குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, October 05, 2021

வாழ்க்கை எனும் விளையாட்டில் சக்தி தத்துவம்

பலருக்கு வாழ்க்கை என்பது துன்பமும், சங்கடமும் நிறைந்த ஒன்றாக இருப்பதற்கு காரணம் வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு என்பதை புரியாமல் இருப்பது! 

விளையாட்டு என்றால் கட்டாயம் விதிகள் இருக்கும்! விதிகளைப் புரியாமல் விளையாட முடியாது. விதிகளைப் புரிதல் விளையாட்டின் முதல் படி! விதிகள் புரிந்தாலும் விளையாடுவதற்கு உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும்.

ஆக வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அந்த விளையாட்டின் விதிகளைப் புரிந்து கொண்டு, அந்த விதிகளை பிரயோகித்து வாழ்க்கை வெற்றிபெற சக்தி வேண்டும். 

இதற்கு என்ன வழி? சக்தி உபாசனை - சக்திக்கு அருகில் அமர்ந்து சக்தியை கிரகிக்க வேண்டும். உபாசனை என்றால் அருகில் அமர்தல் என்று பொருள்.

இதனை தினசரி செய்ய முடியாதவர்கள் குறைந்தது நவராத்ரியிலாவது செய்ய வேண்டும். 

ஒருவன் வாழ்க்கை எனும் விளையாட்டைப் புரிந்துகொள்ள தேவையான அறிவு என்ன? 

ஆன்மாவை பற்றிய அறிவு: இதனால் ஒருவனுடைய அடிப்படை மரண பயம் அற்று மனம் சம பாவத்தை அடைகிறது. இறப்பு, பிறப்பு இவற்றுக்கிடையிலான வாழ்க்கையை எப்படிச் செம்மையாக வாழ்வது என்ற புரிதலைத் தருகிறது. 

ஆற்றல் வளர்ச்சி: தனிமனிதனின் ஆற்றல்கள் உடல் நலம், கல்வி, செல்வம், சக மனிதர்களுடன் கூட்டுறவாக இயங்குதல் இந்த நான்கும். இவை நான்கும் ஒன்றிணைந்து இருப்பவனே ஆற்றலுள்ளவனாக இருப்பான். 

இலட்சியத்தின் மூலம் தனிச்சிறப்புடையவனாக இருத்தல்: இலட்சியம் என்பது இன்று தனிமனித அடைவுகளாக மாத்திரமே இருக்கிறது. நான் கல்வியில் உயர்வு பெறவேண்டும், நல்ல தொழில் பெறவேண்டும் என்பது மாத்திரமே அனேகரது மனநிலை. இத்தகையவர்கள் உயர்ந்த கல்வியைப் பெற்று ஒரு தொழில் கிடைத்தவுடன் அதற்குப்பிறகு தாம் செய்யவேண்டியது, அடையவேண்டியது எதுவும் இல்லை என்று சிறப்பற்றவர்களாக மாறி விடுகிறார்கள். இத்தகையவர்கள் சமூகத்திற்காக, மற்றவர்களுக்காக தமது அறிவினை ஆற்றலினைப் பயன்படுத்தும் இலட்சியத்தினைப் பெறும்போது அவர்கள் தனிச்சிறப்புடையவர்களாகி விடுகிறார்கள்.

தூய்மை: உடல், மனம், வாக்கு, வசிக்கும் இடம் ஆகியவற்றில் தூய்மை ஒருவருக்கு ஆற்றலினைத் தரும்.

தெய்வீக மனம்: உலகில் உள்ள அனைத்தும் அந்த சக்தியின் வெளிப்பாடுதான் என்ற புரிதலுடன் உயர்வு, தாழ்வு என்ற இருமைகளை மனதில் உருவாக்காமல் உலகில் உள்ள அனைத்தையும் வெறுக்காமல் வாழ்க்கையை உன்னத நோக்கத்திற்கானது என்ற புரிதலுடைய தெய்வீக மனம் ஒருவனிற்கு சக்தியைத் தரும். 

நேர்மை: நற்பண்புகள், பழக்கவழக்கம், நடத்தை, இனிய பேச்சு, அடக்கம், பணிவு, தாராள மனப்பான்மை, தொண்டுள்ளம், கடமையுணர்வு, காலந்தவறாமை, கிடைத்ததில் திருப்தியடைதல், விழிப்புணர்வு, தைரியம், வீரம் ஆகியவை நேர்மையில் இருந்து உதிப்பவை. எவருக்காவது இந்தப்பண்புகள் நிறைந்திருந்தால் அவர் நேர்மை என்ற சக்தியைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

விவேகம்: எது உண்மை? எது பொய் என்பதைப் பகுத்தறியும் தன்மைக்கு விவேகம் என்று பெயர். விவேகம் என்பது கேட்பவற்றை அப்படியே நம்புவது அல்ல! இடம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றை சீர்தூக்கி சிந்தித்து ஏற்றுக்கொள்பவனே விவேகம் என்ற ஆற்றல் உடையவன். 

தன்னடக்கம்: தன்னுடைய எண்ணம், செயல், பாலுணர்ச்சி ஆகிய மூன்றையும் தவறான பாதையில் செல்லவிடாமல் ஆளக்கூடிய பண்பே தன்னடக்கம். இவற்றிற்கு பயந்து ஓடுவது தன்னடக்கம் இல்லை. இவற்றை சரியாகப் பயன்படுத்தி ஆற்றலை விழிப்பிக்கக்கூடிய நிலையை அடைவதே தன்னடக்கம்.

தொண்டுள்ளம்: மற்றவர்களுக்கு தனது ஆற்றலுக்கு உட்பட்ட நிலைக்குள் உதவி செய்தல், வழிகாட்டுதல். பிறருக்கு உதவி செய்கிறோம் என்று சோம்பேறிகளாக்குவது மக்கள் தொண்டு அல்ல! மற்றவர்கள் மனதை மேம்படுத்தி ஆற்றல் உள்ளவர்களாக பிரச்சனைகளிலிருந்து மீண்டு வரக்கூடியவர்களாக செய்யப்படும் உதவியே உண்மையான தொண்டு.

இந்த வாழ்க்கை எனும் விளையாட்டின் விதிகளைப் புரிந்துகொள்ளும் அறிவையும், விளையாட்டினை சரியாக விளையாடக்கூடிய ஆற்றலையும், வளத்தினையும் தருபவள் சக்தி! 

அவளை உபாசிப்பவர்கள் இந்த ஆற்றல்களை படிப்படியாக அடைகிறார்கள்! 

சக்தி உபாசனைக்கு மிக உகந்த காலம் நவராத்ரி!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...