- வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
- வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க;
- விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க;
- புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க;
- தடவிழிகள் பாலசந்திரனார் காக்க;
- கவின்வளரும் அதரம் கசமுகர்காக்க:
- தால் (சருமம், தோல்) அங்கணக்டரீடர் காக்க;
- நவில் சிபுகம் (கன்னம்) கிரிசைசுதர் காக்க;
- தனி வாக்கை விநாயகர்தாம் காக்க;
- அவிர் நகை (உதட்டுச் சிரிப்பு) துன்முகர்காக்க;
- அள்எழிற் செஞ்செவி பாசபாணி காக்க;
- தவிர்தலுரு திளங்கொடி போல்வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க;
- காமரு பூமுகந்தன்னைக் குணேசர் நனிக்காக்க;
- களம் (தொண்டை) கணேசர் காக்க;
- வாமமுறும் இருதோளும் வயங்குகந்த பூர்வசர்தாம் மகிழ்ந்து காக்க;
- ஏமமுறு மணிமலை (எலும்பு பொருத்து) விக்கின விநாசன் காக்க;
- இதயந்தன்னைத்தோமகலுங் கணநாதர் காக்க;
- அகட்டினைத் (அடிவயிறு) துலங்(கு) ஏரம்பர் காக்க;
- பக்கம்இரண்டையும் தராதரர் காக்க;
- பிருட்டத்தைப் (இடுப்பின் பூட்டு முதல் ஆசனம் வரையிலான பகுதி) பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க;
- விளங்கிலிங்கம் (குறி) வியாள பூடணர்தாம் காக்க;
- தக்கருய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க;
- கச்சனத்தை (குறிக்கும் குதத்திற்க்கும் நடுவிலான மூலாதாரப்பகுதி) அல்லல் உக்க கணபன் காக்க;
- ஊருவை (தொடை)மங்களமூர்த்தி உவந்து காக்க;
- தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க;
- இரு பதம் ஏகதந்தர் காக்க;
- வாழ்கரம் கப்பிரப்பிரசாதனர் காக்க;
- முன்கையை வணங்குவார்நோய் ஆழ் தரச்செய் ஆசாபூரகக் காக்க;
- விரல் பதுமத்தர் காக்க;
- கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க;
- கிழக்கினிற் புத்தீசர் காக்க;
- அக்கினியிற் சித்தீசர் காக்க;
- உமாபுத்தரிரர் தென் திசை காக்க;
- மிக்க நிருதியிற் கணேசுரர்காக்க;
- விக்கினவர்த் தனர் மேற்கென்னுந் திக்கதனிர் காக்க;
- வாயுவிற் கசகன்னர் காக்க;
- திகழ் உதீசி தக்க நிதிபன்காக்க;
- வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க;
- ஏகதந்நர் பகல்முழுதுங் காக்க;
- இரவினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின் விக்கினகிருது காக்க;
- இராக்கதர் பூதம் உறுவே தாளம் மோகினிபேய் இவையாதி
- உயிர்திறத்தால் வருந்துயரும் முடிவில்லாத வேகமுறு பிணிபலவும் விலக்கு புயாசாங்குசர் தாம் விரைந்து காக்க;
- மதி, ஞானம், தவம், தானம், மானம் ஒளி, புகழ், குலம், வண்சரீரம் முற்றும்; பதிவான தனம், தானியம், கிருகம், மனைவி, மைந்தர்,
- பயில்நட் பாதிக கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க;
- காமர் பவித்திரர் முன்னான விதியாரும் சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க;
- வென்றி சீவிதம் கபிலர் காக்க;
- கரியாதியெலாம் விகடர் காக்க;
- என்றிவ்வாறிது தனை முக்காலமும் ஓதிடின்; நும்பால் இடையூறொன்றும் ஒன்றுமுறா; முனிவர்காள்; அறிமின்கள்; யாரொருவர் ஓதினாலும் மன்றஆங்கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும்.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Monday, June 11, 2012
காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் தாந்திரீக பிரயோகமுறை - 02
Sunday, June 10, 2012
காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம் தாந்திரீக பிரயோகமுறை - 01
Friday, March 23, 2012
பிராண சக்தி விழிப்பு இரகசியம்
Wednesday, March 14, 2012
காயத்ரி சாதனைக் குறிப்புகள் - 01
Wednesday, March 07, 2012
குருவின் அவசியமும் அநாவசியமும்
Monday, February 27, 2012
ஆன்மீகமும் மதங்களும்
- ஒன்று உண்மையான ஆன்மீகம்
- மற்றது சமயம் என்ற பொதுக்கட்டமைப்பு.
