குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 19, 2020

தலைப்பு இல்லை

புதிய சவாலுக்கான நேரம் இது! வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் அன்பும் நன்றிகளும்! 

வாழ்க்கையில் சவால்களும், புதியதைத் தேடுதலும், அதற்காக எதையாவது இழந்துவிடுவோமா என்ற பயம் இன்றி முயற்சிப்பதும் மிக உச்சகட்டமான இன்பம்! 

மற்றவர்கள் செல்லாத, செல்வதற்கு பயப்படும் பாதைகளில் நாம் இறங்கி நாமே செதுக்கிச் செல்வது மிகச் சிலிர்க்கும் அனுபவம்! 

நான் ஒவ்வொரு முறையும் எனது அகத்தில் உருவாகும் பயத்திற்கு பயம் காட்டும் சவாலான பாதைகளைத்தான் தேர்ந்தெடுக்க விரும்பியிருக்கிறேன்! 

வெற்றி என்பது அதி உச்சத்தை தொடுவதை விட சமநிலையாக இருத்தல் என்பதே எனது அகப்புரிதல்! ஏனென்றால் உச்சி என்பதை அடைந்தால் அதைத் தாண்டும் போது அடுத்து விழ வேண்டியது அதலபாதாளம் என்பது இயற்கையின் விதி! ஆகவே வெற்றி என்பதை உச்சத்தைத் தொடுவது என வரைவிலக்கணப்படுத்துவது பிழையானது! 

விஞ்ஞான இளமானி படித்தால் ஆசிரியராகத்தான் போகலாம் என்று எல்லோரும் நம்பவில்லை. நான் படித்தது சூழலியல் விஞ்ஞானம். நான் ஆலோசகன் ஆகவேண்டும் என்று அப்போது முன்னணியில் இருந்த சூழலியல் கம்பனியில் சேர்ந்து யுத்தம் நடந்துக் கொண்டிருக்க வாராவாரம் பயணத்துடன் முதுமாணி முடித்தேன்! 

பிறகு காலநிலை மாற்றமும், நீடித்து நிலைத்திருக்கும் வள ஆலோசனை வழங்கும் ஆலோசகராக உலகப்புகழ்பெற்ற கணக்காய்வு நிறுவனத்தில்....

உள்ளே இருந்து ஒரு குரல் சிறுவயதிலிருந்து நீ கற்கும் வைத்தியமும் பரம்பரையும் தொடரவேண்டும், சித்த ஆயுர்வேத வைத்தியப் பதிவுடன் மருத்துவராக ஒரு அவதாரம்! 

எவ்வளவு காலத்திற்குத்தான் ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பது என்று சலித்து உலகின் மிகப்பெரிய விவசாயக் கம்பனியில் சூழலியல் முகாமைத்துவத்திற்கான அதிகாரி! சவால் நிறைந்த பணி! ஆனால் பெற்ற அனுபவம் பெரிது!

நீ தொழில்நுட்பத்தை விட நன்றாக குழுவை வழி நடத்துகிறாய், நிர்வகிக்கிறாய் என்று துணை இயக்குனர் ஆக்கினார் எனது மேற்பார்வையாளர்! 

அதில் மக்களையும், அதிகாரத்தையும் எப்படி இயக்குவது என்ற பாடம்! 

அதற்குப் பிறகு உள்ளிருந்து குரல், பணம், பணம் என்று ஓடிக் கொண்டிருக்காதே! மனதிற்குப் பிடித்ததை மாத்திரம், மற்றவர்களுக்குத் தேவையானதைச் செய், திருப்தியும் சந்தோஷமும் தராத எதையும் வலுக்கட்டாயமாக செய்வதில்லை, எதற்குப் பின்னாலும் ஓடுவதில்லை என்ற முடிவு! 

உணவு உற்பத்தி ஆனால் சூழலிற்கு பாதிப்பில்லாத உணவு உற்பத்தி முறை என்றார் நண்பர் ஒருவர்! படித்த சூழலியல் விஞ்ஞானத்திற்கு ஒத்திசைவான இயற்கை விவசாயம்! புதர் வெட்டி, மண் கொத்தி இயற்கை விவசாயம்! எப்படி இலங்கைச் சூழலுக்கு உகந்த பண்ணை இயற்கை விவசாய மாதிரியை (farming model) உருவாக்குவது என்ற முயற்சி! இந்தத்திட்டத்தில் யானைகளும், மாடுகளும், மனிதர்களும் தந்த விரக்தி ஒருகட்டத்தில் எல்லாம் சூனியம் என்ற நிலை! பெரிய கம்பனியில் வசதியாக இருப்பதை விட்டு விட்டு விசர் வேலை என்ற பேச்சு! 

ஒருவனுக்கு உதவக்கூடிய அதியுயர் உதவி அவனிற்கு அவனைப் புரியவைக்கக்கூடிய அறிவினைத் தருவது! அது யோகத்தத்துவம்! மனதை, உடலை, எம்மை இயக்கும் பிராணசக்தியைப் பற்றிப் புரிந்து கொள்வது! இதை சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் தேவையான வகையில் அறிவைப் பகிர சிருஷ்டி என்ற நிறுவனம்! 

இப்போது பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்துவிட்டு அடுத்து என்ன என்று சிந்திக்கும் இளையவர்களை சரியான இடத்திற்கு சேர்க்கும் வழிகாட்டியாக புது அவதாரம்! 

கடைசியாக யாராவது என்னைப்பற்றிக் கூறுங்கள் என்று கேட்டால் ஒருகணம் குழம்பிப் போய் எதைச் சொல்லுவது என்று சில நிமிடங்கள் யோசித்து அவர்களுக்கு ஏற்ற வகையில், 

நான் ஒரு சூழலியலாளன்

நான் ஒரு சித்த ஆயுர்வேத வைத்தியன்

நான் ஒரு நிறுவன இயக்குனர்

நான் ஒரு இயற்கை விவசாய ஆராய்ச்சியாளன்

நான் ஒரு வியாபார ஆலோசகன் 

நான் ஒரு யோக ஆசிரியன் 

நான் ஒரு எழுத்தாளன் 

நான் ஒரு குருபரம்பரையைச் சேர்ந்த சாதகன்

நான் ஒரு தேவி உபாசகன் 

பட்டதாரிகள் ஒன்றியத்திற்கு ஆலோசகனாக இருக்கிறேன்

இன்னும் பல....

இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி கடந்து போகப் பார்க்கிறேன்! இப்படிச் சொல்லும் போது உள்ளே சிரித்துக்கொள்வேன் அடுத்த சில வருடங்களில் இந்தப்பட்டியலில் வேறு சிலது சேர்ந்திருக்கும் என்று!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...