Day of Victory over senses & mind
விஜயதசமி
காண்போர் அனைவருக்கும் அன்னையின் அருள் பெருக, வளம் பெருக பிரார்த்தனைகள்! பூரண யோகம் சித்திக்க ஒளி பெருகட்டும்.
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
Day of Victory over senses & mind
விஜயதசமி
காண்போர் அனைவருக்கும் அன்னையின் அருள் பெருக, வளம் பெருக பிரார்த்தனைகள்! பூரண யோகம் சித்திக்க ஒளி பெருகட்டும்.
French institute of Pondicherry- சைவ ஆகமங்கள் பாதுகாக்கப்படும் மிகப்பெரிய இடம். அரிய பல சூழலியல் ஆய்வுகளும் நடைபெறுகிறது.
சிறிது நேர பார்வையிடல், வாசிப்பு
இன்று சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் சிதம்பரத்தில் நடராஜப்பெருமான் சன்னதியில் எம்பெருமானுக்கு அர்ப்பணித்து ஆடிய ஒரு அழகிய நடனத்தைக் கண்டோம்.
பரதசாஸ்த்திரத்தின் ஆறாவது அத்தியாயம் ரசாத்யாயம்; இது இரசானுபவம் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. இரசானுபவம் என்பது நடனத்தைக் காணும்போது மனதிற்கு ஏற்படும் இன்பம். இந்த அனுபவம் இல்லாமல் எந்தக்கலையையும் இரசித்து அனுபவிக்க முடியாது.
ஸ்ரீ அபிநவகுப்தர் இரசசித்தாந்தம் பற்றி விரிவாக உரையாடுகிறார். பரத சாஸ்த்திரத்தின் ஆறாவது அத்தியாய உரையில் நாட்டியத்தின் பதினொரு அங்கங்களைக் குறிப்பிட்டு அதில் முதன்மையானது இரசம்.
பரதமுனி இரசம் என்பது ஒரு நாட்டிய மங்கை வெளிப்படுத்தக்கூடிய மொத்தக் கலை உணர்ச்சி என்கிறார். இரசம் இல்லாமல் எந்தப் புலனும் இன்பத்தை அனுபவிக்க முடியாது.
நல்ல நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்த மனம் சிவபெருமானின் ஆனந்த கூத்தினை காணும் அனுபவத்தை திருமூலர் இப்படிச் சொல்லுகிறார்.
சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச்
சொல் பதம் ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொன் பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார் அறிவாரே
சிதம்பரம்
செஞ்சடைக் கற்றை முற்றத்
திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக்
காணலா நறவ நாறும்
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை இருள் கிழியத்
துளங்கெரி யாடு மாறே.
நாம் காமம் எனும் சக்தியால் இயக்கப்படுகிறோம். இந்த சக்தியின் இயல்பு சுயநலம். ஒன்றின் மீது தீராத இச்சை கொள்பவன் அதனைத் தனதாக்க முயல்வான். இப்படிச் செய்யும்போது அது நிலைத்திருக்க முடியாமல் போய்விடும்.
காமத்துடன் உறவைத் தொடங்குபவர்கள் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தி உறவை மதிப்பில்லாமல் ஆக்கி விடுகிறார்கள். இது காதலாக மாறினால் இல்லறம் செழித்து குடும்பம், பிள்ளைகள் என இன்பம் நிலைக்க ஆரம்பிக்கும்.
தான் கற்று பெரிய அறிஞனாக வர வேண்டும் என்று சுயநலமாக பட்டங்கள், பதவிகளை நாடுபவர்களால் ஒழுங்கான கல்விச் சமூகத்தை உருவாக்க முடியாது; நான் பெற்றது போதும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பணியாற்ற அந்தப் பணி நிலைத்து நிற்க ஆரம்பிக்கும்.
இப்படி காமத்தை காதலாகவும், சுயநலத்தைப் பொது நலமாகவும் மாற்றும் ஆற்றலை லக்ஷ்மி என்கிறோம். இந்த லக்ஷ்மித்துவம் வாய்த்தால் மாத்திரமே எதுவும் நிலைத்து நிற்க ஆரம்பிக்கும்!
அன்னையைப் பற்றி எனது குருநாதர் கூறிய கருத்து வருமாறு;
காமம் - இச்சை எனும் ஆற்றல் உங்களை இந்த உலகத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் சிந்தனையை உருவாக்கும். இந்த காமம் அன்பாக மாற்றப்பட்டால் இந்த உலகம் நிலைத்திருக்கும். இதையே ஸ்திதி - காத்தல் என்கிறோம். பிரபஞ்சத்தின் பராமரிப்பு இப்படியே நிகழ்கிறது. இதை நிகழ்த்துவிக்கும் சக்தியை மகாலக்ஷ்மி என்கிறோம்.
ஸ்ரீ அம்ருதாந்தந்த நாத சரஸ்வதி
(Dr. N. Prahaladha Sastri - former nuclear scientist)
எங்கும் இலங்கொளி அகத்திய
எங்கும் அகத்தியம் பரவ
உணர்வில் ஒளியாய் வந்து
ஸோமா பஞ்ச காவிய நிகண்டு காண்பாய்
இலட்சணமும், வாதமும், ஞானமும், மந்திரமும்
துலக்கமாய் பூரணமாக ஐம்பெருங்
காவியமாகச் சொன்னோம்
குருவருளும் திருவருளும் நிறைப்பித்து
யோகமுடன் தமிழும் பயிற்றுவித்தோம் உன்னை
அருளுடனே ஏகாக்கிர சித்தம் கொண்டு
பொருள் காண்பாய் ஐங்காவியங்களுக்கு
உலகத்தார் விளங்க செந்தமிழ்ச்
சித்த வித்தை உலகெங்கும் பரவ
உன் செயல் விதையாகும்
விதை வளர்ந்து விருட்சமாக பட்சிகள் தேடிவரும்
பராபரை உள்ளிருந்து அகவொளியால் உணர்த்துவிப்பாள்
என்றார் துவிதிதை நவராத்ரியில்!
