குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 30, 2020

தலைப்பு இல்லை

இலக்கினை நிர்ணயிப்பவன் அடைகிறான். இலக்கு எதுவென்று தெரியாதவன் தடுமாறுகிறான்! படிக்கும் பிள்ளைகளுக்கு தாம் அடைய வேண்டிய இலக்கு என்னவென்பதை மனதிற்குத் தெரியப்படுத்தாமல் படிப்பில் கவனம் செல்லாது! 

சாதாரண தரம் படிக்கும் பிள்ளைக்கு அதற்குப் பிறகு உள்ள அடைவுகளைப் பற்றி தெளிவிக்கும் போது கல்வியில் இன்னும் ஆர்வம் பிறக்கும்! 

இந்த அடிப்படையில் இன்று பாக்கியம் தேசிய கல்லூரி சாதாரண தர மாணவச்செல்வங்களுக்கு கல்வியின் அடுத்த நிலை என்ன என்பது பற்றிய எனது சிறிய உரை ஒன்று மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் "Digital education project" இன் ஒரு பாகமாக இன்று நடைபெற்றது. 

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஆலோசகர் என்ற அடிப்படையில் FTGM என்ன இலக்கிற்காக பணிபுரிகிறது? FTGM என்ன வலிமையை மாத்தளை வாழ் தமிழ் மாணவர்களின் கல்வியில் செய்ய முடியும் என்பது பற்றிய விளக்கத்தையும் கூறினேன்! 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியல் பீட சிரேஷ்ட விரிவுரியாளர் Dr. Nava Navaratnarajah zoom வழியாக கலந்துக் கொண்டு அருமையான ஒரு உத்வேக உரையை ஆற்றியிருந்தார்!

ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி நிசாந்தன் திட்டத்தை எப்படி மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற படிமுறைகளை விளக்கினார்! பொருளாளர் லக்ஷ்மிகாந் தொகுத்து வழங்கினார்!

ஆசிரியர்களுக்கும், அதிபரிற்கும் வலுச்சேர்க்கும், அவர்களது பிரச்சனைகளைப் புரிந்து மாணவர்கள் கல்வி மேம்பட உதவிசெய்யும், உத்வேகப்படுத்தும் ஒரு அமைப்பாக மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தனது இலக்கைக் கொண்டுள்ளது. சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தில் ஆழமான அக்கறை கொண்டுள்ளது!

நிசாந்தனும் குழுவினரும் உண்மையான செயலிலும், விளைவிலும் (action & impact) கவனம் செலுத்துகிறார்கள்! வழமையாக பாடசாலைக்கு உதவுகிறோம் என்றால் கணனி வாங்கிக்கொடுத்தோம், விளையாட்டு உபகரணம் வாங்கிக் கொடுத்தோம், படம் எடுத்தோம் என்ற மேலோட்டமான உதவி இல்லாமல் கொடுக்கப்படும் இலத்திரனியல் பாடங்களை எப்படிப் பயன்படுத்துவது? பெற்றோருக்குரிய அறிவுறுத்தல்கள்? அவர்களுக்குரிய தெளிவுபடுத்தல் என்ற வகையில் திட்டத்தை வடிவமைத்திருப்பது மிகச்சிறப்பு!


Sunday, November 29, 2020

தலைப்பு இல்லை

கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்!

கார்த்திகை நட்சத்திரம் மனித குலத்தின் அறிவு வளர்ச்சிக்கு உரிய நட்சத்திரம்! கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அலைகள் பூமியில் கலப்பதால் உருவாகும் அலைகளால் பூமியில் மனித குல அறிவு தோற்றம் பெறுகிறது என்பது மறையியல் கோட்பாடு! 

ஆறுமுகனை கார்த்திகைப் பெண்கள் சேர்த்தெடுத்து வளர்த்தார்கள் என்பதன் விளக்கம் இது தான்! 

இன்று கார்த்திகை நட்சத்திரமும் கூடி வருகிறது. 

விளக்குகள் நட்சத்திரத்தின் குறியீடு! ஒளி பரம்பொருளின் தன்மைகளில் ஒன்று! 

