குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 10, 2016

வானியல் விளக்கம் - பகுதி 01

ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் வானியலின் புரிதல். பண்டைய இந்திய ரிஷிகளின் சமூகத்தில் வானியலும், வானியல் தாக்கத்தால் ஏற்படும் மனிதனின் வாழ்க்கையும் மிக அரிய விஞ்ஞானமாகும். ஜோதிடர் என்று கூறுபவரின் அடிப்படை அறிவு வானியலில் இருக்க வேண்டும். பண்டைய ஜோதிடர்கள் என்று கூறப்படும் ரிஷிகள் பூமியின் சுழற்சி, கால நிலை மாற்றங்கள், பூமியில் ஏற்படும் அசாதாரண நிகழ்வுகள், சந்திர சூரியரின் இயக்கம், இரவு, பகல் என்பவற்றின் கால அளவு, கிரகங்களும், நடச்சத்திரங்க்களும் வானத்தில் இணைவதால் ஏற்படும் சூக்ஷ்ம மாற்றங்கள் என்பன பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து தமது அறிவை தொகுத்து இருந்தனர். இதில் ஆச்சரியமான விடயம் என்ன வென்றால் இன்று காணப்படும் சிக்கலான தொலைநோக்கிகள், ரொக்கெட் தொழில் நுட்பம் என்பன இல்லாமல் இவற்றை துல்லியமாக கணித்து கூறியமையாகும். 

பூமியை மையமாக கொண்ட கணிதம் 

ரிஷிகள் இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் இடைவிடாமல் இயங்குவதை நன்கு அறிந்திருந்தார்கள். இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இயங்காமல் இருப்பதில்லை என்ற அறிவு அவர்களுக்கு இருந்ததால், தமது கணிப்புகள் தமக்கு தூரமான ஒன்றை அசையாதது என்று அனுமானித்துக்கொண்டு கணிப்பது கஷ்டம் என்பதனை அறிந்திருந்தார்கள். ஆகவே சார்பு இயக்கம் ஒன்றின் மூலமே விடயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்ற தெளிவை அவர்கள் பெற்றிருந்தார்கள். தாம் வசிக்கும் பூமியை மையமாக வைத்துக்கொண்டு தம்மை சுற்றியுள்ள அண்மித்த கிரகங்களதும், நட்சத்திரங்களதும் தாக்கம் எப்படி பூமியில் வாழும் உயிர்கள் மீதும், இயற்கை மீதும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதனை கணித்தார்கள். ஆகவே இந்திய வானியலினதும், ஜோதிடவியலதும் கணித அடிப்படை பூமியை மையமாக கொண்டது. இது பூமியை பிரபஞ்சம் சுற்றுகிறது என்ற பண்டைய மூடநம்பிக்கை இல்லை. நவீன வானியல் சூரியனை மையமாக கொண்ட வானியல், ஆனால் ஜோதிடத்திற்கு பயன்படுத்தும் வானியல் பூமியை மையமாக கொண்ட சார்பு கணிதமாகும். ரிஷிகள் சூரியன் கோள்மண்டலத்தின் மையம் என்பதை ஏற்றுக்கொண்ட அதேவேளை அந்த கோள்களின் பூமி மீது, மனிதன் மீதான தாக்கம் எப்படி என்பதிலேயே கவனம் செலுத்தி இருந்தனர். 

அதேபோல் வான மண்டலத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் அசைந்தாலும் துருவ நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்கள் சார்பாக அசையாமல் இருப்பதாக கொள்ளப்படுகிறது. 

இராசி மண்டலம் : வானத்தில் 180 டிகிரியில் ஒரு வளையம் கிழக்கில் இருந்து மேற்கு திசையில் செல்வதாக கற்பனை செய்யவும். இந்த வளையத்தில் ஒழுங்கில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களின் கூட்டம் பூமியின் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்துவதாக கண்டறிந்தார்கள். நக்ஷ + ஸ்திரம் என்றால் அசையாமல் இருப்பது என்று பொருள். இந்த வளையத்தில் காணப்படும் நட்சத்திர கூட்டத்தின் பெயர் இராசி மண்டலம் எனப்படும். இந்த இராசி மண்டலத்தை அளவை புள்ளியாக வைத்துக்கொண்டு வானத்தில் இருக்கும் கிரகம், ஏனைய நக்ஷத்திரங்கள் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும். இந்த வளையம் முழுமையாக 360 பாகையினை கொண்டிருக்கும். ஒவ்வொரு நட்சத்திரமும் 13'20' அளவினை கொண்டிருக்கும். இதன் படி மொத்த நட்சத்திர மண்டலமும் இருபத்தியேழு நக்ஷத்திரங்களை கொண்டிருக்கும். 

