குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 07, 2020

தலைப்பு இல்லை

இலங்கை தாமரை மொட்டு!

இந்தியா தாமரைப் பூ!

பிராந்தியத்தின் போக்கு ஒன்றுபடுதலை (unification) நோக்கிச் செல்கிறதா? 

முற்போக்கு, இடதுசாரிச் சிந்தனைகள் என்பவை மக்களுக்கு கவர்ச்சிகரமாக இல்லையா? எதிர்ப்பரசியல் வலுவிழந்து விட்ட காலாவதியான தத்துவங்களா? 

அறுதிப் பெரும்பான்மை பெற பெரும்பான்மையான மக்களின் மனதை எப்படி ஒன்றுபடுத்த முடிந்தது?

பழைய சிறுபான்மை அரசியல் தந்திரோபயம் என்பது பெரும்பான்மை இரு பெரும் பிளவாக, கட்சி அரசியலில் வலுவற்று இருக்கும் போது சிறுபான்மையினர் ஒற்றுமையாக அரசமைக்க பேரம் பேசும் சக்தியாகி தாம் வலுப்பெறுவது என்ற அனுமானத்தில் வகுக்கப்பட்ட தந்திரோபாயம்; 

கடந்த ஐந்து வருடத்தில் அந்த இருகட்சிப் பிளவு தம்மை வலுவிழக்க வைக்கும் அரசியல் இது என்பதைப் புரிந்து கொண்டு, அரசியலை மாற்றி, இருபெரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை கரைத்து விட்டு, புதிய தாளில் தாமரை மொட்டு வரைந்து தனிப்பெரும் பெரும்பான்மையாக்கி வலுப்பெற்று இருக்கிறது இலங்கையின் யதார்த்த அரசியல், 

இதன் மறுதலையாக தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கு, மலையகம் ஒட்டமுடியாத துண்டு துண்டாக்கிக் கிடக்கிறது.

முடிவுகளுக்கும், கொள்கை மாற்றங்களுக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கும் பலம் எவருக்கும் இனி வாய்க்கப் போவதில்லை!

ஆகவே நிதானத்துடனும், புரிந்துணர்வுடன் கூடிய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடு, புரிந்துணர்வு, உரையாடல், நட்பு பெரும்பான்மை சமூகத்துடன் நடைபெறாமல் அரசியல் இனிச் சாத்தியம் இல்லை என்ற நிலவரத்தில் வந்து நிற்கிறது என்பதுதான் யதார்த்தம்! 

தமக்குள் ஒன்றுபட முடியாமல் இருப்பதற்குரிய "மனநிலை" க்குரிய காரணங்கள் எவை என்பதைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் இனி வலிமை பெறமுடியாது. 

இலங்கையும் இந்தியாவும் இந்த ஒரே போக்கில் பயணிக்கிறது என்பது இன்னும் சுவாரசியம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...