அகத்தில் ஒளியேற்றி எண்ணம் உயர்ந்து அறிவு சிறப்புற கார்த்திகை தீபம்!


தலைப்பு இல்லை

சில நண்பர்கள் நான் பேஸ்புக் பக்கம் வருவதில்லை வேலை பாழாகிக் போகிறது என்று புலம்புவார்கள்! 
இதைப் போல் யோகம் பழகுகிறோம் நான் இந்த உணவு உண்ண மாட்டேன், அந்த உணவு உண்ணமாட்டேன் என்று தம்மை ஏதோ உயர்ந்தவர்களாக, இவற்றிலிருந்து ஒதுங்கியவர்களாக காட்டிக் கொள்வார்கள்! 
இப்படி ஒரு பிரச்சனை தான் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தால் பிள்ளைகள் படிக்க முடியாது என்று பழி போடுவது! வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தால் பிரச்சனையில்லை! பெற்றோரும், பிள்ளைகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகியிருந்தால் தான் மிகப்பெரிய பிரச்சனை என்பது தான் உண்மை! 
ஆனால் தொலைக்காட்சியை படிப்பதற்கும் பாவிக்க முடியும்! Digital education இணைய இணைப்பு இல்லாத பெருந்தோட்டத்திற்கு எப்படி சாத்தியம் என்றெல்லாம் பாராளுமன்றத்தில் பொங்கிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருக்க இந்த இளைஞர்கள் குழு தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை என்பதை அறிந்துக் கொண்டு தொலைக்காட்சியில் Pen drive போடக் கூடிய தொலைக்காட்சிகள், இல்லாவிட்டால் DVD Player இல்லாத வீடுகள் இல்லை என்பதை ஆராய்ந்து அறிந்து அதற்கேற்ற வகையில் 100% மாணவர்களும் திட்டத்தால் பலன் பெற வேண்டும் என்று செயற்பட்டு சாதித்துள்ளனர்! 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் 
தனியே pen drive, DVD கொடுப்பது என்பதுடன் நின்றுவிடாமல் அதை எப்படிப் பாவிப்பது என்ற வழிகாட்டல், மேலும் இந்த ஒரு மாதம் தமது சீரியல் பார்க்கும் வேண்டாத வேலையை ஒதுக்கி வைக்கும் படி பெற்றோரிடம் வேண்டுதல் என்ற அடிப்படையில் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்துள்ளர்! 
நான் நிசாந்தன் PhD முடிக்கும் போது கூறியது, PhD என்பது தனிமனித வெற்றி! இந்த அறிவாற்றல் சமூகத்திற்கு பயன்பட்டு இன்னும் பல PhD கள் சமூகத்தில் உருவாகினால் தான் நாம் சமூகமாக வெற்றி பெறுவோம் என்று! அதற்கான களப்பணியை சாதாரணதர மாணவர்களை நெறிப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்திருக்கிறார்! 
இதேபோல் அண்மையில் நான் அறிந்துக் கொண்ட மலையக தமிழ் சமூகத்தின் கல்வியில் அக்கறை கொண்ட ஆளுமை கலாநிதி Nava Navaratnarajah, அறிவு மட்டத்தில் உயர் நிலை அடைந்த பின்னர் அதை மீண்டும் சமூகத்திற்கு மீள்சுழற்சி செய்து தம்மைப்போல் பலரையும் உருவாக்குவதே உண்மையான அறிவின் பெருமை! 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மாத்தளையின் பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளின் கல்வித்தரத்தினை உயர்த்துதற்கான செயற்பாட்டினை முன்னெடுக்கும் பட்டதாரிகளைக் கொண்ட தன்னார்வக் குழுவாகும்! 
இந்த model of execution அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்று!

