குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 01, 2020

ஜெப சாதனைக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதே காரணம் என்ன?



ஒரு சிரேஷ்ட சாதகரின் கேள்வி;
ஐயா தங்கள் இரு தினங்களுக்கு முன் லகு அனுஷ்டானம் பற்றி ஒரு சாதகர் உடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அதில் அவர் ஐந்து மணி நேரத்தில் 27 மாலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் அப்படியென்றால் ஒரு மணி நேரத்திற்கு 5 மாலைக்கு மேல் செய்துள்ளார் இது இவ்வளவு விரைவாக காயத்ரி மந்திரத்தை சொல்லலாமா பலன் கிட்டுமா நான் பத்து மாலை செய்வதற்கு ஆறு மணிநேரம் ஆகிறது .மேலும் நான் வார அறிக்கை தவறாமல் அனுப்பி வருகிறேன் நீண்டநாட்களாக தாங்கள் அதற்கு எந்தவிதமான பதிலும் தரவில்லை.

எமது பதில்:
இனி உங்கள் பிரதான கேள்விக்கான பதிலுக்கு வருவோம்.
  1. ஜெபம் என்பது எமது மனதில் எழும் எண்ண அலைகளை மந்திரத்தின் சொல், ஓசைகளால் பிரதியீடு செய்யும் செயல் (replacing activity).
  2. இதன் நோக்கம் எமது மூளையில், மனதில் எழும் எண்ணங்களை தெய்வ சக்தியை ஈர்க்கும் மந்திர சொற்களால் பிரதியீடு செய்து எமது மனதில் எழும் எண்ண அலைகளை குறைப்பது.
  3. சாதாரணமாக நாம் கண்டவற்றைப் படித்து, மனதை அலை பாயவைத்து, வேண்டாத செய்கை செய்து மனதில் தேவையற்ற எண்ணங்கள் எழுந்த வண்ணமாக எமது ஆழ்மனமாகிய சித்தத்தில் விருத்திகளை உருவாக்கிக் கொண்டு இருப்போம். இத்தகைய நிலையில் நாம் ஜெப சாதனை செய்யத் தொடங்குவோம்.
  4. இந்த நிலையில் ஜெப சாதனை செய்யத் தொடங்கும் போது ஒரு தடவை மந்திரம் சொன்னவுடன் மனம் தனக்கு விரும்பிய எண்ணத்தின் பின்னால் சென்று சுற்றி விட்டு அடுத்த ஜெபத்திற்கு வரும். இப்படி ஒவ்வொரு மந்திரத்திற்கும் இடையில் மனம் தனக்கு விரும்பிய இடம் எல்லாம் சுற்றி 108 முடிக்கும் போது சராசரி ஆரம்ப சாதகனுக்கு ஒரு மாலை (108) செய்து முடிக்க 20 - 30 நிமிடங்கள் ஆகிவிடும்.
  5. காலம் செல்லச்செல்ல காயத்ரி மந்திரத்தின் பிராண ஆற்றலை ஏற்கும் பக்தியும், அகப்பண்பும் இருக்குமானால் அன்னையின் புத்தியைத் தூண்டும் ஒளி எங்கள் மனதில் பாயத் தொடங்க எமது மனதின் சலனம் குறையத் தொடங்கும். இதற்கு காயத்ரி சங்கல்பத்தில் கூறப்படும் நோக்கத்தையும், சித்த சாதனையில் கூறப்படும் பண்புகளும் எம்மில் வளர்க்கும் முயற்சியும் எமது அகங்காரத்தைக் குறைந்து சாதனை செய்ய வேண்டும்.
  6. இப்படி புத்தியைத் தூண்டும் அந்தப்பேரோளி எமது மனதில் பாயத்தொடங்க எமது மனம் எண்ணச்சலனங்கள் குறைந்து ஏகாக்கிரம் அடையத்தொடங்கும்.
  7. இப்படி ஏகாக்கிரமடைந்த மனம் தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து விட்டு மந்திர ஜெபத்தில் மாத்திரம் நிலைபெறத்தொடங்க எமது ஜெபத்திற்கான கால அளவு குறையும்.
