கதைகளும் வரலாறுகளும் சலனமுறும் மனதிற்கு சற்று ஆற்றுப்படுத்தி காரியத்தை சாதிக்கும் வல்லமை தரும் ஒருவித ஊக்கிகள்!
இரசாயனவியல் கற்றவர்கள் ஊக்கிகள் பற்றி அறிந்திருப்பார்கள். ஊக்கிகள் தாக்கத்தில் பங்குபெறாது, ஆனால் ஊக்கி இல்லாமல் தாக்கம் நடைபெறாது.
இவ்வாறான ஒன்றே எமது புராணங்களும், இதிகாசங்களும்! எமது மனதை மேம்படுத்தும் கருத்துக்களை மனதுக்கு உவந்து கொடுக்கும் ஒருவித முறையாகவே அவை இருக்கிறது.
இன்று பலரும் புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை நவீன தொல்லியல் மூலம் நிறுவினால்தான் உண்மை என்ற போக்கில் சிந்திக்கிறார்கள். அப்படி நிறுவினால் மிக்க மகிழ்ச்சி!
அப்படி நிறுவப்பட முடியாவிட்டால் அதில் கூறப்பட்ட அனைத்தும் பொய் என்று வாதிடும் முட்டாள் தனத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
பிறப்புச் சான்றிதழ் என்பது தற்போதைய நடைமுறை, எமது தாத்தா, பூட்டனார் காலத்தில் அப்படியொரு நடைமுறை இருந்திருக்காது. தாத்தாவின் பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் தாத்தாவே இல்லை என்று நினைப்பதைப் போன்றது இது.
இதைப் போல் தான் அகத்தை பண்படுத்தும் முயற்சியில் இறங்கும் பலர் புறவயப்பட்டு தமது தேடலை மேற்கொண்டு குழம்பிப் போய்விடுகிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணம் குண்டலினி எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? எந்த நூலில் கூறப்பட்டிருக்கிறது? போன்ற கேள்விகள்.
யதார்த்தத்தில் இந்தக் கேள்விகளுக்குரிய பதில் எதுவும் பலனைத்தராது. குண்டலினி என்பது ஒருவன் தனது உணர்வை உயர்ந்த தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குரிய ஒரு குறியீடு. இதைப் பற்றி ஆராய்வதால் இந்த நிலை கிட்டாது! அதற்குரிய பயிற்சியை சரியாக செய்தால் கிட்டும் நிலை இது!
ஆனால் குழம்பிய மனத்திற்கு இந்தக் கேள்விகளும் மனம் திருப்தியுறும் பதில்களும் அவசியம்! அதனால் தான் இத்தனை நூறு நூற்களும், உபதேசங்களும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.