குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 09, 2024

2024 சிருஷ்டி வகுப்புத் தொடர் 02 : ஹடயோகத்திறவுகோல் 01

 சிருஷ்டி 2024 – வகுப்பு 02

ஹடயோக பிரதீபிகை வகுப்பு – 01

செவ்வாய்க்கிழமை 09-ஜனவரி-2024

 

அன்பின் மாணவர்களே இன்று நீங்கள் கற்றுக்கொண்டவை:

  1. ஹட என்ற சொல்லிற்கு இரண்டு வகையில் பொருள் சொல்ல முடியும்; பொதுவிளக்கம் பலம் என்பதாகும்; எழுத்துக்களை வைத்து யோக வழியில் பொருள் கண்டால் ஹ என்பது சூரியனையும், ட என்பது சந்திரனையும் குறிக்கும்.
  2. ஹடயோகம் என்றால் பலத்தை தரும் யோகம் அல்லது உடலில் உள்ள சூரிய சந்திர ஆற்றலை இணைக்கும் முறை என்று பொருள்.
  3. பிரதீபிகை என்றால் ஒளி விளக்கு என்று அர்த்தம்; ஹடயோகம் பயில விரும்பும் மாணவருக்கு தெளிவான வழிகாட்டும் ஒளி விளக்கு ஹடயோக பிரதீபிகை.
  4. இந்த நூல் நாத சம்பிரதாய யோக நூல்; நாத சம்பிரதாயம் என்பது சிவபெருமான் பார்வதிக்கு இந்த யோக வித்தையை உபதேசிக்கும் போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த மீன் பரிணாம உயர்வு பெற்று அடுத்த பிறவியில் மச்சேந்திர நாதர் என்ற சித்தராக மனிதப் பிறவி எடுத்து யோகத்தில் தேர்ச்சிபெற்று யோகியானார். அவரிடன் தீட்சை பெற்று கோரக்க நாதர் இந்த யோகத்தில் தேர்ச்சி பெற்றார். ஆகவே இந்த யோக முறை ஆதி நாதரிடமிருந்து மச்சேந்திர நாதரும், மச்சேந்திர நாதரிடமிருந்து கோரக்க நாதரும் அவர்கள் குருபரம்பரையாகப் பயிற்சி செய்த யோகப் பயிற்சிகளை முறையாகத் தொகுத்து இந்த ஹடயோகப் பிரதீபிகை நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  5.  இந்த நூலைத் தொகுத்த யோகியின் பெயர் ஸ்வாத்மாராம யோகி.
  6.  இந்த நூலில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன; இவற்றை உபதேசங்கள் என்று நூலாசிரியர் சொல்லுகிறார்.
  7.  முதலாவது உபதேசம் 67 சுலோகங்களைக் கொண்டது; இது நூலின் குருபரம்பரை வரலாறு, நூலின் நோக்கம், ஹடயோகம் பழகும் சாதகனுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம், பயிற்சிசெய்யும் இடத்திற்கு இருக்க வேண்டிய நிபந்தனைகள், உணவு முறைகள் மற்றும் தேர்ந்தெடுத்த ஹடயோக சித்தி தரும் பதினைந்து ஆசனங்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்தூல உடலின் சுத்தி பலம் ஆகியவற்றை விளக்குகிறது.
  8.  இரண்டாவது உபதேசம் 76 சுலோகங்கள் கொண்ட அறுவகைச் உடல் சுத்தி முறைகள், அஷ்ட கும்பகங்களின் பயிற்சிமுறையும் விளக்கப்பட்டுள்ளது. இது பிராண பலம் பேறுவதற்கான முறையைக் கூறுகிறது.
  9.  மூன்றாவது உபதேசம் 130 சுலோகங்கள் கொண்ட பந்த முத்திரைகள் பற்றிய விளக்கங்கள்; ஸ்தூல உடல் பலமும், பிராண பலத்தையும் வளர்த்துக்கொண்ட யோகி எப்படி தன்னுடைய நாடிகளைத் தூய்மைப்படுத்தி மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியை விழிப்பிப்பது என்ற முறையைச் சொல்லும் அத்தியாயம்.
