இயற்கையாக நுண்ணுயிர்கள் மண்புழு நிறைந்த மண்ணிற்கும் (வலது), உரம்போட்டு மலடாக்கப்பட்ட மண்ணிற்கும் (இடது) உள்ள வித்தியாசத்தைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.
படத்தின் வலதுபக்கத்திலுள்ள ஆழமான நார் வேர்த் தொகுதி மண்ணை ஊடுருவி ஒரு பஞ்சு போல் ஆக்கி நீரைத் தேக்கி வைக்கும். இப்படி இருக்கும் நிலத்தின் கிணறு வற்றாது. இப்படி பஞ்சு மெத்தை போல் ஆக்குவதற்கு மண்ணை நுண்ணங்கிகள் பதமாக்க, மண்புழு உழுது கொடுக்க வேண்டும்.
உப்புக்களாகிய உரம் கொட்டிய நிலத்தில் இந்த செயல்முறை எதுவும் நடக்காது! மண் மலடாவதுடன் நிலம் நீரைத்தேக்கும் ஆற்றலையும் இழந்து விடும்.
ஆக பயிரும் வளராது, நிலத்தடி நீரும் கிடைக்காது!