குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, February 15, 2018

காயத்ரி மந்திரம் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மையும்


கட்டுக்கதை#01: காயத்ரி மந்திரம் அதீத ஆற்றல்களை உடனடியாக விழிப்பிக்கும்
உண்மை: காயத்ரி அதீத ஆற்றல்களை பெறுவதற்கான பக்குவத்தையும், மனிதனது பரிணாமத்தை தெய்வ நிலை நோக்கி விரைவாக முன்னேற்றும் ஆற்றலையும் தரும் மந்திரம். இது ஒருவனுக்கு தன்னை கட்டுப்படுத்தும் சுய ஒழுக்கத்தையும், சுயகட்டுப்பாட்டையும், ஆன்ம விழிப்பையும் தந்து, இயற்கையில் ஆற்றலையும் ஒழுங்கையும் புரிந்து கொண்டு பரிணாமத்தில் உயரவைக்கும் மந்திர சாதனை.

கட்டுக்கதை#02: காயத்ரி மந்திரம் பிராமண ஜாதியினருக்கும் மாத்திரம் உடையது.
உண்மை: பிராமணன் என்பது வேதம் கூறும் உயர்ந்த ஞானத்தை அடைய தனது வாழ்வின் இலக்காக நிர்ணயித்தவன் என்று பொருள். ஆகவே எவராவது அந்த பிரம்ம ஞானத்தை அடைய தமது வாழ்வின் இலக்காக நிர்ணயித்தால் அவர்களுக்குரியது காயத்ரி மந்திரம்.

கட்டுக்கதை#03: காயத்ரி மந்திரம் மற்றவர்கள் காதுகளுக்கு கேட்காமல் தனிமையில் இருந்து மட்டுமே அப்பியாசிக்க வேண்டும்.
உண்மை: பலர் இணைந்து ஜெபித்தால் பிரபஞ்ச பிராண சக்தி இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கையின் மடங்காக குறிந்த இடத்தில் விழிப்படையும். ஆகவே பலர் இணைந்து கூட்டு ஜெபம் செய்வது துரித முன்னேற்றத்தை ஏற்படுத்த வல்லது.

கட்டுக்கதை#04: மனதால் மட்டுமே காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
உண்மை: மானசீக ஜெபம் செய்ய ஒருவன் தனது மனதின் எண்ணங்களை கட்டுப்படுத்தி குறைத்திருக்க வேண்டும். விழிப்புணர்வு நிலை அதிகமாக இருக்க வேண்டும். ஸ்தூல உடலில் காயத்ரியின் 24 சக்தி கேந்திரங்களை விழிப்படையச் செய்ய வாயால் உதட்டை அசைத்தோ அல்லது உரக்கவோ பயிற்சித்துப் பழக வேண்டும்.

கட்டுக்கதை#05: காயத்ரி மந்திரம் முறையாக தீட்சை பெற்றவரகள் மட்டுமே ஜெபிக்க வேண்டும்.


உண்மை: சென்ற நூற்றாண்டில் ரிஷிகளின் திட்டத்திற்கமைய பண்டிட் ராம் சர்மா ஆச்சார்ய, அகத்திய மகரிஷி யின் ஆணைக்கமைய பண்டிட் கண்ணைய யோகி, மற்றும் எண்ணிறைந்த யோகிகள் பல கோடி ஜெப புரச்சரணம் செய்து காயத்ரியின் ஆற்றல் பிரபஞ்ச மயமாக்கி அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியுள்ளனர். ஆகவே எவர் ஒருவர் சித்த வித்யா குருமண்டல நாமாவளியும், அகத்திய மூல குரு மந்திரமும் ஜெபிக்கிறார்களோ அவரகளுக்கு காயத்ரி சாதனை செய்வதற்குரிய பக்குவத்தை பிரபஞ்ச சக்தி ஏற்படுத்தி கொடுக்கும். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...