தலைப்பு இல்லை

புதிதாக உருவாகும் இன்னுமொரு ஐந்தடுக்கு உணவுக் காடு! 
முதலாவது உருவாக்கிய ஐந்தடுக்கு உணவுக் காட்டில் இருந்து பெறப்படும் வாழைக் குட்டிகளை பெயர்த்து இந்தத் ளத்தை உருவாக்கும் முயற்சியில் எமது குழு ஈடுபட்டுள்ளது. 
இதன் மூலம் நாம் ஏற்கனவே உருவாகிய உணவுக் காட்டிலிருந்து செலவில்லாமல் அடுத்த களத்தினை உருவாக்குவதற்கான உள்ளீட்டினைப் பெறுகிறோம்! 
இதனை இயற்கை வேளாண்மை விஞ்ஞானி சுபாஷ் பாலேக்கர் - Zero Budget என்பார். அவரது கோட்பாடு முதலாவது சுற்று விவசாயத்திற்கு பிறகு தோட்டத்திற்குள் உள்ளீடு (Input) எதுவும் வரக் கூடாது! அதே போல் தோட்டத்தில் இருந்து விளைச்சலைத் (Yield) தவிர வேறு எதுவும் வெளியே போகக் கூடாது! விளைச்சலின் பின்னர் வரும் தாவரக் கழிவுகளும், களைகளும் மண்ணுக்கு உரமாகவேண்டும்! மண்ணை வளப்படுத்த விவசாயியிடம் ஒரு நாட்டு மாடு இருக்க வேண்டும். தனது விளைச்சலின் ஒரு பகுதியில் இருந்த அடுத்த சுற்றிற்கான விதைகள், நாற்றுக்களை தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். 
இப்படி இருப்பதால் விவசாயி சுயசார்புடையவனாகவும், வீணாக தனது பணத்தை உரம், பீடைக்கொல்லிகள் என்று செலவழித்து உற்பத்திச் செலவினைக் கூட்டாதவனாகவும், நட்டமடையாதவனாகவும் இருப்பான்!

Saturday, November 28, 2020

தலைப்பு இல்லை

எப்படி தெய்வீகத் தன்மையை அடைவது – be SIMHA
தெய்வீகத் தன்மையுடையவர்களாக மாற ஸ்ரீ அம்ருதானந்த நாதர் கூறும் இரண்டாவது பண்பு 
2) கடமைப்பட்டவர்களாக இருத்தல். – INDEBTEDNESS –
மனிதர்கள் எவருமே மற்றவர்கள் தமக்கு நன்றியுணர்வுடன் இல்லை என்றால் அவர்களைப் பற்றி மிகவும் விரக்தி அடைவார்கள். எவர் உங்களுக்கு உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றியுணர்வுடன் உங்களால் இயன்ற அளவு திருப்பிச் செலுத்துங்கள்! அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யப் பாருங்கள்! உங்கள் நன்றியுணர்வையும், கடப்பாடையும் எப்போதும் மாதா, பிதா, குரு, மனைவி/கணவன், நண்பர்கள் என உங்களது வாழ்க்கையின் தரத்தினை உயர்த்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்யுங்கள்! இது உங்களை அகம் மலர்ந்தவர்களாக்கும்! தனியே ஒருவரிடமிருந்து எதையாவது பெற்றுவிட்டு அதற்குரிய மீள்செலுத்துகையைச் செய்யாமல் விடாதீர்கள்.
மூன்றாவது பண்பு : MANIFEST
எதிர்காலத்தில் பெறவேண்டிய நிலையை இப்போதே மனதில் அனுபவியுங்கள். எதிர்காலத்தை நிகழ்காலத்திற்கு கவர்ந்து இழுங்கள். இதுவே படைப்பதன் இரகசியம்.
வீடொன்று வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அதை வரைந்து அங்கு நீங்கள் வாழ்வதை மனதில் அனுபவியுங்கள். உங்களுக்கு பில்லியன் கணக்கில் பணம் வேண்டுமென்றால் ஒரு ரூபாய் நோட்டிற்கு பின்னர் பூச்சியங்களைச் சேர்த்து அந்த பில்லியன்களை அடைந்துவிட்டதாகப் பாவியுங்கள். ஆரோக்கியம் வேண்டும் என்றால் நோயைப் பற்றி சிந்திப்பதை, ஆராய்வதைத் தவிருங்கள். அமைதி வேண்டும் என்றால் எங்கும் அமைதியைக் காணுங்கள்.
பிரச்சனைகளை கவனிக்காமல், ஆராயாமல் பிரச்சனைக்கான தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள். பிரச்சனைகளை கவனித்தால் பிரச்சனைகள் பெருகும். இதைத்தான் நாம் பொதுவாகச் செய்கிறோம். பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்காமல் தீர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் மனதினை கட்டமைத்து எடுங்கள். பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுதல் சக்தியை உறிஞ்சிவிடும். பிரச்சனைகள் தீர்வதற்கு இது தான் படிமுறை என்று ஒரு ஒழுங்குமுறையில் சிந்திக்க வேண்டியதில்லை. அனேகமான சந்தர்ப்பத்தில் எமக்குத் தெரியாத ஒரு முறையில் பிரச்சனை தீர்க்கப்படுகிறது. பிரச்சனைகளின்போது உங்களுக்கு உதவக்கூடியவர்களின் உதவியைப் பெறுங்கள். உங்கள் இலக்கை மனதில் பாவித்தபடி நிகழ்காலத்தில் வாழப்பழகுங்கள்!
தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அம்ருதானந்த நாதரின் 2007 ம் ஆண்டு விஜயதசமி உரையின் ஒரு பகுதி.
Dr. N. Prahalada Sastry (Sri Amritanandanatha Saraswati) - Nuclear physicist, was a scientist at Tata Institute of Fundamental Research.

