குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 14, 2018

முத்தி நெறி அறியாத மூர்க்கரும் சிவமாகலாம்!

முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல் வேனைப்
பத்தி நெறியறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் 
சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கியெனை ஆண்ட 
அத்தனெனக் கருளியவாறார் பெறுவார் அச்சோவே

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு சகவாசத்தை கொண்டிருந்த என்னையும் உன்மீது சரணாகதி அடைய செய்யும் பக்தி நெறியை நீயே அறிவித்து உன்னை அடைய தடையாக இருக்கும் எனது சித்தத்தில் உள்ள பழம் வினைகளையெல்லாம் நீயே அறுத்து, என்னையே சிவமாக்கி, என்னை ஆண்ட இந்தப் பேறு உனது அருள் இல்லாமல் கைகூடாது இத்தகைய பேறு யாருக்கு கிடைக்கும் என்று சிவபோகம் அனுபவித்த இன்பத்திளைப்பில் பாடிய பாடல் இது! மாணிக்கவாசகர் எவருக்கும் மூர்க்கரொடு முயலக்கூடாது என்று கூறவில்லை, மாறாக அத்தகைய மூர்க்கரொடு இருப்பவனாக இருந்தாலும் அத்தன் அருள் இருந்தால் சிவமாகலாம் என்கிறார். ஆக அவர்கள் எளிமையாக எல்லோரும் சிவத்தின் அருள் இருந்தால் சிவமாகலாம் என்று நம்பிக்கை கொடுத்து சென்றிருக்க நாம்தான் இது பிழை இதுசரி என்று வாதிட்டுக்கொண்டிருக்கிறோம். 😋


இந்தப்பாடல் தெரிவிக்க வரும் கருத்து ஒருவனை ஆன்மீக ரீதியிலும் மனவியல் ரீதியிலும் வலிமையுள்ளவனாக மாற்றும். இன்று பலரும் தமது பிரச்சனைக்கு தாமாக விடை கண்டுவிடலாம் என்று பலவித வியாக்கியானம் கொடுத்துக்கொண்டு அதே பிரச்சனையில் சக்கர வியூகத்தில் சிக்கிய மனிதனாக பிரச்சனையில் இருந்து வெளிவரமுடியாமல் தடுமாறிக்கொண்டு வாழ்வை துன்பமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இங்கு மாணிக்கவாசகர் சொல்லும் மனவியல் உத்தி மிக உயர்ந்த ஆலோசனை; நீ மூர்க்கருடன் சகவாசம் செய்யும் மூர்க்கனாக இருந்தாலும் உன்னைப் பற்றி தாழ்மையாக எண்ணி தாழ்ந்து விடாதே! எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று சரணாகதி அடையும் மனப்பண்பு உனக்கு இருக்குமாக இருந்தால் அந்த இறைசக்தி உனது வினைகள் துன்பங்கள் எல்லாம் அறுத்து உன்னையே சிவமாக்கும்! நீயே சிவமாகி விட்டால் வாழ்வு இன்ப மயமாகும்!

ஆக உனது சிற்றறிவால் உன்னை நீயே வட்டத்திற்குள் அடைத்துக்கொண்டு பாவி, மூர்க்கன் என்று தாழ்த்தி விடாதே என்று கூறுகிறார்.


இதைத்தான் இன்று மேலை நாட்டு உளவியலாளர்களும், தலைமைத்துவ பண்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் Leadership, self esteem, self confidence என்றெல்லாம் பலவாறாக கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...