குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, December 27, 2012

தமிழில் ஸ்ரீ காயத்ரி தேவி தியான ஸ்லோகம்



தமிழில் காயத்ரி தேவியின் தியான சுலோகத்தினை படித்து தியானிக்க விரும்புபவர்களுக்கு சமஸ்கிருதத்தில் உள்ள "முக்தா வித்ரும ஹேம நீல தவளச்சைர்" எனத்தொடங்கும் காய்த்ரி தியான சுலோகத்தின் தமிழாக்கம், இதனை செய்தவர் ஸ்ரீமதி சௌந்தர கைலாசம் அவர்கள். இதுவும் சமஸ்கிருத சுலோகத்திற்கு நிகரானதே! இந்த தியானப் பாடல்களை மனதில் இருத்தி தியானித்து வருவோர் எல்லாவித ஞானங்களையும் கிரகிக்கும் ஆற்றலினைப் பெறுவர்.



தியான பாடல் 

முத்தொடு பவளம் தங்கம் முரண்படு கருமை வெண்மை
இத்தனை நிறங்கள் கொஞ்சும் எழில் முகம் ஐந்து கொண்ட
உத்தமி ஒவ்வொன்றிற்கும் விழிகள் மூன்றுடைய அன்னை
தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய எங்கள் தேவி
இரண்டு தாமரைகள் சங்கு ஏவு சக்கரம், கபாலம்
மிரண்டவர்க்கபயம், தாளில் விழுந்திடில் வரதம் இன்னும் 
அங்குசம் கயிறு சாட்டை ஆகிய பத்தும் கொண்டே
திங்க்களின் கலைகொள் மௌலித் தேவி காயத்ரி போற்றி!


காலையில் தியானிக்க வேண்டிய காயத்ரியின் ரூபம்
சரஸ்வதி 

ஒளியருள் சூரிய மண்டலத்தின் நடு உள்ளவளை
தெளிவருள் காயத்ரீயை எந்தேவியை சிந்திப்பேனே
சிவந்தவள் விடியும்போது செங்கதிர் நடுவை என்றும்
உவந்தவள் குமரியாக உள்ளவள் அன்னத்தின் மேல் அமர்ந்தவள்
ஜபமாலைக் கை அழகினள் நாவில் "ரிக்: கைச் சுமந்த காயத்ரி
பிரம்ம தேவதைச் சுடரே போற்றி!

பகலில் சாவித்ரீ - துர்கை 

ஒளியருள் சூரிய மணடலத்தின் நடு உற்றவளை
தெளிவருள் காயத்ரீயை என் தேவியை சிந்திப்பனே
வெங்கதிர் நடுவில் வாசம் வெண்ணிறம் காளை மீது
மங்கள சாவித்ரீ ரூபம் மலரெனும் பருவம் நாவில்
பொங்கிடும் யஜூர் வேதம் பொலிந்திடும் கையில் சூலம்
இங்கு காயத்ரீ ருத்ர தேவதை என்பேன் போற்றி!

மாலையில் லஷ்மீ 
ஒளியருள் சூரிய மண்டலத்தின் நடு உள்ளவளை
தெளிவருள் காயத்ரீயை எந்தேவியை சிந்திப்பேனே
கரிதாம் நிறத்தை மூத்த கலைமகள் வடிவை நன்மை
சொரியுமாம் ஒளியிடத்தை சுழலுமாயுதத்தை சென்று 
செரியுமாம் பொழுதில் சாமவேத உச்சரிப்பைக் கொண்ட
கருடவாகனத்து விஷ்ணு தேவதை காயத்ரி போற்றி

காயத்ரி பிரார்தனை

ஓம்
ஒளியினை பதினாங்கெனும் உலகினுக்குதவி ஞான
வெளியில் உலவும் அந்த வெய்யவன் தனக்கும் வற்றா
அளியினால் ஒளியை யூட்டி ஆண்டிடும் பொருளே நல்ல
தெளிவினை தந்து அஞ்ஞான இருளினை தீர்ப்பாய்!


அனைவரும் அன்னையின் அருள் பெற பிரார்த்திக்கிறோம்!

ஸத்குருபாதம் போற்றி!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...