குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 08, 2020

சாதனை முன்னேற்றம்

அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம்.
காயத்ரி சாதனா குரு அகத்தியர் சாதனா தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது பயணங்கள் தொடர்கிறது. ஆரம்பத்தில் நீங்கள் 27 தடவைகள் செய்ய சொன்னீர்கள் ஆரம்பத்தில் 27ம் மிக கஷ்டமாக இருந்தது அடுத்து மாலையை அதாவது 108 செய்ய சொன்னீர்கள் அப்போது 108 செய்யத் துவங்கும்போது அந்த 27 மிக இலகுவாக இருந்தது நவராத்திரி நாட்களில் 10 மாலை சொன்னீர்கள் பத்துமாலை செய்யும்போது இந்த 108 மாலை வந்து இலகுவாக இருந்தது லகு அனுஷ்டானம் என்று 27 மாலை சொன்னீர்கள் 10மிக மிக இலகுவாக இருந்து. ஆரம்பத்தில் சாதனை செய்யும் போது குறிப்பிட்ட நேரத்தில் செய்வதற்கு என்னுடைய நேரமும்,மனமும், வேலைப்பளுவின் காரணமாக மிக சிரமத்தில் இருந்தோம் மீண்டும் ஒரு மூன்று மாதம் செய்யத் தொடங்கும்போது இயற்கையாகவே எங்களுக்கு ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது இவற்றுக்கான காரணம் என்ன அண்ணா காயத்ரி தேவியின் அருளா சாதனையின் ஒரு படிநிலை உயர்வா அவ்வாறு இது நிகழ்ந்தது தயவு செய்து சொல்லவும்!