தலைப்பு இல்லை

எமது இயற்கை விவசாயத் தோட்டத்திற்குள் உருவாகியிருக்கும் தேன் கூடு! 
இயற்கை எப்பொழுதும் தன்னைத் தானே சமநிலையாக வைத்துக் கொள்ளும். எமது ஐந்தடுக்கு முறை உணவுக்காடு ஆனது இயற்கையாகவே உருவாகிய காடுகளை ஒத்ததான அமைப்பிற்கு சாட்சியமாக எமது ஐந்தடுக்கு பயிர்ச் செய்கை உணவுக் காட்டில் தானாகவே உருவாகிய தேனிக்களின் கூடு இனி எமக்கு இந்த உணவு காட்டினுள் மகரந்த சேர்க்கை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இது எமது சாகம்பரா இயற்கை விவசாயப் பண்ணை முகாமையாளரின் இன்றைய பண்ணை முன்னேற்றம் பற்றிய அறிக்கை!
ஒரு விவசாயத் தொழில் நிபுணர் இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் எப்படிச் செயல் புரிகிறது என்பதைப் புரிந்து அதை தனக்குச் சாதகமாக்கும் மனதினை, பார்வையினைப் பெற்றிருக்க வேண்டும்! அந்த வகையில் தொழில் முறை விவசாய நிபுணர் ஒருவர் தேனிக்களின் சூழலியல் முக்கியத்துவத்தைப் புரிந்து விவசாயத் திட்டங்களை உருவாக்குவது என்பது மிக அத்தியாவசியமானது! 
இப்படியான இயற்கையைப் புரிந்து அதனுடன் ஒத்திசைந்து வாழும் தொழில் நிபுணர்களை உருவாக்குவதற்கே நாம் நேரத்தை செலவிடுகிறோம்! 
தோட்டத்திற்குள் தேனியும், சிலந்தியும் இருக்கிறது என்றால் நாம் பீடை கொல்லிகள் எதையும் விசிறவில்லை என்பதற்கான சான்றாதாரம்! இன்று சூழலியல் சான்றுப்பத்திரங்கள் வர்த்தகத்தில் பல இலட்சம் ரூபாய் கொடுத்து பெறப்பட்டு அதற்காக மக்களிடம் சேதன விவசாயப்பொருட்களுக்கு அதிகளவு கட்டணம் கோரப்படுகிறது. ஆனால் சில அடிப்படைச் சூழலியல் குறிகாட்டிகள் (environmental indicators) தெரிந்திருந்தால் அவற்றை இயற்கை விவசாய பூமி என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். 
1) சிலந்திக்கூடுகள்
2) தேன் கூடுகள்
இவை இருந்தால் அங்கு பீடைக்கொல்லி பாவிக்கப்படவில்லை என்று அர்த்தம். 
ஒரு சதுர அடி மண்ணில் 13 -15 மண்புழுக்கள் இருந்தால் அந்த மண் இரசாயன உரம் பாவிக்கப்படவில்லை என்று அர்த்தம்! 
அடுத்தது கத்தரி, வெண்டி போன்றவை அதீத சுவையுடன் இருக்கும். பாகல் ஆக இருந்தால் அது உச்ச பட்ச கசப்புடன் இருக்கும்! 
இப்படி எளிய குறிகாட்டிகளை (simple indicators) உருவாக்கி நாம் எமது கிராமத்திற்குள் நம்பிக்கையையும், சான்றாதாரங்களையும் உருவாக்கி இயற்கை விவசாயப்பொருட்களிற்கு மதிப்புக் கூட்ட வேண்டும்!

