குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Sunday, December 15, 2019
தலைப்பு இல்லை
Saturday, December 14, 2019
தலைப்பு இல்லை
அன்புடனும் பாசத்துடனும் எமது திருமண நாளில் எம்மை வாழ்த்திய அனைவருக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகள்!
தலைப்பு இல்லை
கொழும்பில் உள்ள நண்பர் குழாம் Complete work of Swami Vivekananda (CWSV) - ஞானதீபம் நூற் தொகுதியை முறைப்படி கற்க ஆர்வம் கொண்டுள்ளது.
மாதம் ஒரு முறை ஆர்வமுள்ள நண்பர்கள் ஒன்று கூடி முதலாவது நூலிலிருந்து தொடங்கப்படும். குறித்த மாதத்தில் நூலில் சிறு பகுதிகள் பங்கு பெறுபவர்களால் படிக்கப்பட்டு அவர்களது புரிதல் பகிரப்படும். இப்படி படிப்படியாக முழுத் தொகுதியையும் சேர்ந்து படித்து முடிப்பது இந்தத் திட்டத்தின் இலக்கு!
இந்த உரையாடலிற்குள் சரி, பிழை வாதங்களுக்கு உட்படாமல் சுவாமி விவேகானந்தர் தனது உரையில் என்ன சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதே அடிப்படை.
இதன் மூலம் ஒவ்வொருவருடைய புரிதலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் என்பதே எண்ணம். படிக்காதவர்களும் படிப்பதற்குரிய தூண்டலைப் பெறுவதற்காக பங்கு பெறலாம்.
ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குழுவில் இணையுங்கள்: https://chat.whatsapp.com/BXqenTwpxYtLiEZ7iAGaeZ
Friday, December 13, 2019
தலைப்பு இல்லை
மிக நீண்ட காலத்திற்கு முன்னர் சோதிடம் படித்து பின்னர் நிறுத்தியாயிற்று! நேற்று தற்செயலாக புத்தகங்களை அடுக்கும் போது கண்ணில் பட்டது அஷ்டக வர்க்கம் பற்றிய நூல்.
அஷ்டகம் என்றால் எட்டு
வர்க்கம் என்றால் பலம் என்று பொருள்.
பராசர முனிவர் எழுதிய பராசர ஹோராவில் இந்தக் கணிதம் விளக்கப்பட்டுள்ளது. கணிதத்தில் உள்ள ஒரு வித matrix calculation போன்றது.
ராகு கேது நீங்கலாக ஏழு கிரகங்களும் லக்கினமும் சேர்ந்து எட்டு விதமான பலங்களை ஒவ்வொரு இராசிக்கும் தரும்.
இந்த பலத்தை கணித ரீதியாக புள்ளிகளைத் தந்து கொள்ளலாம்.
இனி விஷயத்திற்கு வருவோம், இது ஜோதிடப் பதிவு அல்ல, வழமையான தத்துவப் பதிவு தான்.
அஷ்டக வர்க்கம் வாழ்க்கை பற்றிய சுவாரசியமான செய்திகளைக் கூறுகிறது.
இந்த அஷ்டக வர்க்கம் கூறும் செய்தி என்னவென்றால்,
1) எந்தவொரு மனிதனுக்கும் 337 புள்ளிகள் தான். ஆகவே படைப்பில் அனைவரும் சமம்.
2) ஒரு வீட்டிற்குரிய புள்ளிகள் கூடினால் இன்னொரு வீட்டிற்குரிய புள்ளிகள் குறையும். ஆகவே ஒன்றைப் பெற இன்னொன்றை இழக்க வேண்டும்.
3) அனைத்திலும் புள்ளிகள் சமமாக இருந்தால் சீரான ஏற்றத் தாழ்வு இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள்.
4) புள்ளிகள் அதிகம் இருக்கும் இராசிகள் எமது வலுவான ஆற்றல்கள்.
5) புள்ளிகள் குறைவாக இருக்கும் இராசிகள் எமது பலவீனமான ஆற்றல்கள்.
6) இவை அனைத்தும் எமது பூர்வ கர்மத்தின் balance sheet account என்பது இன்னும் சிறப்பான விஷயம்.
ஆக ஜோதிஷம் ஒரு SWOT analysis ஆக இந்த அஷ்ட வர்க்கத்தின் படி பயன்படுத்தலாம்.
