குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 01, 2018

மஹாலக்ஷ்மி தத்துவம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் 01


இது நாம் குருதேவரிடம் படித்த தேவேந்திரன் துதித்த மஹாலக்ஷ்மி அஷ்டகம் என்ற பாடத்தொகுப்பின் உரையைத்தழுவி எமது சாதனா அனுபவத்திற்கேற்ப இக்காலத்து நடையில் எழுதப்பட்டது. 
**********************************************************
Image result for Mahalakshmi Sadhana
சுலோகம் - 01
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மகாலக்ஷ்மி நமோஸ்துதே


மஹாமாயே: மாஹா மாயை வடிவினள் 

இன்பமயமான ஆன்மா தன்னுடைய சொந்தமான இன்ப சொரூபத்தை அடையவிடாமல் அறியாமையில் ஆழ்த்து சக்தியையே ரிஷிகள் மஹாமயா என்கிறார்கள். இந்த மஹாமாயவின் சக்தியால்தான் ஆன்மா உண்மை ஸ்வரூபத்தை அடைய முடியாமல் போக இன்பங்களில் ஆழ்ந்து அறியாமையால் துன்பமுறுகிறது. இந்த மஹமாயைதான் லக்ஷ்மி. ஒருவன் மாயையினை கடந்து தன்னை அறிய வேண்டும் என்றால் அந்த மாயையின் அருளைப் பெறவேண்டும். ஆகவே தன்னை, தனது ஆன்மாவின் உண்மையான இன்ப ஸ்வரூபத்தை அறிய லக்ஷ்மி தத்துவம் நன் கு புரியவேண்டும். மஹாமாயையான லக்ஷ்மியின் எல்லா ஆற்றல்களையும் புரிந்தவனாலேயே தன்னை அறிய வேண்டும். ஆன்மாவின் சொந்த இன்பதை மறைத்து பணம், சுகபோகம் போன்ற புறப்பொருட்களில் இன்பம் பயப்பதாக இந்த லக்ஷ்மி மாயை இயங்குவதால் மஹாமாயே என்று அழைக்கப்படுகிறாள் 

இந்த வரி சாதகனுக்கு கூறும் செய்தி, தன்னை அறிய முற்படுபவன் லக்ஷ்மி மயமான மஹாமாயையினை அறிய வேண்டும். அந்த தத்துவமே லக்ஷ்மி தத்துவம் என்று அறிய வேண்டும் 


ஸ்ரீ பீடே: ஸ்ரீ பீடத்திற்குரியவள் 

ஸ்ரீ என்பது எல்லா செல்வங்களினதும், இன்பங்களினதும் குறியீடு. லக்ஷ்மியின் இன்னொரு தத்துவம் ஸ்ரீ தத்துவம். பீடம் என்றால் இருக்குமிடம் என்று பொருள். ஸ்ரீ பீடம் என்றால் எல்லா இன்பங்களினதும், செல்வங்களினதும் இருப்பிடம் என்று பொருள். பிரபஞ்சம் தோற்றம் பெறும்போது உலகில் உள்ள் ஒவ்வொன்றும் எது தோற்றத்திற்கு மூலமாக இருந்ததோ அந்த மூலத்திலிருந்தே அனைத்தும் வந்திருக்க வேண்டும். அவற்றுள் எல்லா இன்பங்களுக்கும் செல்வத்திற்கும் மூலமாக இருக்கும் தெய்வ சக்தியே லக்ஷ்மி தத்துவமாகும். 


ஸுரபூஜிதே: தேவர்களால் துதிக்கப்படுபவர்கள் 

தேவர்கள் என்ப்படுபவர்கள் எப்போதும் இன்பத்தை அனுபவிக்க விரும்புபவர்கள். மனிதர்களை விட எப்போதும் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்க விரும்பவர்கள். அத்தகைய நோக்கமுடையவர்கள் விரும்பி வணங்கும் தெய்வம் லக்ஷ்மி. ஏனென்றால் லக்ஷ்மி தத்துவத்தை தன்னில் விழிப்படையச் செய்தவர்கள் எப்போதும் இன்பத்தை அனுபவிக்கு தேவர்கள் போன்ற நிலை அடைவார்கள். மனிதர்கள் அற்பமான சொற்பகாலத்திற்கு இன்பத்தினை பெற ஏதேதோ காரியங்களை செய்யும் போது நிலையாக இன்பத்தை அடைய தேவர்கள் எப்போதும் லக்ஷ்மியை வழிபட்டுவருகிறார்கள். 



எவர் இன்பத்தை நிலையாக பெற விரும்புகிறார்களோ அவர்கள் லக்ஷ்மியை வழிபடவேண்டும். 

சங்க சக்ர கதா ஹஸ்தே: சங்கு சக்கரம் கதாயுதம் போன்றவற்றை கைகளில் கொண்டவள் 

கடவுளர்களின் ஆயுதங்கள் ஆழ்மனத்தினை செயற்படுத்தும் குறியீடுகள். சங்கு – நாதம் என்ற ஒத்திசைந்த ஒழுங்கான பிரபஞ்ச மூல அதிர்வினையும், சக்கரம் பிரபஞ்சத்தின் ஓயாத இயக்கத்தினையும், கதாயுதம் எந்த பிரச்சனைகளையும் வலிமையுடன் எதிர்த்து முன்னேறும் வீரத்தினையும் குறிக்கும். 



