குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 27, 2021

தலைப்பு இல்லை

 

குறள் 383:

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனான் பவர்க்கு.

Translation:

A sleepless promptitude, knowledge, decision strong:

These three for aye to rulers of the land belong.

*************************************************************

மீள்பதிவு

நிர்வாக அதிகாரி கவனிக்க வேண்டிய ஆறு புறக்காரணிகளை முன்னைய குறள் விளக்கத்தில் கூறினோம். இந்த ஆறு காரணிகளும் சரியாக இருந்தாலும், குறித்த நிர்வாக அதிகாரிக்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டிய அகப்பண்புகள், இந்த அகப்பண்புகளை சரியாக கொண்டிருக்காவிட்டாலும் நிர்வாகம் விழுந்து விடும். மேலே கூறிய குறைவில்லாமல் இருக்க வேண்டிய நான்கு அகப்பண்புகளுடன் ஆளும் நிர்வாகிக்கு நீங்காமல் இருக்க வேண்டிய மேலும் மூன்று பண்புகள் பற்றி இந்தக் குறளில் விதந்துரைக்கிறார்.

ஒருவன் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டுமென்றால் கீழ்வரும் மூன்று பண்புகளை நீங்காமல் பெற்றிருக்க வேண்டும்.

தூங்காமை: இன்றைய நிர்வாக முகாமைத்துவத்தில் இருக்கும் பெரிய பழுது சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்காமை. முடிவெடுப்பதில் தாமதம், இந்த தூங்கும் பண்பு உள்ளவன் எப்போதும் சிறந்த நிர்வாகியாக வர முடியாது. ஆகவே சிறந்த நிர்வாகி என்பவன் துரிதமாக முடிவுகளை எடுக்கும் ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். தாமதமான, சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகளே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தூங்காமை என்பதை சோர்ந்து போகாமை என்று பொருள் கொள்ள வேண்டும்.

கல்வி: சரியான, துரிதமான முடிவுகள் எடுப்பதற்கு துறைசார்ந்த புரிதல் அவசியம், அந்த புரிதலின் அடிப்படை கற்கும் கல்வியில் இருந்தே வருகிறது. ஆகவே சிறந்த நிர்வாகியாக இருப்பதற்கு அடிப்படை அந்த துறைசார்ந்த விடயங்களில் தனது அறிவினை பெருக்கி, தெளிந்து இருக்க வேண்டும், இதற்கு கல்வி அவசியம். துரிதமாக முடிவெடுக்கலாம். ஆனால் எடுத்த முடிவு சரியாக இருப்பதற்கு அறிவுத் தெளிவு அவசியம். அந்த அறிவுத்தெளிவை தருவது கல்வி. ஆகவே சிறந்த நிர்வாகி அந்தத் துறைசார்ந்த அடிப்படைக் கல்வியினை பெற்றிருத்தல் அவசியம்.

துணிவுடைமை: தூங்காமையுடன் துரிதமாக முடிவு எடுக்கும் திறனுக்கு தேவையான முதல் அகப்பண்பு கல்வி என்றால் இரண்டாவது அத்தியாவசிய பண்பு துணிவுடைமை. முடிவுகள் எடுக்கும்போது அதன் விளைவுகள் சாதகமாக இருந்தால் வெற்றி, இல்லாவிட்டால் அதன் விளைவுகளை தலைமை நிர்வாகியே சந்திக்க வேண்டும். பலரும் முடிவு எடுக்காமல் தேங்குவதற்கான முதற்காரணி முடிவுகளின் விளைவு என்னவாக இருக்குமோ என்ற பயம். அந்த பயம் இருப்பவனால் எதையும் தலைமை தாங்கவோ, குழுவை வழி நடத்தவோ, வெற்றி பெறவோ முடியாதவனாகி விடுவான். ஆகவே கல்வி அடிப்படை புரிதலை தந்தாலும், வெற்றி பெறுபவன் துணிவுடன் சரியான முடிவுகளை எடுப்பவனே.

இந்தக்குறள் என்னைப்பொறுத்தவரையில் அருமையான குறள். முடிவெடுக்கும்போது விரைவாக முடிவெடுக்கவேண்டும், அப்படி விரைவாக முடிவெடுக்கும்போது தவறான முடிவாக இருக்க கூடாது, அதற்கு சிறந்த புரிதல் வேண்டும், அந்தப் புரிதலைத்தரும் கல்வியினை ஒருவன் சரியாக பெற்றிருக்க வேண்டும். அப்படி சரியான கல்வியறிவு பெற்ற அனைவரும் சிறந்த தலைமைத்துவம் உள்ளவர்களாக வருவதில்லை, ஏனெனில் பலரும் தாம் எடுக்கும் முடிவுகளால் என்ன விளைவு வருமோ என்ற பயம், அந்த பயத்தை உதறி துணிவுடன் முடிவு எடுப்பவன் வெற்றியை நோக்கி பயணிக்கிறான். ஆக இந்தக் குறளில் மூன்று பண்புகளையும் கோர்வையாக ஒன்றுக்கு ஒன்று தொடர்புடன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...