குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 18, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 05: யோகமும் ஆன்மீகமும்

இன்று யோகா, யோகம் என்பது உலக பிரபலமான ஒன்றாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மன அழுத்ததிற்கும், சக்கரை நோய்க்கு, உடல் பருமனுக்கு என்று யோகா விளம்பரப்படுத்தப்படுகிறது. இதுவா யோகம்?

இல்லை!

யோகம் என்பது சமஸ்க்ருதத்தில் யுஜ் என்ற சொல்லில் இருந்து பரிணமித்த சொல். இந்த சொல்லின் பொருள் இணைதல். எதனுடன் இணைதல்? மனித உடலில் உணர்வு சக்தியாக இருக்கும் ஆன்மா அதன் உண்மை ஸ்வரூபமான பரமான்மாவுடன் இணைதலே யோகம்.
இது எப்படி சாத்தியம்?

ஒருவன் தன்னில் அந்த பரமான்மாவின் குணத்தை தன்னில் உருவாக்கி, அதை தினசரி செயலில் கொணர்ந்து, தனது பண்பாக மாற்றினால் மட்டுமே இந்த இணைவு சாத்தியம்.

ஆக நாம் யோகம் செய்கிறோம் என்று செய்யும் எல்லா பயிற்சிகளிலும் இது நடைபெறுகிறதா என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக ஒரு மனிதன் இறைவனைக்காண்கிறான் என்பது தன்னில் அந்த தெய்வத்தின் நற்குணங்களையும் தனது ஆளுமையில் அந்த பண்புகளையும் உருவாக்குகிறான் என்பதே அர்த்தம் அன்றி கற்பனை காட்சிகளை காண்பதோ, வேடங்கள் போட்டு தன்னை ஆன்மீகத்தில் உயர்ந்து விட்டதாக கற்பித்துக்கொள்வதோ அல்ல.

கடவுளின் எல்லையற்ற குணங்கள் அனைத்தையும் ஒருவன் தன்னில் உருவாக்கி கொள்வது என்பது உண்மையில் சாத்தியமற்றது. ஆகவே ஒருவன் விராட் பிரம்மம் என்ற கடவுளின் குணங்களும், பண்புகளும் நிறைந்த பிரபஞ்சத்தையும், நாம் வாழும் இந்த பூமியின் இயற்கையை விஸ்வ பிரம்மமாகவும், இவற்றிலும் தன்னிலும் ஓடும் உயிர்ப்பை ஜீவபிரம்மமாகவும் உணர்ந்து பழகுதலே யோகம்.

சுருக்கமாக யோகம் என்பது எமது நான் என்ற எண்ணத்தை விரிவடையச் செய்து பிரபஞ்சத்தில் உள்ளவற்றை தன்னில் ஒரு பாகமாக பார்க்கும் சரியான மனப்பாங்கினையும், தனக்கு மட்டும் செயல்புரியாமல் மற்றவர்களுக்காகவும் செயல்புரியும் பண்பினையும் உருவாக்கும் செயல்முறை என்பதே யோகத்தின் உண்மை விளக்கம்.


1 comment:

  1. ஒருவன் தன்னில் பிரம்மத்தை உணர வேண்டும்...

    தனது வாழ்க்கை உலகத்திற்கைகவே என புரிந்து வாழ வேண்டும் என புரிகிறது ஐயா..

    இதுவே கிட்டத்தட்ட சித்தர் தன்மை எனவும் தெரிகிறது ஐயா

    மிக்க நன்றி

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...