குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, April 18, 2018

சோதிடமும் இயற்கையும்



எதிர்காலத்தை உங்களால் மாற்றமுடியும், ஆனால் நிச்சயமாக பார்க்க முடியாது. கடந்த காலத்தை உங்களால் பார்க்க மட்டுமே முடியும். மாற்ற இயலாது. எவராவது உங்கள் ஜாதகத்தைப்பார்த்து எதிர்காலம் உறுதியாக இப்படித்தான் இருக்கும் என்று பயமுறுத்தினால் நிச்சயமாக புன் சிரிப்புடன் அகன்று விடுங்கள். எம்முடைய நிகழ்காலம் என்பது அறிந்த பழைய வாழ்க்கைக்கும் அறிவவேண்டிய எதிர்காலத்திற்கும் இடையில் இருக்கும் ஒரு இடைத்தொடர்பு. கடந்தகாலம் வரலாறு, எதிர்காலம் அறியாத புதிர்.

எதிர்காலத்தை அறிவதில் மனிதனுக்கு எப்போதும் பேரார்வம் இருக்கிறது. ஏனெனில் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துகொண்டால் வாழ்க்கையில் பிரச்சனைகள் பலவற்றிற்கு தீர்வு காணலாம் என்று நம்புகிறான். இதனாலேயே அவன் சோதிடம், குறிபார்த்தல் என்பவற்றில் ஈடுபாட்டைக்காட்டுகிறான். இது சில நேரங்களில் தந்திரமாக உதவி செய்கிறது, உங்கள் பெண்ணை விரும்பும் ஒருவனை சுலபமாக நிராகரிக்க, விருப்பமில்லாதவர்களை ஒதுக்கி வைக்க, தனிப்பட்ட முயற்சியின்மையையும், சோம்பேறித்தனத்தையும் காரணப்படுத்த என்று பலவாறாக உதவுகிறது.

இப்படி எல்லாம் கூறுவதால் சோதிட சாஸ்திரத்தை பொய் என்று சொல்லுவதாக அர்த்தப்படுத்தக்கூடாது. சோதிடம் நிகழ்ந்ததை சரியாக கணித்து, அதற்கேற்றவாறு நிகழ்காலத்தை சரிப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் ஒரு கலை.

இந்தக்கலையில் நிகழ்காலத்தை சரிப்படுத்தும் கலை ஒருவனின் இறை அல்லது யோக மனச்சாதனைகள். இந்த சாதனைகளுடன் பண்பட்ட நுண்மையான மன, புத்தி, சித்தத்திற்கே பிரபஞ்ச இயக்கத்தின் தாக்கத்தை உணரமுடியும். அத்தகைய நுண்மை பெற்ற மனம் எப்படி தனது வாழ்வில் இயற்கையும், பிரபஞ்சமும் தாக்கம் செய்கிறது என்பதை அறிந்து, உணர்ந்து தனது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

ஆகவே சோதிடம் பார்ப்பதால் உங்கள் எதிர்காலம் மாறிவிடாது என்பதை ஆழமாக புரிவதன் மூலமும், நிகழ்காலத்தில் சரியானவழியில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை கட்டமைக்கலாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதற்கு குரு-அகத்திய-காயத்ரி சாதனை துணை செய்யும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...