குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 11, 2018

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making


முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல்.
முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்:
1) இரண்டு அல்லது அதற்கு அதிகமான தெரிவுகள் காணப்படும்
2) ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவிற்கு மேலதிகமான அபிப்பிராயமாக இருக்கும்.
3) பணம், மனிதவளம், நேரம் என்பவை அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.

முடிவெடுக்கும் சூழல்கள்
கட்டாயம் நாம் முடிவெடுக்கும் போது அதிக பட்ச சாதகமான சூழ் நிலை இருக்க வேண்டும். எவ்வாறாயினும் நாம் முடிவெடுக்கும் போது கீழ்வரும் மூன்று சந்தர்ப்பங்கள் காணப்படும்.
1. நிச்சயத்தன்மை: நாம் எடுக்கும் முடிவு நாம் எதிர்பார்க்கும் விளைவைத்தரும் என்ற நிலை. முடிவெடுப்பதற்கு தேவையான அனைத்து தகவல்களும் எம்மிடம் இருக்க வேண்டும். 
2.ஆபத்து: எம்மிடம் முழுமையான தகவல்கள் இல்லை, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுக எதிர்பார்க்கும் விளைவுகளில் இருந்து விலகிச் செய்யக்கூடிய நிகழ்தகவு
3. நிச்சயமற்ற சூழல்: இந்த நிலையில் முடிவிற்கான தகவல்கள் மிக மிகக்குறைவு, முடிவுகளின் விளைவுகளை எதிர்வு கூற முடியாது, எம்மிடம் உள்ள தகவல்கள் நம்பகமானவை அல்ல. எமது அக உணர்வில் எடுக்கப்படும் முடிவுகள்.
முடிவுகளின் வகைகள்
1) நிரற்படுத்தபட்ட முடிவுகள்: இவை அன்றாட நிரற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட பொது முடிவுகள்.
2) நிரற்படுத்தப்படாத முடிவுகள்: இத்தகைய முடிவுகள் இதற்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்காது, ஆகவே இருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு தர்க்க ரீதியான, வினைத்திறனான முடிவுகளை தற்போது எடுக்க வேண்டும்.
3) துணைத்தெரிவுகள்: இவை உண்மையில் முடிவுகள் அல்ல, சூழ் நிலையை சமாளிப்பதற்காக எடுக்கப்படும் தெரிவுகள். பெரும்பாலும் சூழ் நிலை அராஜகமாக இருக்கும்போது அந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்காக எடுக்கப்படும் தெரிவுகள்.
முடிவுகளுக்கான மாதிரியுருக்கள்
பகுத்தறிவைக் கொண்ட காரணம் சார் முடிவுகள்
கோட்பாட்டு ரீதியில் எப்போதும் நாம் முடிவுகள் பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட காரணம் சார் முடிவுகளையே எடுக்க வேண்டும். இத்தகைய முடிவெடுத்தலுக்கு பலவித காரணிகள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். அதற்கான படிமுறைகள் வருமாறு;
1. பிரச்சனை அடையாளம் காணல்
2. அதற்குரிய தீர்விற்கான காரணிகளை அடையாளப்படுத்தல், அந்தக்காரணிகளின் பங்களிப்பு வீதத்தினை அடையாளம் காணல்
3. அவற்றிற்குரிய போதுமான தகவல்களை சேகரித்தல்
4. மாற்று தீர்வுகளை உண்டாக்கல்
5. மாற்றுத்தீர்வுகளை ஆராய்தல்
6. அவற்றுள் சிறந்த தீர்வினை தெரிவு செய்தல்
7. சிறந்த தீர்வினை நடைமுறைப்படுத்தல், கண்காணித்து அதன் வினைத்திறனை அறிதல்.
இந்த படிமுறைகள் கீழ்வரும் அனுமானங்களை கொண்டிருக்கும்:
1. பிரச்சனை குறிப்பிடத்தக்க தெளிவானது,
2. மாற்றுத்தெரிவுகள் உள்ளது
3. தெளிவாக காரணிகளை அடையாளம் காணலாம்
4. காரணிகள் உறுதித்தன்மை உள்ளது
5. குறைந்த நேரமும், செலவும் உடையது
6. அதிக இலாபமுடையது

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...