இதற்குரிய அறிவியல் காரணம் நாம் புதிதாக ஒரு விஷயத்தைச் செய்யும் போது அந்த அனுபவம் மூளையில் தனக்குரிய பாதையை புதிதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு குறித்தளவு காலம் மனம் குறித்த விஷயத்தில் பழகியிருக்க வேண்டும். இந்தக்காலப்பகுதியில் மூளைக்கு அழுத்தம் கொடுக்காமல் மெதுவாகத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
உதாரணமாக 27 தடவை தினசரி 45 நாட்கள் ஜெபம் செய்வதை முதலாவது வாகனம் ஓட்டும் வகுப்பிற்குச் செல்வதை உதாரணமாகக் கொள்ளுனகள், இப்போது உங்களுக்கு steering, break, clutch balance, mirror ஆகியவற்றுடன் பரிட்சையமான நிலை உருவாகியிருக்கும், இதுவே முதலில் 45 நாட்கள் தொடர்ச்சியாகச் செய்யுங்கள் என்று சொல்வதன் காரணம்! இந்த நாற்பத்து ஐந்து நாட்களுக்குள் மனம் ஒன்றி உங்கள் மூளை சாதனையின் அங்கங்களை விரும்பினால் இனி நீங்கள் வேகத்தை அதிகரிக்க accelerator இனை அழுத்தலாம். ஆகவே அடுத்த 45 நாட்கள் 54 எண்ணிக்கை செய்து வாருங்கள் என்று சொல்லுகிறோம். ஆரம்பத்தில் 10 km வேகத்தில் ஓட்டிப்பழகிய உங்களில் இப்போது 20 Km வேகத்தில் ஓடப் பழக்குவது போன்றது. இப்படி உங்களுக்கு தைரியம் வரும் வரை செய்யசொல்லி தைரியம் வந்தபின்னர் 108 இல் ஓடச் சொல்லுகிறோம்.
தினசரி 108 செய்யச் சொல்லுவது என்பது இப்போது நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் வரை தைரியமாக சென்று வரலாம், சற்று வேகமாகவும் ஓட்டலாம் என்பதற்குரிய பயிற்சி! ஆனால் தேர்ந்த ட்ரைவர் போல் 10 மணித்தியால் தொடர்ச்சியாக நீண்டதூரப் பயணம் செய்யக்கூடாது!
இப்படி சிறுதூரம் நீண்ட நாட்கள் ஓட்டப் பழகிய பின்னர் நீண்ட பயணத்திற்கு பழக்குவதற்காக லகு அனுஷ்டானம் செய்யச் சொல்லுகிறோம். இப்போது நீங்கள் சிறிது அதிக தூரம் ஓடப்பழகி இருப்பீர்கள், நன்கு வாகனம் ஓட்டக்கூடிய அனுபவஸ்தர் என்று அர்த்தம், அதுபோல் லகு அனுஷ்டானம் செய்யும் ஆற்றல் வந்தால் உண்மையில் சற்று அனுபவமான சாதகர் என்ற அளவில் உங்கள் மூளை, உடல், அந்தக்கரணங்கள் தயாராகியிருக்கும்.
சாதனை என்பது உடல் என்ற வாகனத்தில் குண்டலினி எனும் சக்தியை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு கொண்டு செல்லும் பயணம். இதிற்கு உடலை, மனதை, அந்தக்கரணங்களை, நாடிகளை சரியாக சுத்தி செய்வதற்கு நீண்டகால, பலமான அத்திவாரத்துடன் பொறுமையாகக் கட்டியெழுப்ப்பும் முறையையே சாதனை என்று சொல்லுகிறோம்.
லகு அனுஷ்டானம் முடித்து பின்னர் 45 நாட்களில் 125,000 செய்யும் பண்பினைப் பெற்றால் இந்தப்பயணத்தை இன்னும் துரிதப்படுத்தலாம்.
இப்படி மனதையும், உடலையும், குறிப்பாக உங்கள் மூளையையும் மெதுவாக கெடுத்துவிடாமல் அத்திவாரத்திலிருந்து கட்டமைக்கும் முறையையே சாதனையாகச் சொல்லித்தருகிறோம்.
மூன்று மாதங்கள் சென்றபின்னர் இயற்கையாகவே உங்களுக்கு நேரம் இருப்பதற்குக் காரணம் உங்கள் மூளையில் - மனதில் இருந்த தேவையற்ற எண்ணங்களுக்கு செலவாகும் நேரம் தற்போது மிச்சமாகி இருக்கும். தேவையற்ற எண்ணங்களில் மனம் ஆர்வம் கொண்டு நேரத்தை வீணாகாமல் மனம், மூளை மீள் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
10 மாலைகள் செய்ய முடிகிறது என்பது நிச்சயமாக ஒரு சிறந்த முன்னேற்றமே! ஆனால் சாதனையில் நாம் முன்னேறிவிட்டோம் என்று பூரிப்படைவது அகத்தியர் யோக ஞானத்திறவுகோலின் முதல் உபதேசத்தில் வரும் "மதிகெட்டு விள்ளாதே மனமிக மகிழ்ந்திடாதே" என்ற வரிகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஏனென்றால் சாதனை மிக நீண்ட பயணம், பல பிறப்புக்கள் பொறுமையாக முயற்சித்து பயிற்சியுடன் முன்னேறவேண்டியது!
ஆகவே நீங்கள் அடைந்திருப்பது மிக நல்ல முன்னேற்றம், ஆனால் பயணம் இன்னும் இருக்கிறது என்பதை ஞாபகத்திலிருத்தி சாதனையைத் தொடருங்கள்
இறுதியாக இது காயத்ரி தேவியின் அருளா என்ற கேள்விக்குப் பதில்; அன்னையின் அருள் எறும்பு முதலான சாதனை செய்பவர், செய்யாதவர்கள் அனைத்தின் மீதும் படர்ந்து கொண்டிருக்கிறது; நாம் சாதனையினால் எமது பரிணாமத்தை உயர்த்தும் செயலில் பக்குவப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம்! எங்களுக்கு மாத்திரம் அன்னையின் அருள் கிடைக்கவில்லை! நாம் குருவின் அருளால் சாதனையால் பரிணாம உயர்விற்கு பயன்படுத்தும் அளவிற்கு தகுதியடைந்திருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...