குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 20, 2025

ஆயுள் - ஆயுர்வேதம் - 03

 உடன் மனம் உயிரினை ஒத்திசைவாய் ஒருங்கிணைத்தால் அது ஆயுள் என்றும், இதைச் சாதிக்கும் ஞானம், அறிவு ஆயுர்வேதம் என்றும், ஏன் எமக்கு ஆயுள் வேண்டும் என்றால் வாழ்வில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்புருடார்த்தங்களை அனுபவிப்பதற்காகவும் என்று பார்த்தோம். ஆயுள் வேதத்தினைக் கற்பதன் பலன் உடலை ஆக்கும் தாதுக்களின் சம நிலை உடலில் எப்படிச் செயற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலமே உடலை, உடலுக்கு ஆதாரமான மனதை, மனதிற்கு ஆதாரமான உயிரை ஒருங்கிணைக்க முடியும்,

ஆகவே உடலின் தாதுக்களை சம நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒருவன் மனதை சம நிலைப் படுத்தலாம். மனம் சம நிலையில் இருப்பதன் மூலம் உயிருடன் தொடர்பினை ஒருங்கிணைக்கலாம். 

நோய்கள் என்பவை தாதுக்களின் சம நிலையின்மையினை ஏற்படுத்தி இந்த உடல் மன உயிர் ஒருங்கிணைப்பினைக் குழப்புபவை. ஆகவே உடல் பாதிக்கப்பட்டால் அகவலிமை குன்றும். உடலில் நோய் இருந்தால் நாம் எமது வாழ்வில் சாதிக்க வேண்டியவை சாதிக்கப்படமால் உடல் அழிவை நோக்கிச் செல்லும். 

ஆகவே மனிதனின் முதல் இலட்சியம் தனது மனதையும், உடலையும் நோயற்று சம நிலையில் வைத்திருத்தல்.  இதைச் சாதிக்கும் போதே அவன் உயிரை அறியும் பக்குவம் பெறுகிறான். 

மனம் உயிரின் ஆற்றலை அறிய வேண்டும் என்றால் அதன் விருத்திகளைக் குறைக்க வேண்டும். சித்த விருத்திகள் அற்ற மனமே தூய்மையான ஆரோக்கியமான மனம்.  மனதின் விருத்திகளைக் குறைக்க தியானம் அவசியம். 

ஆகவே ஆயுர்வேதத்தின் படி ஆரோக்கியம் என்பது தாதுக்கள் சம நிலையான ஸ்தூல உடலும், விருத்திகள் குறைந்த/விருத்திகள் அற்ற சித்தமும் ஆகும். 




No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்?

    பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்? பக்தி என்பது தனது அனுஷ்டான தெய்வத்திடம் முழுமையாக மனம், புத்தி, சித...