தன்னிலும், இறை சக்தியிலும் நம்பிக்கை உள்ளவனுக்கு ஜோதிடம் ஒரு decision support tool என்பதே எனது புரிதல்! அப்படியுள்ளவர்களுக்கு அது ஒரு ஒளி விளக்கு!
யோக வாசிஷ்டம் கூறும் யோகசாதனையின் அதிகாரிகள்!
- தேகமே அகம் என்ற ஜடபுத்தி உள்ளவன்; நான் இந்த உடல் மாத்திரம்தான் என்ற எண்ணம் கொண்டவன் அதற்கு மேல் எந்தக்காரணமும் இருக்கலாம் என்ற முயற்சியைச் செய்ய மாட்டான்.
- எனது புலன்களால் பார்க்கப்படும் உலகம் மாத்திரமே சத்தியம், அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற நினைப்பு உள்ளவன்.
- புலன்களால் மாத்திரமே மகிழ்ச்சி உள்ளது என்று நம்புவன்.
- உண்பது, மது அருந்துவது, உறங்குவது, உடலின்பம் பெறுவது மாத்திரமே வாழ்க்கையின் நோக்கம்
தலைப்பு இல்லை
இன்று எமது திருமண நாள்!
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா!
ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திட பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
என எமக்காகவும் உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறோம்!
Thursday, December 12, 2019
தலைப்பு இல்லை
இன்று வெள்ளவத்தை கிரியா பாபாஜி யோக ஆரண்யத்தின் 11வது ஆண்டு விழா மலர் "ஆரண்யப் பிரசாதத்தில்" எமது "இல்லற யோகம்" என்ற கட்டுரை வெளியாகியுள்ளது.
கட்டுரையைப் பிரசுரித்த மலர் குழுவினரிற்கு நன்றிகள்!
தலைப்பு இல்லை
இன்று தத்தாத்திரேய ஜெயந்தி!
ஆத்திரேயர் எனப்படும் அத்ரி மகரிஷிக்கும் அனுசூயைக்கும் மும்மூர்த்திகளாலும் தத்தம் பண்ணப்பட்ட ஆத்ரேயர் - தத்தாத்திரேயர்.
அத்ரி என்றால் புலன்களை வென்றவர் என்று அர்த்தம்.
அசூயை என்பது மற்றவர்களின் சிறப்புக் கண்டு பொறாமை கொண்டு வெதும்பும் மனதின் இயல்பு, அனுசூயை என்றால் அசூயை வென்றவர் அல்லது அசூயையை தன்னுள் அனுமதியாதவர் என்று பொருள். இப்படியான இருவருக்கும் மகனாக வாய்த்தவர் தாமச, ராஜச, சத்துவம் எனும் முக்குணங்களையும் வென்ற அவதூதர்.
ஆக புலன்களை வென்ற மனம் இறுதியில் அசூயையும் வென்றால் பூரண விழிப்புணர்வினைப் பெறும் என்பதே தத்தாத்ரேய தத்துவம்.
எம்மில் இருக்கும் விழிப்புணர்வு (mindfulness) சரியாக இருந்தால் உலகில் உள்ள அனைத்தும் ஞானத்தினைப் புகட்டும் என்பதை தனது 24 குருமார்கள் யார் என்று கூறி விளக்கியவர்.
இதற்கு மேல் அவர் தன்னுடைய உடல் எப்படி தனக்கு ஞானத்தினைத் தந்தது என்பது பற்றியும் கூறுகிறார்.
இன்று குரு என்று எவரையாவது, எதையாவது பற்றிக் கொண்டு விழிப்புணர்வு இல்லாமல் நம்பிக்கை மட்டுமே அடிப்படையில் ஆன்மீகம், யோகம் போன்றவற்றை அணுகுபவர்களுக்கு தத்தாத்திரேயர் குரு தத்துவத்தின் இரகசியத்தை விளக்குகிறார்.
எம்மில் இருக்கும் உணர்வு - consciousness - விழிப்புணர்வாக - mindfulness இருக்கும் போது அக குரு எம்மில் விழிப்படையும் போது எம்மை சூழ உள்ள அனைத்தும் புற குருவாக வழிகாட்டும் என்பது தத்தாத்ரேயரின் ஞானம்
Wednesday, December 11, 2019
சாதனையைத் தவறவிட்டல் மனம் மிகவும் துன்பமடைகிறதே?
இல்லற யோகம்
சிஷ்ய அதிகார மதிப்பீடு
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...
-
உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களு...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...