குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 17, 2021

பஞ்சாக்கரத் திருப்பதிகம் பாடல் - 03 யோக விளக்கம்

 

ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

இது திரு ஞான சம்பந்தப் பெருமானாரின் பஞ்சாக்கர திருப்பதிகத்தின் மூன்றாவது பாடல்!

அஞ்செழுத்து - பஞ்சாட்சரம் எப்படி யோக சாதனைக்கு உதவும் என்பதை விளக்கியுள்ளார்;

1) ஊனில் உயிர்ப்பை ஒடுக்கும் - ஸ்தூல பஞ்சாட்சர ஜெபம் உடலில் உள்ள பிராணனின் ஓட்டத்தை சீராக்கும். ஊன் என்றால் உடல், உயிர்ப்பு என்றால் இயக்கும் பிராணன். இவை இரண்டும் சீராக இயங்கினால் உடல் ஆரோக்கியம், வீணாகினால் நோய், துன்பம்! ஒடுங்கினால் யோகம். ஆக அஞ்செழுத்து மந்திரம் ஊன்வழி பிராணனை வீணாக்காமல் ஒடுக்கி வாசியாக்கி, சிவத்தை நோக்கிச் செலுத்தும் வல்லமை உள்ளது.

மேலே பிராணன் உடலில் ஒடுங்கத் தொடங்கினால் என்ன நிகழும் என்பது இரண்டாவது வரி

2) ஒண் சுடர் ஞானவிளக்கினை ஏற்றி - ஒண் என்றால் மிகுதியான என்று பொருள், பிராணனை ஒடுக்கும் யோகி கண்களை மூடினால் அவன் அகக்கண்களால் ஒளிவெள்ளம் காண்பான், இதை சிவயோகத்தில் சிவஜோதி என்று கூறுவர். ஆக சாதகன் திருவைந்தெழுத்தால் பிராணன் வீணாகுவதை ஒடுக்கினால் அவன் தனது புருவமத்தியில் மிகுந்த ஒளியுடன் கூடிய விளக்கினை ஏற்றுவான்! இது திருவைந்தெழுத்துத் தரும் இரண்டாவது சித்தி; புருவமத்தியில் ஒளி காணுதல்.

இப்படி புருவமத்தியில் ஒளி கண்டால்

3) நன்புலத் தேனை வழிதிறந் தேத்து வார் - நன் புலத்து என்னை வழி திறந்து ஏத்துவார் என்று கொண்டால், புலன்கள் வழி செல்லாமல் சிவத்தை நோக்கிச் செல்லும் வழியை திறந்து மேலே ஏற்றுவார்ககளுக்கு இடர் எதுவும் வராமல் காப்பது திருவைந்தெழுத்து என் கிறார்.

இதன் யோக விளக்கம் திருவைந்தெழுத்தை சாதகம் செய்யும் ஒருவன் முதலில் பிராணன் வீணாகும் நிலையிலிருந்து மீண்டு உடலில் பிராணன் ஒடுங்கி ஆதாரங்கள் சுத்தியாகி, புருவமத்தியில் ஒளிகாணும் நிலையைப் பெறுவான். இப்படி சாதனை செய்யும் போது புலன் வழி செல்லாமல் சிவத்தில் சிந்தை இருத்தி யோகம் செய்வது அவசியம், புலன் வழி சென்றால் யோகம் கெட்டு இடர் வரும், அத்தகைய புலன் அடக்கத்தையும் தந்து ஒருவனின் யோக சாதனையைக் காப்பது திருவைந்தெழுத்து ஜெபமே!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...