ஸ்ரீ ஸக்தி சுமனன்
27-Oct-2022
தேவி,
சரண்புகுந்தவர்களின் துன்பத்தைத் துடைப்பவளே!
ஜெகன் மாதா - உலகின் தாயே!
விச்வேஸ்வரி - உலகின் தலைவியே!
விச்வம் த்வமீச்வரி - உலகைக் காக்கும் தேவி!
சராசரஸ்ய - அசையும் அடையாப் பொருள் அனைத்தையும் ஆள்பவள்
ஆதார பூதா - நிலைத்து நிற்பதற்கு ஆதாரமான பிருதிவி வடிவானவள்
ஆபஸ்வரூபா - அப்பு தத்துவ வடிவாக இருந்து திருப்தியை ஏற்படுத்துபவளே!
உன்னை நான் வணங்குகிறேன்!
தேவி மஹாத்மியம் - அத்தியாயம் 11 - தேவி ஸ்துதி
நவராத்திரி ஆரம்பம்!
ஸக்தியை உபாசிப்போம்!
தேவி, நீ பகவதி!
முக்திக்கு வித்தானதும் நினைத்ததற்கும் அரிதான மகாவிரதம் நீ!
பரவித்தை எதுவோ அதுவும் நீ!
இந்திரியங்களை அடக்கியவர்களாலும்,
தத்துவத்தின் ஸாரம் புரிந்தவர்களாலும்,
மன மாசற்றவர்களாலும்,
பரவைராக்கியம் உடையவர்களாலும்
உணரப்படுபவள் நீ!
சாத்திரங்கள் அனைத்தின் ஸாரத்தை உணரும் புத்தி வடிவினள் நீ!
உன் கடைக்கண் பார்வை பெற்றவன் ஜன சமூகத்தில் சன்மானம் பெறுகிறான்! எல்லாச் செல்வங்களும் அவனிற்கு வந்து சேர்கிறது.
உனதருளால் நல்வாழ்க்கை எய்தியவன் மிகுந்த ஆதரவுடன் தினசரி தர்ம காரியம் இடைவிடாது செய்கிறான்!
ஸ்ரீ தேவிமஹாத்மியம்
இன்றைய காலைப்பொழுது பாக்கியம் தேசியக்கல்லூரி பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் பற்றிய அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினோம்.
மாத்தளையின் கல்வி முன்னேற்றத்தில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale உடன் தோளுக்குத் தோள் நின்று செயற்படும் நண்பர் திரு. Jayaprakash Sithambaram அவர்கள் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் பல்வேறு பட்டப்படிப்புகள், சிறு கற்கை நெறிகள், பட்ட மேற்படிப்புகளை தற்போது மாத்தளை கல்வி நிலையத்திலேயே வழங்குகிறது. அதன் இயக்குனர் எனது ஆய்வுப் பேராசிரியரின் இன்னுமொரு மாணவர் என்பது மகிழ்ச்சியான செய்தி. மாத்தளையில் வசிக்கும் மாணவர்கள் அதிக செலவு செய்து தனியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பெற்றோருக்கு செலவு வைக்காமல் இலகுவாக அரச பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு!
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 பேருக்காவது இதில் கற்பதற்குரிய செலவை புலமைப்பரிசில் மூலம் வழங்குவதற்கு நிதி சேகரிப்பை நடாத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு எமது சமூகத்திடமிருந்து பாரிய ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புகிறோம்.
பாக்கியம் தேசியக் கல்லூரியின் அதிபர் திருமதி சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் இந்த நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பும் தந்திருந்தார்!
ஒன்றியத்தின் இயக்குனர்களில் ஒருவராகிய Sathasivam Luxsmi Kanth நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.
சாதாரணதரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் விடுமுறையினை வீணாக்காமல் ஆங்கில அறிவையும், தகவல் தொழில்நுட்ப அறிவையும் வளர்க்க இந்தக் கற்கைகள் உதவி செய்யும்.
மாத்தளையில் இருக்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் இந்த நிகழ்வினை நடாத்த முடியும். அதற்கு அதிபர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்! இந்த நிகழ்வை நடாத்த விரும்பும் அதிபர்கள் எமது ஆலோசகர் திரு Jayaprakash Sithambaram அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் பாடசாலையில் இந்தக் கற்கைகளைக் கற்க தகுதியுள்ள, ஆனால் வசதியற்ற மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு கற்கைக்குரிய நிதி உதவிகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செய்யும்.
புத்தகக்கிடங்கிலிருந்து….
மகாராணியார் இறப்பு இங்கிலாந்து வரலாற்றை தூசு தட்டிப் பார்க்க ஆர்வம் தந்திருக்கிறது.
1000 ஆண்டுகள் அரச வம்சம் அதிகாரத்தை தக்க வைக்கும் இரகசியம் என்ன?
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...