குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 23, 2018

ஜோதிஷ சிந்தனை: இஷ்ட பலம்/கஷ்ட பலம்


இஷ்டபலம் என்பது கிரகம் சாதகனில் இருக்கும் நல்ல காரகத்துவத்தை செய்யக்கூடிய ஆற்றலை அளவிடும் முறை.

கஷ்டபலம் என்பது கிரகம் சாதகனில் இருக்கும் கெட்ட/தீய பலங்களை செய்யக்கூடிய ஆற்றலை அளவிடும் முறை.

இது கணித எண்ணிக்கை மூலம் அளவிடலாம்,

இவை இரண்டு காரணிகளில் தங்கியுள்ளது:
1.      சூரியனிலிருந்து இருக்கும் தூரம்: கிரகங்களில் தந்தை சூரியன், சூரியனிலிருந்து அதிக தூரம் செல்லும் கிரகங்கள் அதிக இஷ்டபலத்தை பெறும். இதன் அடிப்படை தந்தையிற்கு அருகில் இருக்கும் மகன் எப்படி தந்தையின் புகழில் அவனது ஒளி வீசவதில்லையோ, அதைப்போல் சூரியனை நெருங்கும் கிரகங்கள் தமது ஒளியை இழந்து சூரியனின் ஒளியில் மறைந்து விடும். ஆக கிரகங்கள் சூரியனிலிருந்து விலக தமது ஒளியில் பிரகாசிக்க ஆரம்பிக்கும். அதைப்போல் வக்ரகதி அடையும் கிரகங்களும் சூரியனை விட்டு அதிகம் விலகி நிற்பதால் அவை அதிக இஷ்ட பலம் பெறும்.
2.      கிரகங்கள் உச்சம் பெறும் புள்ளிகளிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டு, உச்சப்புள்ளிக்கு அருகில் நிற்பது அதிக இஷ்ட பலத்தையும், குறைந்த கஷ்டபலத்தையும் தரும்.
3.      இவை இரண்டும் சேர்ந்து இஷ்ட பலம் கஷ்ட பலத்தை தீர்மானிக்கிறது. மேலும் குறைந்த இஷ்ட பலம் என்றால் அதிக கஷ்டபலம் என்று சொல்ல முடியாது. இரண்டும் வெவ்வேறு கணிதம்.
4.      இவை ஷட்பலத்திலிருந்து கணிக்கப்படுவதல்ல.
5.      தரப்படும் புள்ளிகள் 0 – 60 இற்குள் இருக்கும்.
6.      ராகுவும் கேதுவும் இந்த கணிதத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
7.      அதிக இஷ்ட பல கிரகங்கள் தமது தசா புத்தி காலங்களில் தமது பலன் கள் தருவதை நிச்சயமாக்கும்.
8.      அதிக கஷ்டபலம் உள்ள கிரகங்கள் குறித்த தசாபுத்திகளில் அதிக இடைஞ்சல்களை ஏற்படுத்தும்.
9.      இறுதி விளைவைத் தீர்மானிக்குமா இல்லையா என்பதை இஷ்டபலமோ, கஷ்ட பலமோ கூறாது, குறித்த கிரகத்தின் காரகத்துவத்தினை அடைவதற்கான வழி இலகுவானதா, கஷ்டமானதா என்பதையே கூறும்.
10.  இறுதிப்பலனை தீர்மானிப்பதை கிரகத்தின் செயல்பாடு, ஷட்பலம், யோகங்கள், என்பவை தீர்மானிக்கும். இவை சரியாக இருந்தால் அந்த திசையில் நல்ல பலன் களைக் கொடுக்கும்.
11.  இஷ்ட பலம் குறைவாக இருக்கிறது என்றால் அந்தக்கிரகத்திற்குரிய காரகத்துவங்களின் பலங்களை அடைவதில் அதிக முயற் சிதேவை, அல்லது ஆரம்பத்தில் இலகுவான பாதையாக தென்படாது என்பதே இதற்கான விளக்கம்.
12.  இதற்கு மாறாக கிரகம் தீயகாரகத்துவத்திற்கு அதிபதியாக இருந்து குறைந்த இஷ்டபலத்தைக் கொண்டிருந்தால் அதன் திசாபுத்தியில் குறித்த பாவத்திற்குரிய காரகத்துவத்தை இல்லாதாக்கும்.
13.  இஷ்டபலம் 12 இற்கு குறைவாக இருத்த்தல் மிகக்குறைவு, 30 சராசரியாக நன்று, 45 மேல் மிகச்சிறப்பு.



No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...