Friday, November 27, 2020

தலைப்பு இல்லை

எப்படி தெய்வீகத்தன்மையை அடைவது – be SIMHA

S -SERVE: சேவை

அன்பும் சேவையும் நீங்கள் பறப்பதற்குத் தேவையான இரண்டு இறக்கைகள். அன்பு நீங்கள் அன்பு செலுத்துபவரை உங்களுடன் இணைக்கும். சேவை உங்களை பலருடன் இணைக்கும். சேவையின் மூலமாக நீங்கள் ஆயிரம் மனங்களையும், ஆயிரம் கரங்களையும் பெறமுடியும். நீங்கள் மக்களுக்கு சேவை செய்தால் தான் அவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். ஆகவே தெய்வீகத் தன்மை அடைவதற்குரிய முதல் தத்துவம் அன்புடன் அனைவருக்கும் சேவை செய்தல்.

கணபதியை திருப்திப்படுத்த வயிறு நிறைக்கும் நைவேத்தியம் வேண்டும்; கிருஷ்ணனுக்கு பழம், மலர், நீர் வைக்க வேண்டும். சிவனுக்கு சுத்த ஜலமே திருப்தி தரும்! ஆனால் தேவியோ அன்னையைப் போல் நாம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே அவள் திருப்தியுறுவாள்! தேவியை வழிபட நிறைய சடங்குகள் தேவையா? இல்லை! 

எப்படி அவளை திருப்திப்படுத்துவது! வாழும் உயிர்கள் மேல் அன்பு செலுத்துதலும், சேவை செய்தலுமே அவளிற்கான நைவேத்தியம்! சடங்குகளுக்காக வீணாக்கும் பணத்தை எம்மைச் சூழ இருப்பவர்களது வாழ்வை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும். அப்படி நாம் செய்யும் சேவை எப்போதும் பல மடங்காக எமக்குத் திரும்பி வரும்!

இது ஒருவன் தெய்வீகத் தன்மை அடைவதற்குரிய முதல் விதி!

தேவிபுரம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அம்ருதானந்த நாதரின் 2007 ம் ஆண்டு விஜயதசமி உரையின் ஒரு பகுதி.

Dr. N. Prahalada Sastry (Sri Amritanandanatha Saraswati) - Nuclear physicist, was a scientist at Tata Institute of Fundamental Research.


தலைப்பு இல்லை

இன்று ஏற்றுமதி விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் (Central Research Station of the Department of Export Agriculture) வாசனைத் திரவியங்களுக்கான அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பத்திற்கு பொறுப்பான அதிகாரியுடன் சந்திப்பு!

அவர் குறிப்பிட்ட மிக முக்கியமான விடயம் மிளகு, கராம்பு, கறுவா, ஏலக்காய், சாதிக்காய் போன்ற எமது நாட்டில், குறிப்பாக மாத்தளையில் விளையும் வாசனைத் திரவியங்களின் வாசனைக்கான இரசாயனவியல் தன்மை மிக அதிகமானது! ஆனால் எம்மால் உலகத்தரம் வாய்ந்த தரக்கட்டுப்பாட்டுடன் அவற்றை பொதி செய்ய முழுமையாக முடியவில்லை. 

