குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 23, 2022

எண்ணத்தில், சிந்தனையில் மாற்றமே சமூக மாற்றம்

 

அண்மைக்காலமாக சமூக திட்டங்களை கவனித்ததில் அவை சரியான இலக்கினை அடைய முடியாமல் இருப்பதற்கு அதை வழி நடாத்தும் நபர்களின் மனநிலை மிக முக்கியமானதாக இருக்கிறது.

ஒரு சிலர் குழுவாக இணைந்தவுடன் அந்தக்குழுவைத் தவிர்ந்தவர்கள் அனைவரும் எதிரிகளாகவும், தமக்கு அன்னியமானவர்களாகவும் கருதத்தொடங்கும் மன நிலையை உருவாக்கியவுடன் மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றும் ஆற்றலை இழந்து தனித்து விடுகிறார்கள்.

குழுவாக இணைவது தனி ஒரு மனிதன் எந்த ஒன்றையும் சாதிக்கும் வல்லமை உடையவன் அல்ல! ஆகவே கூட்டாகச் சேரும்போது ஒருவரின் பலவீனத்திற்கு இன்னொருவர் பலமாக அமையும் தன்மையை உருவாக்கி பலமுடையதாக்குகிறது.

ஒவ்வொரு குழுவும் மற்றைய குழுவுடன் ஒத்திசைந்து ஒன்றுக்கொன்று மிகை நிரப்பியாக செயற்படும் வகையில் இருக்க வேண்டும்.

ஒரு கல்வித்திட்டத்தை சமூகத்திற்காக முன்னெடுக்கிறோம் என்றால் வியாபார சமூக குழு அதற்குரிய நிதியை ஒருங்கிணைப்பதில் உதவ வேண்டும். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை கல்விச் சமூகத்திடம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் நாம் பணம் கொடுக்கிறோம், நான் சொல்லும்படி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு வந்தால் செயல் கெட்டு குட்டிச் சுவராகி விடும்.

இதைப் போல் அரசியல்வாதி பாடசாலைகளுக்கு வளங்களைக் கொண்டுவருவதில் தனது வாக்கு வங்கியை பிரதானமாகக் கணக்கிட்டு யாரிற்கு வளங்கள் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தாலும் ஓரளவிற்கு மேல் கல்விச் சமூகத்தின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது.

அதிகாரமும், பணமும் அறிவையும், பண்பாட்டினை வளர்க்கும் சக்திகளாகச் செயற்படவேண்டும். இப்படி சிந்திக்கும் ஒரு சமூகமே உயர்வினைப் பெறும்.

இதற்கு எண்ணத்தில், மனதில் மாற்றம் முதலில் உருவாக வேண்டும்!

உரையாடுவோம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...