குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 13, 2019

யோக வாசிஷ்டம் கூறும் யோகசாதனையின் அதிகாரிகள்!

யோக வாசிஷ்டம் என்பது ஸ்ரீ இராமர் தனது குருவான வசிஷ்ட மகரிஷியிடம் தனது ஆன்ம சாதனைக்கான வழிகாட்டலைப் பெற உரையாடிய உரையாடலின் தொகுப்பு நூல்.

இது 32,000 பாடல்களைக் கொண்ட ப்ரஹத் யோக வாசிஷ்டம் என்றும், இதைச் சுருக்கி 6000 பாடல்கள் கொண்ட நூல் லகு யோக வாசிஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நூலில் உள்ள சிறப்பம்சம் அதைப் படிப்பவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியைப் பற்றி பேசுகிறது.

ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்ட பலர் தாம் எதற்காக ஆன்மீகத்தில் தேடலை செய்கிறோம் என்பதை ஆழமாக ஆராய்ந்தால் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தோல்விகள், துன்பங்கள் போன்ற காரணத்தால் அதற்குத் தீர்வு வேண்டி!

பலரும் தோல்வி, துன்பத்திற்கான காரணம் என்னவென்ற ஆராய்ச்சிக்குச் செல்ல விருப்பம் இல்லாமல் அதற்குத் தீர்வு என்னவென்ற நிலைக்குள் நின்றுவிடவே விரும்புகிறார்கள், ஏன் இந்தத் துன்பம் என்று கேட்பதில்லை! எதைச் செய்தால் துன்பம் தீரும் என்பதை மட்டும் கூறுங்கள் என்ற மனப்பாங்குடன் இருப்பவர்களே போலி ஆன்மீகவாதிகளிடன் சிக்கிக்கொண்டு அர்த்தம் தெரியாத சடங்குகளுக்குள் மாட்டிக்கொள்பவர்கள்.

எனக்குத் துன்பம் தீரும் வழியைச் சொல்ல முன்னர் துன்பத்தின் மூல காரணம் என்ன என்று தெரியவேண்டும் என்ற உறுதியுடன் தேடலைச் செய்பவனே யோக ஞான மார்க்கத்திற்கு அதிகாரி!

இப்படி துன்பம் நாம் எல்லாவற்றுடனும் பந்தப்பட்டுள்ளோம், அதனால் துன்பமடைகிறோம் என்ற விழிப்புணர்வு பெறுதல் முதல் நிலை!

யோக வாசிஷ்டம் யாருக்குரியது என்றால் " நாம் பந்தப்பட்டுள்ளோம், இதிலிருந்து எப்படி விடுபடுவது?" என்ற சிந்தனை உதித்தவனுக்கு! முழுமையாக ஞானம் பெற்ற ஞானிக்கும், முழுமையான அஞ்ஞானம் பெற்ற அஞ் ஞானிக்கும் இந்த நூல் உரியதல்ல என்று வசிஷ்டர் வரையறுக்கிறார்.

இருவருக்கு இந்த நூல எந்தப்பயனையும் தராது.

அடுத்து அஞ்ஞானி யார்? என்று நான்கு வரையறைகள் தரப்படுகிறது.
  1. தேகமே அகம் என்ற ஜடபுத்தி உள்ளவன்; நான் இந்த உடல் மாத்திரம்தான் என்ற எண்ணம் கொண்டவன் அதற்கு மேல் எந்தக்காரணமும் இருக்கலாம் என்ற முயற்சியைச் செய்ய மாட்டான்.
  2. எனது புலன்களால் பார்க்கப்படும் உலகம் மாத்திரமே சத்தியம், அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற நினைப்பு உள்ளவன்.
  3. புலன்களால் மாத்திரமே மகிழ்ச்சி உள்ளது என்று நம்புவன்.
  4. உண்பது, மது அருந்துவது, உறங்குவது, உடலின்பம் பெறுவது மாத்திரமே வாழ்க்கையின் நோக்கம்

என்ற இந்த நான்கு எண்ணங்களைக் கொண்டவனால் யோகப்பாதையில் பயணிக்க முடியாது.

மேற்கூறிய நான்கு எண்ணங்களுக்கும் மேலாக உண்மை இருக்கிறது என்ற பிரித்தறியும் புத்தி உள்ளவர்கள் முமுக்ஷுக்கள் எனப்படுகிறார்கள்.

இப்படி முமுக்ஷுத்துவத்துடன் ஆன்ம சாதனை முயற்சி செய்பவர்கள் ஜிக்ஞாசுக்கள் எனப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...