Sunday, February 26, 2012
சித்த வித்யா பாடங்கள் 13 (அ): எண்ணங்களின் இயக்கவியல் - எண்ணங்களின் அடிப்படை
- தவல் அட்டை (சிம் கார்ட்) - ஒருவர் தன்னுள்கொண்டிருக்கும் இயல்பு (நல்லது, கெட்டது, தெய்வீகம் போன்ற அகக் காரணிகள், எந்த எண்ணங்க்களையும் உண்மையில் வெளியில் இருந்து சிம் கார்ட் வாங்குவது போல் நாம் தான் வாங்கி செருகிக்கொள்கிறோம்)
- போன் (அலைபேசி) - உடல்
- அலை பெருக்கி கோபுரங்கள் - மூளை, எண்ணங்களை ஆகாயத்தில் பரப்புவது
- கட்டுப்பாட்டு நிலையம் - ஆகாய மனம் எனும் பிரபஞ்ச மனம்
Saturday, February 25, 2012
யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை
- இதை நான் ஏன் செய்கிறேன்?
- இதன் விளைவுகள் என்ன?
- இதில் நான் வெற்றியடைவேனா?
- சாதாரண உலக வாழ்க்கையில் நலமாக வாழ்வதற்குரிய அடிப்படையினை பெறுவதற்கு: "நண்பன் கூறினார்" "இவற்றை பழகினால் உடலாரோக்கியம் வரும், மன ஒருமை அதிகரிக்கும்" "வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்பன காரணமாக இருக்கலாம், இவையே பெரும்பாலான காரணங்கள், இன்றைய உலகில் நாளாந்த வாழ்க்கை உடலிற்கும் மனதிற்கும் சுமை மிகுந்ததாகி விட்டது அதற்கு ஒரு நிவாரணியாக "யோகா" பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் யோகம் பழகுபவர்களே பெரும்பாலானவர்கள்
- அற்புத சித்திகளை பெறுவதற்கு: அடுத்தவகையினர் அற்புத, அதீத சக்திகளை விரும்பி யோகம் பயிலவந்திருப்பவர்கள், அவர்களை பொறுத்தவகையில் யோகம் பயில்வதால் அற்புத சித்திகள் அடையலாம் என்பது நோக்கமாக இருக்கும்
- இறைவனை அடைவதற்கு: இவர்கள் இறைவனை அடைவதற்குரிய வழிமுறையாக யோகத்தினை தேர்ந்தெடுத்தவர்கள்,
- முதலில் நாம் யார் என்பதனை அறிதல் வேண்டும், இதனை ஒருவரியில் கூறுவதானால் "தன்னையறிதல்", அதாவது நாம் யார் என்பதனை பகுத்து அறிய வேண்டும்,
- பின்னர் நாம் யார் என்று அறிந்த எமது பகுதிகளை சுத்தம் செய்யவேண்டும்.
- எமக்கு மேலிருக்கும், எம்மைவிட வலுவான சக்தியான தலைவனை அறியவேண்டும்.
- அன்னமய கோசம்: எமது ஸ்தூல உடலும் மற்றைய உடல்களின் இணைப்பும் சேர்ந்த பகுதி, இதனை வசப்படுத்தும் சுத்தி செய்யும் முறைதான் ஆசனப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உபவாசம் எனபன,
- பிராணமயகோசம்: இதுவே அனைத்தையும் இணைக்கும் உயிர் சக்தி, இது மூச்சின் மூலம் பிரதானமாக கட்டுப்படுத்தப்படுகிறது, பிராணன் என்பது மூச்சு அல்ல, உடல், மனம், புத்தியாலும் கட்டுப்படுத்தக் கூடியது.
