வதற்கு நல்ல பண்புள்ள, கல்வியறிவு உள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்கு எல்லோரும் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார்! 

இப்படி ஒரு தேவை இருக்கிறது என்பதை அறிந்து அறிவித்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடுகளைச் செய்த இளநிலை பொறியிளாளன் Ravi Shankar க்கு பாராட்டுகள்! தனது நேரத்தை கணணித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு செலவழித்து வருகிறார்! 

வந்திருந்த எல்லாப் பழைய மாணவர்களுக்கும் கற்பித்த, கற்பித்துக் கொண்டிருக்கிற புனிதவதி ஆசிரியர் அவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்! 

மிக மகிழ்வுடன் திருப்தியான மாலைப்பொழுது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...