குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, October 31, 2021

தலைப்பு இல்லை

வேதாந்தம் சித்தாந்த இரண்டுமென்ன மேன்மையுள்ள பெரியார்க்கு இரண்டுமொன்றே என்பது அகத்தியர் ஞானத்தில் உள்ள வாக்கு!
தத்துவங்கள் என்பது வாழ்க்கை எனும் ஆற்றைக் கடக்கப் பயன்படும் ஓடம் போன்றவை! ஓடத்தில் நாம் ஏறி கவனமாகப் பயணித்து கரையை அடைவது மாத்திரமே குறிக்கோளாக இருக்க வேண்டும்! 
ஓடத்தில் நாம் ஏறிப் பயணிக்க வேண்டுமே அன்றி ஓடத்தை நாம் தலையில் ஏற்றிப் பயணிக்கக் கூடாது! இன்று சித்தாந்தம் வேதாந்தம் கதைக்கும் பலரும் ஓடத்தை தலையில் ஏற்றியவர்களாகத் தான் இருக்கிறார்கள்! 
எனது குருநாதர் அடிக்கடி கூறும் விஷயம் ஆலயம், பக்தி இவை எல்லாம் மனதினை தூய்மைப்படுத்தி, அகங்காரம், ஆணவத்தை நீக்கி தன்னைப் போல மற்றெல்லா உயிர்களையும் காணும் பண்பைப் பெறுவது தான் வழிபாட்டின் குறிக்கோள் என்று! ஆனால் அகங்காரம் தூய்மையுறாமல், சித்தத்தின் ஆழத்தில் அசூயை, பொறாமை போன்ற துர்குணங்களை வைத்துக் கொண்டு வெளிவேடத்தில் பகட்டு ஆன்மீகம் பேசுவோர் கோயில், வழிபாட்டிற்குள் புகுந்தால் தமது மன விகாரங்களை வெளிப்படுத்தும் தளங்களாக, அரசியலாக ஆன்மீகம் மாறிவிடுவது தவிர்க்க முடியாது. 
புல்லாகி பூடாகி புழுவாகி பல்மிருகமாகி, பறவையாய் பாம்பாகி எல்லாப் பிறப்பும் எடுக்கும் ஆன்மா ஒவ்வொரு நிலையில் தன்னை முன்னேற்றிக் கொள்ள ஒவ்வொரு வழியை இறை சக்தி ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்துக் கொண்டு நாம் குருமுகமாகப் பெற்றதை அப்பியாசித்து அக முன்னேற்றம் காண வேண்டும் என்பதே சரியான வழி! 
நாம் முழுமையாக படிக்காத ஒன்றை, அரைகுறைப் புரிதலும் அருவெருப்பாக விமர்சிப்பது முட்டாள்களின் குணம்! நாம் ஒரு நூலை, தத்துவத்தை விமர்சிக்க அந்த நூலை பயின்றிருக்க வேண்டும். அப்படி முறையாகப் பயிலத்தொடங்கி அறிவு விழிப்படைந்தவர்கள் தேவையற்ற குதர்க்கம் புரியமாட்டார்கள்! 
குதர்க்கம் புரிபவர்கள் உண்மையில் அரசியல் அதிகார நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் எண்ணம் தாம் எண்ணுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமே அன்றி புரிந்துக் கொள்வது என்பது அல்ல!

தலைப்பு இல்லை

வேதாந்தம் சித்தாந்த இரண்டுமென்ன மேன்மையுள்ள பெரியார்க்கு இரண்டுமொன்றே என்பது அகத்தியர் ஞானத்தில் உள்ள வாக்கு!

தத்துவங்கள் என்பது வாழ்க்கை எனும் ஆற்றைக் கடக்கப் பயன்படும் ஓடம் போன்றவை! ஓடத்தில் நாம் ஏறி கவனமாகப் பயணித்து கரையை அடைவது மாத்திரமே குறிக்கோளாக இருக்க வேண்டும்! 

ஓடத்தில் நாம் ஏறிப்பயணிக்க வேண்டுமே அன்றி ஓடத்தை நாம் தலையில் ஏற்றிப் பயணிக்கக் கூடாது! இன்று சித்தாந்தம் வேதாந்தம் கதைக்கும் பலரும் ஓடத்தை தலையில் ஏற்றியவர்களாகத்தான் இருக்கிறார்கள்! 

எனது குருநாதர் அடிக்கடி கூறும் விஷயம் ஆலயம், பக்தி இவை எல்லாம் மனதினை தூய்மைப்படுத்தி, அகங்காரம், ஆணவத்தை நீக்கி தன்னைப்போல மற்றெல்லா உயிர்களையும் காணும் பண்பைப் பெறுவதுதான் வழிபாட்டின் குறிக்கோள் என்று! ஆனால் அகங்காரம் தூய்மையுறாமல், சித்தத்தின் ஆழத்தில் அசூயை, பொறாமை போன்ற துர்குணங்களை வைத்துக்கொண்டு வெளிவேடத்தில் பகட்டு ஆன்மீகம் பேசுவோர் கோயில் வழிபாட்டிற்குள் புகுந்தால் தமது மன விகாரங்களை வெளிப்படுத்தும் தளங்களாக, அரசியலாக ஆன்மீகம் மாறிவிடுவது தவிர்க்க முடியாதது. 