- மனோமயகோசம்: எண்ணங்களையும், மனம், சித்தம் என்பவற்றை ஆக்குவது,
- விஞ்ஞானமய கோசம்: புத்தி அதாவது பொருட்களை, எண்ணங்களை பகுத்தறிவது, மற்றைய கோசங்களை கட்டுப்படுத்தும் வலிமை உடையது.
- ஆனந்தமயகோசம்: ஆன்மாவினை சூழவுள்ள உறை, இந்த கோசத்தில்தான் மனிதனுடைய ஆத்ம சக்தி உறைந்துள்ளது, இந்த ஆத்ம சக்தியே புத்தியின் மூலம் செலுத்தபட்டு மனதினூடாக எண்ணமாகி பின்னர் பௌதீக நிலையில் செயல் நிலைக்கு வரும். இது அனைவருக்கும் பொதுவான செயல்முறை, அந்தந்த கோசங்களின் வலிமையிலும் சுத்தியிலுமே அவர்களின் வேற்றுமை தங்கியுள்ளது.
|
அட்டாங்க யோக படிமுறை
|
சுத்தி
|
வலிமைப்படுத்தல்
|
|
இயமம்
|
மனோமய கோச சுத்தி
|
விஞ்ஞானமய கோச வலிமைப்படுதல்
|
|
நியமம்
|
விஞ்ஞானமய கோச சுத்தி
|
மனோமய கோச வலிமைப்படுதல்
|
|
ஆசனம்
|
பிராணமய கோச சுத்தி (நாடிகள்,
சக்கரங்களை சுத்தி செய்யும்)
|
அன்னமய கோச சுத்தி
|
|
பிராணாயாம
|
அன்னமயகோச சுத்தி, பிராணமயகோச
சுத்தி,
|
அன்னமய, பிராணமயகோச வலிமை
|
|
பிரத்தியாகாரம்
|
மனோமய கோச சுத்தி,
|
விஞ்ஞானமய கோச வலிமை
|
|
தாரணை
|
விஞ்ஞானமயகோச சுத்தி,
|
மனோமயகோச வலிமை
|
|
தியானம்
|
ஆனந்தமயகோச சுத்தி,
|
விஞ்ஞானமய கோச வலைமை
|
|
சமாதி
|
இது அனைத்து கோசங்களும்
சுத்தியாகி, வலிமை அடைந்த நிலை, பரிபூரணமாக ஆனந்தமய கோச நிலை விழிப்புற்ற நிலை
|
|
Sunday, February 12, 2012
சித்த வித்யா பாடங்கள் 12:மனித காந்த சக்தியினை பிரயோகித்து பயன் பெறும் முறைகள்
Friday, February 03, 2012
சித்த வித்யா பாடங்கள்: 11 மனித காந்தசக்தியினை வளர்ச்சியுறச் செய்யும் பயிற்சிகள்
- உங்கள் இஷ்ட தெய்வத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்,
- அத்தெய்வதிற்குரிய சிறிய மந்திரமொன்ரை எடுத்துக்கொள்ளுங்கள் (ஓம் "நமசிவாய, நாராயணய, சரவணபவாய, துர்கையை" நமஹா என்றவாறு அல்லது காயத்ரி மந்திரம், இஸ்லாமிய நண்பர்கள் "பிஸ்மிள்ளஹி ர்ரகுமநிர்ரஹீம் என ஜெபிக்கலாம் )
- பின்னர் குறித்த நேரத்தில் மனதில் உங்களது இஷ்ட தெய்வத்தினை பாவித்த வண்ணம் மந்திரத்தினை உங்களது மூச்சினை மெதுவாக உள்ளிழுக்கும் போது உங்களது இஷ்ட தெய்வத்தினது அருள் காந்த சக்தி சென்று உடல் மனதில் கலப்பதாக பாவித்து வரவும்.
- ஓரிரு மாத கால பயிற்சியில் நிச்சயமாய் உங்கள் காந்த சக்தி வளர்ந்திருப்பதை அனுபவமாக உணரலாம்.
சிஷ்ய அதிகார மதிப்பீடு
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...
-
உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களு...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...