உயர் பொருளாதாரம் கொண்ட மேலைத்தேய நாடுகளின் தரக்கட்டுப்பாட்டிற்கு அமைய எமது வாசனைத்திரவியங்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நியச் செலாவணியைப் பெறலாம். 

உயர் தர மிளகினை உற்பத்தி செய்தல்

உயர்தர கோப்பியினை உற்பத்தி செய்தல்

உயர் தர கறுவாப்பட்டை உற்பத்தி செய்தல் 

என்பன நல்ல வாய்ப்புள்ள துறைகள்! ஆனால் அவர் கவலைப்பட்டுக் கொண்ட விஷயம் நாம் எமது கல்வி முறை மூலம் படித்துவிட்டு எங்காவது வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையுடன் கூடிய பிள்ளைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 

பிள்ளைகள் இப்படியான புத்தாக்க உணர்வுடன் ஏற்றுமதி விவசாயத்தை ஒரு துறையாகத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய ஆற்றலுள்ளவர்களை உருவாக்கும் "பிரச்சனையைத் தீர்க்கும் கல்வி முறை” (problem solving education method) உள்வாங்கப்பட வேண்டும் என்பதே! 

We need problem solvers; not only job seekers!


தலைப்பு இல்லை

"Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do"

அறிந்தால் மாத்திரம் போதாது; நாம் அறிந்ததை பிரயோகிக்கும் ஆற்றல் வேண்டும்.

ஒரு செயலில் இஷ்டமிருந்தால் போதாது; அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும்.


Wednesday, November 25, 2020

தலைப்பு இல்லை

இன்று ஆசிரியர் ஒருவரிடம் உரையாடும் போது தன்னிடம் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கற்றலில் ஆர்வம் இல்லாமலிருக்கிறார்கள் என்று கூறினார். 

மனித நடத்தையில் ஒருவர் ஏன் இப்படி நடக்கிறார் என்பதற்கு இரண்டு விதமான காரணிகள் இருப்பதாக நவீன உளவியல் கூறுகிறது. 

1. extrinsic motivators - புற உத்வேகக் காரணிகள்; பரிசுகள் வழங்குவது, தண்டணைக்கான பயம் என்பன காரணமாக அமைகிறது. படித்தால் நல்ல பாராட்டுக் கிடைக்கும், பல்கலைக்கழகம் கிடைக்கும் என்ற பரிசு மனோபாவம் அல்லது சமூக அந்தஸ்துக் குறையும், வாழ்க்கை எப்படிச் செல்லும் என்ற பயம். 

2. intrinsic motivation - அக உத்வேக காரணிகள் - தனக்குள்ளே இதை அடைய வேண்டும் என்ற இலக்கு உடையவன் இலகுவாக உத்வேகமடைகிறான். தான் படித்து இப்படி வரவேண்டும் என்ற இலக்கு வைத்தவனுக்கு அக உத்வேகம் கிடைக்கிறது. 

ஆசிரியர் ஒருவர் மாணவனின் இந்த இரண்டு உத்வேகங்களையும், அதற்கான காரணிகளைக் கூர்ந்து கவனித்து அதற்குரிய காரணங்களை அடையாளம் கண்டு, கவனக் கலைப்பான் காரணிகளை நீக்கி மாணவனை பாடத்தில் கவனிக்கச் செய்ய வேண்டும்.

அக உத்வேகத்திற்குரிய இலக்கினை உருவாக்கி அதை அடைவது எப்படி என்ற தெளிவினை மாணவன் மனதிற்கு உருவாக்கி பின்னர் அவன் மனது சிதறிவிடாமல் இருக்க புற உத்வேகங்களான பரிசு - தண்டணை இரண்டையும் சரியாக உபயோகித்து கல்வியில் கவனத்தைச் செலுத்த வேண்டும்! 

ஆசிரியர் மாணவனின் ஆதர்சன நாயகனாக இருக்கும் பண்பு இருக்க வேண்டும்! ஆசிரியன் மாணவன் மனதைச் செலுத்தும் சிற்பி என்ற பொறுமை அவசியமானது!


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...