நாதம் உருவக ஒரு ஒழுங்கான சந்தத்தோடு இசைந்த இயக்கம் அவசியம். 

இந்த மூன்று குறியீடுகளும் லக்ஷ்மியை உபாசிக்கும் உபாசகன் தன்னில் லக்ஷ்மித்துவத்தை கொண்டிருக்க வேண்டிய பண்புகளை குறிக்கிறது. ஒருவன் லக்ஷ்மித்துவத்தை தன்னில் விழிப்படையச் செய்ய வேண்டுமாயின் சங்கின் நாதத்தை போன்ற ஒத்திசைந்த அதிர்வினை (harmony) தனது மனம், உடல், பண்புகளில் கொண்டிருத்தல் வேண்டும். இந்த அடிப்படிப் பண்புகள் ஒத்திசைந்தால் சக்கரம் இயங்குவது போன்ற வலிமையான இயக்கம் அவசியம், இப்படி சக்கரம் போன்ற இயங்கும் போது வரும் தடைகளை உடைத்து முன்னேறும் வலிமை கதாயுதத்தை போன்று இருக்க வேண்டும். 



ஒரு சாதகன் தன்னில் லக்ஷ்மித்துவம் பெறவேண்டும் என்றால் சங்கின் நாதத்தினைப்போன்ற ஒத்திசைவும், சக்கரம் போன்ற விடாத முயற்சியுடன் கூடிய இயக்கமும், எதிர்ப்பு துன்பங்களை உடைத்தெறியும் கதாயுதம் போன்ற வலிமையும் கொண்டிருக்க வேண்டும். 

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

நமஹ என்ற சமஸ்க்ருத சொல்லின் பொருள் “நான் அல்ல” என்பதாகும். பொதுவாக மனம் தான் என்று என்று எண்ணி பலவிதமான மாயைகளிலேயே இன்பத்தை தேடி அலையும். ஒரு இறைவனின் நாமத்துடன் நமஹ; என்று சேர்த்துச் அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் சொல்லும்போது அதன் பொருள் இதுவரை நான் என்னை ஸ்ரீ ஸக்தி சுமனன் என்று எண்ணிக்கொண்டிருந்தே அது உண்மையில் “ நான் அல்ல” என்பதே பொருள். 



இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். எம்மைப் பார்த்து எவராவது நீர் யார் என்று கேட்டால் அதற்கு நாம் “ நான் ஒரு தொழிலதிபர், நான் ஒரு சூழலியலாளன், நான் ஒரு மருத்துவன்” என்று நாம் எண்ணி வைத்திருக்கும் போலி ஆங்காரத்தை குறிப்பிடுவோம். ஆனால் உண்மையில் எமது உபாசனையில் நாம் உபாசிக்கும் தெய்வத்தின் குணங்களே நாம். ஆகவே அஷ்டோத்திர நாமாவளியி நமஹ சேர்த்துக்கொள்ளும்போது எமது போலி ஆங்காரங்களை மறந்து நாம் உபாசிக்கும் தெய்வத்தின் குணங்களை எம்முடன் அடையாளப்படுத்திக்கொள்கிறோம். 



ஓம் மஹாலக்ஷ்மியை நமஹ என்றால் ஓம் என்பது மூல பரம்பொருளில் இருந்து வெளிப்பட்ட மகாலக்ஷ்மி தத்துவம் என்னில் விழிப்படைகிறது, நான் இதுவரை என்னைப்பற்றி கொண்டிருந்த போலி ஆங்காரம் அல்ல நான் ( நமஹ;) 



ஆக இந்த வரி என்னுடைய போலியான துன்பமயத்தை மறந்து நான் மகாலக்ஷ்மி தத்துவம் விழிப்படைந்தவன் என்பதை “மஹாலக்ஷ்மி நமோ” என்ற வரியும், ஸ்துதே என்பது வணங்குகிறேன் என்றும் பொருள் படும். 

சாதகன் லக்ஷ்மி தத்துவத்தை தன்னில் விழிப்படையச் செய்ய 

1. முதலில் உண்மையான இன்பத்தை ஆன்ம இன்பத்தை பெற லக்ஷியின் மாஹாமாயா ஸ்வரூபத்தை அறிந்து, அவளருளால் அதைக் கடக்க வேண்டும். 

2. அந்த இன்பகரமான லக்ஷ்மி தத்துவத்தின் மூலத்தை ஸ்ரீ பீடம் என்று குறிப்பிடப்படுகிறது. 

3. எப்போதும் மாறாத இன்பத்திற்காக தேவர்கள் ஸ்ரீ பீடத்தை துதிக்கிறார்கள் லக்ஷ்மித்துவம் விழிப்படையச் செய்ய ஒருவன் சங்கின் நாதத்தினைப்போன்ற ஒத்திசைவும், சக்கரம் போன்ற விடாத முயற்சியுடன் கூடிய இயக்கமும், எதிர்ப்பு துன்பங்களை உடைத்தெறியும் கதாயுதம் போன்ற வலிமையும் கொண்டிருக்க வேண்டும். 

4. தான் துன்பமயமானவன் என்ற போலி ஆங்காரத்தை துறந்து எப்போதும் இன்பமயமான லக்ஷ்மித்துவம் நிறைந்தவன் என்று பாவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...