  10.  நான் காவது உபதேசம் 114 சுலோகங்கள் கொண்ட ஸமாதி நிலையை எட்டுவதற்கான பயிற்சிகளைக் கூறும் பகுதி. இது நாதானுசந்தானம் என்ற ஸமாதி அனுபவத்தை எப்படி அடைவது என்பதை விளக்குகிறது.
  11.  இந்த நூல் கற்கை வெறுமனே கோட்பாட்டறிவிற்கு மாத்திரம் என்பதையும் பயிற்சிகள் அனைத்தும் முறையான ஆச்சாரியரிடம் குருமுகமாகப் பயில வேண்டும் என்பதையும் மாணவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.  எக்காரணம் கொண்டும் தன்னிச்சையாக பயிற்சிகளைச் செய்யக்கூடாது.
  12.  முதல் உபதேசத்தின் முதல் சுலோகம்:
    • மிக உயர்ந்த இராஜயோகத்தில் ஏறிச் செல்வதற்கு ஏணிப்படிபோன்று விளங்கும் இந்த ஹடயோக வித்யாவை எமக்கு உபதேசித்த ஆதி நாதருக்கு நமஸ்காரம்
  13. முதல் உபதேசத்தின் இரண்டாவது சுலோகம்:
    • இராஜ யோகத்தில் வெற்றி பெறுவதாற்காக மாத்திரமே தனது குரு நாதரை வணங்கி ஸ்வாத்மாராம யோகியினால் இந்த ஹடயோக வித்யா உபதேசிக்கப்படுகிறது.
  14. முதல் உபதேசத்தின் மூன்றாவது சுலோகம்:
    • ராஜயோகத்தை பயிற்சிக்க முயற்சிக்கும் சாதகர்கள் பல்வேறு கருத்துக்கள் இருப்பதால் குழம்பி இருட்டில் நிற்பதுபோல் சாதனையில் தடைபட்டிருப்பவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள ஹடம் என்ற இந்த ஒளிவிளக்கை ஸ்வாத்மாராமர் கருணையுடன் ஏந்தி நிற்கிறார்.
  15. முதல் உபதேசத்தின் நான்காவது சுலோகம்:
    • ஹடயோக வித்தை மத்ஸ்யேந்திர நாதர், கோரக்க்ஷ நாதர் பயிற்சித்து சித்தி பெற்ற வித்தை; அவர்களின் அருளாசியால் ஸ்வாத்மாராமர் அறிந்துகொண்டார்.
  16.  முதல் உபதேசத்தின் ஐந்து தொடக்கம் ஒன்பதாவது சுலோகம்:
    • இந்த ஹடயோக வித்தையை கீழ்வரும் 33 ஹடயோக சித்தர்கள் பயிற்சி செய்து சித்தியடைந்து இந்த யோகத்தின் மகிமையால் காலத்தினை வென்று இந்த பிரம்மாண்டத்தில் சாசுவதமாக இருந்து உலாவி வருகிறார்கள்: அவர்கள் நாமங்கள்
      1. ஸ்ரீ ஆதி நாதர்
      2. மத்ஸேந்திரர்
      3. சாபரர்
      4. ஆனந்தர்
      5. பைரவர்
      6. சௌராங்கி
      7. மீனர்
      8. கோரக்ஷர்
      9. விருபாக்ஷர்
      10. பிலேசயர்
      11. மந்தாநர்
      12. யோகபைரவர்
      13. சித்தி
      14. புத்தர்
      15. கந்தடி
      16. கோரகண்டகர்
      17. ஸுரானந்தர்
      18. சித்தபாதர்
      19. சர்படி
      20. கானேரீ
      21. பூஜபதர்
      22. நித்ய நாதர்
      23. நிரஞ்ஜனர்
      24. கபாலீ
      25. பிந்து நாதர்
      26. காகசண்டீச்வரர்
      27. அல்லாமர்
      28. பிரபுதேவர்
      29. கோடாசோலீ
      30. டிண்டிணி
      31. பானுகீ
      32. நாரதேவர்
      33. கண்டகாபாலிகர்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...