குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 29, 2013

ஸர்ப்ப சக்தி எனும் குண்டலினி யோக விளக்கம் - Tamil Translation of Serpent Power of Arthur Avalon

குண்டலினி யோகம் பற்றிய மேலைத்தேய சாதகர்களின் புரிதல் -
பேராசிரியர் மொனியஸ் வில்லியமின் சமஸ்கிருத அகராதியின் படி:

தற்காலத்தில் மேற்கத்தையே ஆன்மீகர்களில் சிலர் இந்த விடயம் தொடர்பான ஆர்வத்தினைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆசிரியர்கள் இந்து தத்துவங்ககளை சரியாக விளங்கிக்கொள்ளாமலும், புரிதல் இன்றியும், தவறாக விபரித்து வருகின்றனர். இந்த நிலை இங்கு குறிப்பிடப்படும் நபர்களை மட்டும் தொடர்புடையவை இல்லை. இப்படியான நிலையினை விளங்கிக்கொள்வதற்கு கீழ்வரும் சில உதாரணங்களைப் பார்ப்போம். எல்லோருக்கும் நன் கு பரிட்சயமான சமஸ்கிருத அகராதியில்(9) சக்கரங்கள் என்பது கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது "வட்டங்கள் அல்லது உடலில் காணப்படும் ஆன்மீகம் சார்ந்த அழுத்தப்புள்ளிகள் அல்லது கைரேகையுடன் தொடர்பு பட்ட குறியீடுகள்" எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்து சக்கரங்களின் அமைவிடம் பிழையான முறையில் விபரிக்கப்பட்டுள்ளது. மூலாதாரத்தின் அமைவிடம் இடுப்புக்கூட்டின் முன் மைய பாகமுள்ள பொச்சு எலும்பிற்கு அண்மையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாதிஷ்டானம் நாபிப்பகுதியில் உள்ளதாகவும், இதய மையத்தில் அமைந்துள்ள அநாகதம் மூக்கின் அடிப்பகுதியில் உள்ளதாகவும் விபரிக்கப்பட்டுள்ளது. தொண்டைப்பகுதியில் உள்ள விசுத்தி மூளையின் முன்பகுதியில் உள்ளதாகவும், பிரம்மாந்திரம் என அழைக்கப்படும் உச்சிக்குழியில் ஆக்ஞா அமைந்துள்ளதாகவும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய ஆசிரியர்கள் இத்தகைய பெரிய தவறுகள் இன்றி தகவல்களின் சரியான தன்மையில் குறைவாக காணப்படுகின்றனர். ஆதலால் மறையியலில் குறித்த அளவு அறிவு கொண்ட ஆசிரியனாகிய நான் கூறுகிறேன் சுஷும்னா என்பது இட, பிங்கலைகள் சமப்படும் போது உருவாகும் ஒரு "சக்தி" ஆகும். அந்த நிலையில் முள்ளந்தண்டின் ஒவ்வொரு பகுதியினூடாக ஒரு மின்பொறி போன்ற சக்தி பாய்ச்சல் படைபெறும், இது சாக்ரல் பிளெக்ஸஸ் எனப்படும் மூலாதார நரம்புத்தொகுதிக்கு அண்மையில் இருந்து விழிப்படைந்து முள்ளந்தண்டு வழியாக மூளையினை அடைகிறது. இந்த சக்தி மூளையினை அடையும் போது "தான் இந்த சூன்யமான கருமையான வெளியில் பயங்கள், நடுக்கங்கள் எதுவுமற்ற, நித்தியமான உடலற்ற ஒரு ஆன்மா" என்கின்ற புதுவித அறிவினை பெறுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட ஆசிரியர் இந்த குண்டலினியின் பாய்ச்சலே நாடிகள் எனப்படுகிறது எனவும் சுஷும்னா என்பது பிரம்மாந்திரம் வரை உள்ள ஒரு நரம்புக்கலமாக குறிப்பிடுகிறார். அதுபோல் தத்துவங்கள் ஏழு எனக்குறிப்பிடுகிறார். இத்தகைய சரியற்ற தகவல்கள் நிறையவே காணப்படுகிறது. 

இது பற்றி எனது கருத்து சுஷும்னா என்பது ஒரு சக்தியோ, அல்லது எதையும் கடத்தும் ஒரு சக்தியோ அல்ல,அது மூன்று நாடிகளில் வெளிப்புறம் காணப்படும் ஒரு சுற்று, உடலில் உள்ள பிரபஞ்ச சக்தியான குண்டலினி எனப்படு சக்தி விழிப்படையும் போது அது நாடியாக இருப்பதில்லை, அது சுஷும்னாவின் உள்ளே உள்ள சித்ரினி நாடியினூடாக பயணிக்கிறது. இந்த நாடி சகஸ்ராரத்திற்கு கீழே உள்ள பன்னிரெண்டு இதழ் தாமரை சக்கரத்தில் முடிவுறுகிறது. இந்த தமரைக்கு கீழே பிரம்மாந்திரம் இருக்கிறது. இப்படியான தவறுகளை இந்த துறையில் பரீட்சயம் உள்ளவர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த யோகத்தில் எனக்கு உள்ள அறிவினை இங்கு பகிர்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆனால் நான் இங்கு பௌதீக உடற்கூற்றியல் அடிப்படையில் சக்கரங்களிப்பற்றிய பிழையான புரிதலை விளங்கிக்கொள்ள சில நவீன இந்திய ஆசிரியர்களையும் குறிப்பிட விரும்புகிறேன், இப்படிப் விளங்கிக்கொள்ள நினைப்பது தவறானது மட்டுமல்ல, விடயத்தில் இருந்து விலகிச் செல்வதற்கும் வழி கோலும். உடற்கூற்றியல் சக்கரங்களை விளங்கிக்கொள்ள முடியாது, ஏனெனில் சக்கரங்கள் உணர்வு மையங்கள், அவற்றை விழிப்படையச் செய்யும் பிராணன் பௌதீக உடலுடன் தொடர்பு பட்டது. அது அவர்கள் கூறும் விடயத்துடன் தொடர்பு பட்டது. உடலியலினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு சக்கரங்களை புரிந்துகொள்ள நினைப்பவர்கள் சரியாக புரிந்துகொள்ளமுடியாது.

2 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...