  8. இப்படி தேர்ந்த கூர்மையடைந்த ஏகாக்கிரமுடைய சாதகன் 108 தடவை ஒரு மாலை ஜெபம் செய்ய 6 நிமிடங்கள் தேவைப்படும், ஒரு மணித்தியாலத்தில் 10 - 11 மாலை செய்ய முடியும். இந்த நிலை நீண்டகாலப்பயிற்சி, சிரத்தையான மனத்தூய்மை என்பவற்றை அடைந்திருந்தால் மாத்திரமே சாத்தியம்.
  9. சிலர் விழிப்புணர்வு நழுவி துரிதமாக ஜெபத்தை முடித்துவிட்டதாக நம்புவார்கள், இடையில் தூக்கம் வந்திருக்கும். இத்தகையவர்கள் உடல் அதிக பிராண சக்தியை ஏற்க பக்குவப்படாததால் ஏற்படும் நிலை; இத்தகையவர்கள் உடல்பயிற்சி, ஆசனம், உணவு ஒழுக்கங்கள் மூலம் தமது உடலைத் தயார்ப்படுத்த வேண்டும்.
  10. உங்களுக்கு அதிக நேரம் ஜெபம் செய்வதற்கு எடுக்கிறது என்றால் மேற்கூறியதைப்போல் சித்த விருத்திகள் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
  11. சாதனை அனுபவத்தை எழுதி அனுப்பிய சாதகர் மணித்தியாலத்திற்கு 05 மாலைகளே ஜெபிக்கிறார், ஆகவே அவரது மனமும் விகல்பத்தில் சஞ்சரிக்கிறது. இன்னும் முழுமையாக ஏகாக்கிரமடையவில்லை!
  12. ஆகவே உங்களுடைய கருத்தின் தொனியில் அவர் வேகமாக ஜெபிக்கிறார் அதனால் பலன் கிடைக்காது என்ற சாதனையின் நுணுக்கம், இலக்குத் தெரியாத சாதனை அனுபவம் இல்லாதாவர்களின் கூற்றை ஒப்பிக்காமல் சாதனை என்பது மனதின் சலனத்தைக் குறைக்கும் பயிற்சி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
  13. மனதின் எண்ணச்சலனம் குறைந்தால் சரியான உச்சரிப்புடன் ஒரு மாலை அளவு 06 நிமிடங்களில் முடிக்கலாம்!
  14. ஒரு மாலை அளவினை சொல்லுவதற்கு எடுக்கும் நேரம் என்பது வேகமாகச் சொல்லுவதில் இல்லை, உங்கள் மனதில் எழும் எண்ணங்கள் ஏற்படுத்தும் தடைகளில் இருக்கிறது என்று உணருங்கள்.
  15. உதாரணம் கூறுவதாக இருந்தால் மைலாப்பூரிலிருந்து மீனம்பாக்கம் போவதற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரம் என்றால் வெறும் 20 நிமிட பயணம் மாத்திரமே! ஆனால் peak hours இல் இரண்டு மணி நேரம் பிடிக்கும். தூரம் மாறவில்லை, நெரிசல் எமது வேகத்தைக் குறைக்கிறது. இதைப்போல் மந்திரங்களில் உள்ள அட்சரங்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரே அளவு நேரத்தில்தான் உச்சரிப்பார்கள், ஒரு சில மாத்திரைகள் (செக்கன்) கூடிக்குறையலாம். அதிக நேரம் எடுப்பதற்குக் காரணம் மனம் எங்காவது ஊர்வம்பு அளக்கப்போய்விடுவதே 😂🤣😁
  16. இந்தப்பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு சாதனையைத் தொடர்ச்சியாகச் செய்வதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை, தொடர்ச்சியாக்ச் செய்யும் போது எப்போதாவது அன்னையின் திருவருள் மனதில் ஒளி பாய்ச்சும் போது எமது மனச்சலனம் குறைந்து சாதனையில் முன்னேறுவோம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...