நக்ஷத்திர மண்டலம் நிலையாக திரை போல இருக்க அந்த திரையில் அசையும் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் வான்போருட்கள் கிரகங்கள். இவை இராசி மண்டலத்தின் மேற்கிலிருந்து கிழக்காக அசையும். கிரகங்கள் என்ற பெயரில் ஒரு விளக்கம் இருக்கிறது. கிரகம் என்றால் கௌவ்வி பிடிப்பது என்று அர்த்தம். அதாவது இராசி மண்டலத்தில் மெதுவாக நகர்ந்து நக்ஷத்திரத்தின் சக்திகளை கௌவ்வி பூமிக்கு அனுப்புவது என்று பொருள். பண்டைய இந்திய வானியலில் ஒன்பது கிரகங்கள் கூறப்படுகின்றன. அவையாவன சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது என்பன. இன்றைய வானியலில் பாவிக்கப்படும் ஆங்கிலச் சொல்லான planet என்பது சூரியனை சுற்றி நகரும் வான் பொருட்களை குறிக்கும். ஆனால் இந்திய வானியலில் குறிக்கப்படும் கிரகம் என்ற சொல் நக்ஷத்திர மண்டலத்தில் இருந்து சக்தியை ஈர்த்து பூமிக்கு செலுத்துபவற்றை குறிக்கும். இந்த விளக்கத்தின் படி கிரகங்களாக கொள்ளப்படும் ராகு, கேது என்பவை உண்மையில் கணிதப் புள்ளிகள். இவையும் பூமியில் நக்ஷத்திரங்களின் சக்தியை அனுப்புவதில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதால் அவையும் கிரகங்களாக கொள்ளப்படுகின்றன. ஆகவே இந்திய வானியல், ஜோதிடவியலின் சொற்களின் விளக்கங்களை அப்படியே புரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இந்த இராசி மண்டத்தில் சூரியன் சுற்றி வரும் பாதை சூரியப்பாதை என்று கூறப்படும். இந்த பாதை இராசி மணடலத்தை நடுவில் கடந்து செல்லும் போது 23'28' ஆல் பூமியின் மத்திய கோட்டுடன் சரிந்து காணப்படும். 

இராசிகள் 

இராசி மண்டலம் பன்னிரண்டு சம பகுதிகளாக பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு 30 பாகை பகுதியும் இராசி என்று அழைக்கபடும். ஒவ்வொரு இராசியும் இரண்டே கால் நட்சத்திரங்களை கொண்டிருக்கும். இராசி மண்டலத்தின் குறித்த நட்சத்திர தொகுதி இராசி மண்டலத்தின் தொடக்கமாக கொள்ளப்படும். இந்த புள்ளியில் இருந்து இருபத்தியேழு நட்சத்திரங்களை கொண்ட பன்னிரெண்டு இராசிகள் வகுக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் கிரகங்கள் இந்த இராசி மண்டலத்திற்கு மேலே நிற்கும் போது அவை குறித்த இராசியில் நிற்பதாக குறிக்கப்படும். 

சூரியனில் இருந்து சனி வரையிலான ஏழு கிரகங்களும் இந்த இராசிகளுக்கு அதிபதியாக குறிக்கப்படுகிறது. இதன் அர்த்தம் அந்த கிரகங்களின் மூல சக்தி குறித்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்தது என்பதாகும். உதாரணம் சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடு என்றால் சூரியனது மூல சக்தியின் தோற்றம் சிம்மத்தில் இருந்து வந்தது என்று அர்த்தம். இராகு கேதுவிற்கு வீடு இல்லை என்று கூறுவது அவை உண்மையாக் பிரபஞ்சத்தில் ஸ்தூலமாக இல்லை என்பதால் ஆகும். 

2 comments:

  1. கிரகங்கள்,நட்சத்திரங்கள் நல்ல விளக்கம் நன்றி ஐயா

    ReplyDelete
  2. தங்களின் இந்த பதிவு வேதஜோதிடத்தில் உள்ள புலமையை உணர்த்துகின்றது. தங்களிடம் சித்தவித்யா பயிலும் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    மேலும் பல அறிய வானவியல் சாஸ்திர கல்வியை எதிர்நோக்கும் அருள்முருகன்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...