குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 05, 2025

நாம் நினைக்கும் காரியங்கள் எமக்கு நடக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

 நாம் நினைக்கும் காரியங்கள் எமக்கு நடக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

குறித்த காரியம் நடைபெறுவதற்கான தகுந்த சித்த சம்ஸ்காரங்கள் எம்மில் இல்லாதது,

சம்ஸ்காரம் இருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்ற தெளிவு புத்தியில் இல்லாமல் இருப்பது,

அப்படியிருந்த்தாலும் நாம் செய்த சில பாப வினைகள் அந்த சித்த சம்ஸ்காரங்களை செயற்படவிடாமல் தடுப்பதாலும்,

தகுந்த சித்த சம்ஸ்காரங்கள் இருந்தாலும் அதைச் செயற்படுத்த தகுந்த சக்தி இல்லாமல் இருப்பதாலும்,

சித்தத்தில் சம்ஸ்காரம் இருந்தாலும் தகுந்த ஆங்காரம் இல்லமையால் அந்தச் செயலைச் செய்வதற்குரிய உத்வேகம் எம்மில் இல்லாமலும் இருப்பதால் எம்மால் நாம் நினைக்கும் காரியங்களில் வெற்றியடைய முடிவதில்லை.

மந்திரம் என்பது மனனம் செய்யும் போது எமது மனதைக் காப்பது என்று அர்த்தம்; மந்திர சாதனை மூலம் நாம் எமது மனதின் சலனத்தைக் குறைத்து சித்தம், புத்தி, ஆங்காரம் ஆகியவற்றை நமது காரிய சாதகத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கலாம். நாம் செய்யும் சங்கல்பம் சித்தத்திற்கு தகுந்த சமஸ்காரத்தையும், புத்தியிற்கு அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவையும், ஆங்காரத்திற்கு அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் தரும். பின்னர் மந்திர ஜெபத்தின் மூலம் இதற்குரிய தெய்வீக ஆற்றல் எமது அந்தக்கரணங்களுக்குப் பெறப்படும்.

ஒருவனுக்கு காரிய சாதகமாகுவதற்குரிய ஜெபக்கணக்கு அவனது சித்த சமஸ்காரத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கிறது. அழுக்கு நிறைந்த, பாப சம்ஸ்காரங்கள் நிறைந்த சித்தமாக இருந்தால் அதிக மந்திர ஜெபமும், தூய்மையனா, பாப சம்ஸ்காரங்கள் அற்ற சித்தமாக இருந்தால் குறைந்தளவு ஜெபத்திலும் காரியம் சாதகமாகும்.

இதைப் புரிந்து சாதனை செய்வீகளாக

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

மந்திர ஸாதனை துரிதமாக பலனளிக்க வழி

 நீங்கள் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்த விரும்புகிறீர்கள், இதற்கு ஒரு தொழில் சார்ந்த நிபுணரை அழைக்கிறீர்கள். அவரிடம் உங்கள் வீட்ட...