குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, December 16, 2018

நுண்ணறிவும் உணர்ச்சிகளும்



மனிதன் மனம் இருவகைத்தன்மைகளைக் கொண்டு இயங்குகிறது.

ஒன்று நுண்ணறிவு (Intelligence) மற்றது உணர்ச்சிகள் (emotions).

முனையது மனதை ஏன் இப்படி நடக்கிறது? எதற்காக இப்படி நடக்கிறது? இது சரியா? இது பிழையா? இதன் விளைவு என்ன? இப்படியெல்லாம் சிந்திக்கும். தர்க்க ரீதியாக சிந்திக்கும். இதை சித்தர்களின் தத்துவத்தில் அந்தக்கரணங்களின் ஒன்றான "புத்தி" என்று சொல்லுவார்கள்.


மற்றைய உணர்ச்சி என்ற பகுதி ஹ்ருதயத்தி பகுதி எனப்படுகிறது. இந்த உணர்ச்சி என்ற பகுதியே பிரபஞ்சத்துடன் சம நிலை கொள்ள உதவுகிறது. அன்பு, காதல், கருணை, பாசம், பரிவு, பக்தி, கோபம், பொறாமை, குரோதம், வஞ்சகம் இவை எல்லாம் உணர்ச்சிகளின் கூறுகள்.

மனதின் இயக்கத்தில் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயற்பட முடியாமல் இருப்பதாலேயே பலரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

நுண்ணறிவின் நல்ல பக்கமே உலகை செழிப்பாக வைத்திருக்கிறது. கெட்ட பக்கம் அசுரத்தனத்தை அதிகரிக்கிறது. நல்ல பக்கத்தை மனித குலத்திற்கு பயனளிக்கும் அறிவியலாகச் சொல்லலாம். கெட்ட பக்கத்தை அந்த அறிவியலை சுய நலத்திற்காக வியாபாரமாக்கும் தந்திரத்தை உதாரணமாக கொள்ளலாம்.

உணர்ச்சிகள் செயற்படும் போது நுண்ணறிவு செயற்படாது. அதனாலேயே பலரும் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்து விட்டேன் எனக்கூறுகிறார்கள்.

மனதை இந்த இரண்டு நிலைகளிலும் சரியாக இயக்கத்தெரியாதவர்களே வாழ்வில் இன்பத்தை தொலைக்கிறார்கள்.

நுண்ணறிவு பகுதியை அதிகம் இயக்குபவர்கள் எல்லாவற்றிற்கும் ஏன், எதற்கு என்று கேட்டு மற்றவர்களை சங்கடப்படுத்தும் சந்தேக பிராணிகளாக இருப்பதைக் காணலாம், அதே ஏன் எதற்கு அறிவியல் வளரவும், நல்ல முகாமைத்துவத்திற்கும் உதவுகிறது.

இதைப்போல் நுண்ணறிவு இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்படுபவர்களும் வாழ்வில் அடிக்கடி தவறு செய்து விட்டு வருந்தி தன்னை தாழ்த்திக்கொள்பவகளாக இருப்பதைக் காணலாம்.

வாழ்வில் அரசியலில், வியாபாரத்தில், கல்வியில் நுண்ணறிவைக் காட்டும் அதேவேளை உறவுகளில், குடும்பத்தில், சமூகத்தில் சரியான அன்பு, பாசம், பரிவு போன்ற உணர்ச்சிகளை காட்டும்போது சமூகம் வளம் பெறுகிறது.

இன்று அரசியலில் நுண்ணறிவு தேவைப்படும் இடத்தில் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது.

அன்பும், பாசமும், பரிவும் காட்டப்படவேண்டிய குடும்பத்தில் ஏன், எதற்கு என்ற கேள்விகள் சந்தேகத்தை தூண்டுகிறது.

ஆக ஒருமனிதன் தனது மனதின் நுண்ணறிவையும், உணர்ச்சியையும் சரியான விகிதத்தில் எப்படி எங்கே பயன்படுத்துவது என்ற அறிவே ஒருவனுக்கு தேவையான கல்வியாகும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...