குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 09, 2018

அப்பா சொன்ன குட்டிக்கதை {பூனையும் வைத்தியமும்}


***********************************
ஓரு ஊரில் மிகவும் பிரபலமான மருத்துவர், அவரிடம் வருபவர்கள் எல்லோரும் குணம் பெற்று செல்வார்கள். சிறுகுழந்தைகளுக்கு நோய் ஏற்படமால் இருக்க அவரது கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ சேர்த்து அரைக்கும் முக்கூட்டு மாத்திரை வெகுபிரபலம். அந்த மாத்திரை அரைக்கும் போது வீடே கமகமக்கும். மாத்திரை அரைப்பதற்கு முன்னர் மருத்துவர் மகனை வீட்டுப்பூனை எங்கிருக்கிறது என்று தேடச்சொல்லுவார். மகன் தேடிக்கொண்டு வந்தவுடன் பூனையை வீட்டிற்கு வெளியே கட்டச்சொல்லிவிடுவார். இதன் பின்னர் மாத்திரை அரைக்கும் வேலை தொடங்கும். மாத்திரை அரைத்து முடியும் வரை பூனை கட்டப்பட்டிருக்கும். அரைத்து மருந்தை பக்குவப்படுத்திய பின்னர் மகனை அழைத்து பூனையை அவிழ்த்து விடச்சொன்னவுடன் பூனை அவிழ்த்து விடப்படும். வருடத்தில் இரு தடவை இந்த மாத்திரை அரைக்கும் படலம் நடைபெறும். இப்படியாக மகன் தந்தையிடம் மருந்து செய்முறைகளை கற்று வைத்தியனானான். காலங்கள் உருண்டன, வயதாகிய தந்தையும் இறந்து போனார், அவர் இறந்த அடுத்த மாதம் பூனையும் இறந்து போனது. சிறிது மாதத்தில் அரைத்து வைத்த முக்கூட்டு மாத்திரையும் தீர்ந்து போய்விட்டது.


மக்கள் முக்கூட்டு மாத்திரை கேட்டு வர மாத்திரை அரைக்க வேண்டும். மகனோ மக்களுக்கு கோரோசனை இருக்கிறது, குங்குமப்பூ இருக்கிறது, கஸ்தூரியும் இருக்கிறது, ஆனால் மாத்திரை அரைக்க பூனை இல்லாததால் மாத்திரை செய்ய முடியவில்லை என்று வந்தவர்களை திருப்பி அனுப்பி விட்டான்.
அவன் தனது குருவிடம்/தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட காலத்தில் பூனையை ஏன் கட்டச்சொல்லுகிறார் என்று ஒரு நாளும் தானாக சிந்தித்ததுமில்லை, தகப்பனிடம் கேட்டதுமில்லை.
மாத்திரையின் வாசனைக்கு பூனை மருந்தில் வாய் வைத்துவிடும் என்பதுதான் உண்மையான காரணம்.
இதுபோல் குருவிடம் இருப்பவர்கள் குரு எதற்காக இதை செய்கிறார் என்பதை புரிந்துகொள்ளாமல், கேட்டுத்தெரிந்து கொள்ளாமல் தமது முட்டாள்தனத்தால் மனம்போன போக்கில் ஏதாவது செய்து மாட்டிக்கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...