புல்லாகி பூடாகி புழுவாகி பல்மிருகமாகி, பறவையாய் பாம்பாகி எல்லாப்பிறப்பும் எடுக்கும் ஆன்மா ஒவ்வொரு நிலையில் தன்னை முன்னேற்றிக்கொள்ள ஒவ்வொரு வழியை இறை சக்தி ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு நாம் குருமுகமாகப் பெற்றதை அப்பியாசித்து அக முன்னேற்றம் காண வேண்டும் என்பதே சரியான வழி! 

நாம் முழுமையாக படிக்காத ஒன்றை, அரைகுறைப் புரிதலுடன் அருவெருப்பாக விமர்சிப்பது முட்டாள்களின் குணம்! நாம் ஒரு நூலை, தத்துவத்தை விமர்சிக்க அந்த நூலை பயின்றிருக்க வேண்டும். அப்படி முறையாகப் பயிலத்தொடங்கி அறிவு விழிப்படைந்தவர்கள் தேவையற்ற குதர்க்கம் புரியமாட்டார்கள்! 

குதர்க்கம் புரிபவர்கள் உண்மையில் அரசியல் அதிகார நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் எண்ணம் தாம் எண்ணுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமே அன்றி புரிந்துகொள்வது என்பது அல்ல!


Friday, October 29, 2021

தலைப்பு இல்லை

சேதனப் பசளை இறக்குமதி விவகாரம்... சீனா சன் சூ art of war இல் சொல்லித் தந்த Supreme excellence consists of breaking the resistance without fighting விதியை மக்கள் வங்கியை கறுப்பட்டியலில் சேர்த்து விளையாடுகிறது. 

Deal with Dragon.. let's see how the government is going to play! 

#stategy


தலைப்பு இல்லை

சேதனப்பசளை இறக்குமதி விவகாரம்... சீனா சன் சூ art of war இல் சொல்லித்தந்த Supreme excellence consists of breaking the resistance without fighting விதியை மக்கள் வங்கியை கறுப்பட்டியலில் சேர்த்து விளையாடுகிறது. 

Deal with Dragon.. let's see how the government is going to play! 

#stategy


தலைப்பு இல்லை

தற்பொழுது யாழ்ப்பாணம் வெண்பா புத்தக நிலையத்தில்,
"யோகமும் இயற்கையும்"
"சிவயோக ஞானத்திறவுகோல்"
ஆகிய இரண்டு நூற்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

தலைப்பு இல்லை

 தற்பொழுது யாழ்ப்பாணம் வெண்பா புத்தக நிலையத்தில்,

"யோகமும் இயற்கையும்"

"சிவயோக ஞானத்திறவுகோல்"

ஆகிய இரண்டு நூற்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.


Thursday, October 28, 2021

தலைப்பு இல்லை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரும், தமிழ் உலகிற்கு அறிமுகம் தேவையற்ற அருவி போன்று தேன் தமிழ் பேசி அவையோரைக் கட்டும் வல்லமையும் ஆளுமையும் உள்ள பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்களிடம் யோகமும் இயற்கையும் நூல் கையளிக்கப்பட்டது. 

படித்த பின்னர் மதிப்புரை தருவதாகக் கூறியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மதிப்புரை! 

கொண்டு சேர்த்த ஆதித்தனுக்கும் நன்றிகள்!


தலைப்பு இல்லை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும், தமிழ் உலகிற்கு அறிமுகம் தேவையற்ற அருவி போன்று தேன் தமிழ் பேசி அவையோரைக் கட்டும் வல்லமையும் ஆளுமையும் உள்ள பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்களிடம் யோகமும் இயற்கையும் நூல் கையளிக்கப்பட்டது. 

படித்த பின்னர் மதிப்புரை தருவதாகக் கூறியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மதிப்புரை! 

கொண்டு சேர்த்த ஆதித்தனுக்கும் நன்றிகள்!


Wednesday, October 27, 2021

தலைப்பு இல்லை

தற்போது கொழும்பில் பூபாலசிங்கம் புத்தக சாலையிலும் "யோகமும் இயற்கையும்" நூல் பெற்றுக் கொள்ளலாம். 

தமிழி பதிப்பகம் Poobalasingham Book Depot.Poobalasingham SritharasinghPoobalasingham Book DepotIndushan Rajan Poobalasingham


தலைப்பு இல்லை

தற்போது கொழும்பில் பூபாலசிங்கம் புத்தக சாலையிலும் "யோகமும் இயற்கையும்" நூல் பெற்றுக்கொள்ளலாம். 

தமிழி பதிப்பகம் Poobalasingham Book Depot.Poobalasingham SritharasinghPoobalasingham Book DepotIndushan Rajan Poobalasingham


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...