குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 16, 2016

அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும்



அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் எனும் நூல் அகத்தியர் ஞானம் முப்பது என்ற அகத்திய மகரிஷியின் கிரியா ‍வாசி சிவ யோக விளக்கங்களை கூறும் அரிய பாடல் தொகுப்பு.

இந்த நூலின் சிறப்பு ஒரு மானிடனாக பிறப்பெடுத்தவன் தான் அடையக்கூடிய மிக உயர்ந்த இறை நிலையை (சித்தர்கள் கூறும் மகாகாரண சரீரம், திருச்சிற்றம்பலம், இறவா நிலை, சொருப சமாதி) அடைய விருப்பம் கொண்ட மாணவனை ஆரம்பம் நிலை முதல் இறுதி நிலை வரை அவன் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை படிப்படியாக எடுத்துரைக்கும்.

இன்று யோகம் பயில விரும்பும் பலர் அதன் முழுமையான வரை படத்தை அறிந்து கொண்டு பயிலத் தொடங்குவதில்லை. தமது வாழ்க்கையில் ஏற்படும் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு உகந்த தீர்வாக எடுத்துக்கொண்டு ஆரம்பிப்பதால் அந்த பிரச்சனை தீர்ந்தவுடன் அவர்களது பயணம் நின்று விடுகிறது. ஆனால் முழு வரை படத்தையும் அறிந்தவன் ஆர்வத்துடன் விரிந்த பிரபஞ்ச உண்மைகளை அறியும் ஆர்வத்துடன் முன்னேறுகிறான்.

இப்படி முன்னேறுவதன் பயனாக அவனது மன, பிராண சக்திகள் அதிகரித்து தனது உலக வாழ்க்கையிலும் அரிய சித்திகளை பேற்று இன்பத்தை அனுபவித்து அதைவிட உயர்ந்த இன்பத்தை அனுபவிக்கும் நோக்குடன் உயர்கிறான்.

இந்த பயணத்திற்குரிய முழுமையான வழிகாட்டி இந்த நூல்.

இந்த முப்பது பாடல்களும் மெய்ஞான குரு அகத்திய மகரிஷியின் ஆசியுடன் தியான சாதனை மூலம் விளக்கவுரை பெறப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

நூலைக்கற்ற பலரும் அவற்றில் சந்தேகம் தெளிய வேண்டும் என்றும், அகத்தியர் மூல குரு மந்திர உபதேசம் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதை அடுத்து கீழ்வரும் வகுப்பு திட்டம் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் ஆரம்பிக்க பட இருக்கிறது.

இதன் பிரகாரம்:

இலங்கையில்:
  • ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் குறைந்தது இருபது மாணவர்கள் பதிவு செய்த பின்னர் வகுப்பு அறிவிக்கப்படும்.
  • வகுப்பின் தொடக்கத்தில் அகத்தியர் மூல குரு மந்திரமும், சித்த வித்யா குருமண்டல நாமாவளி, காயத்ரி மந்திர உபதேசம் வழங்கப்படும்.
  • பின்னர் இரண்டு நாட்களில் தினசரி தியானப் பயிற்சியுடன் பாடல்களுக்கான சுருக்க விளக்கவுரையும் கற்பிக்கப்படும்.
  • மூன்றாவது நாள் அடிப்படி பயிற்சி, தினசரி சாதனை வழிகாட்டல் தரப்படும்,
  • ஆசிரியரின் நேரம் தானமாக தரப்படுகிறது. மாணவர்கள் விரும்பிய நன்கொடையினை தரலாம்,பெறப்படும் நன்கொடைகள் இந்த பணி
  • கற்கும் மாணவர்களை ஏதாவது ஒருவகையில் இந்த நல்ல விடயங்களை மற்றவர்களுக்கு சென்றடைய செய்யும் பணியில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவர்.
சென்னை/தமிழ் நாட்டில்:
  • வகுப்புக்களை ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
  • வகுப்புபிற்குரிய செலவுகளை {வகுப்பு நடாத்துவதற்குரிய இடம், ஆசிரியரின் பயண, தங்குமிட செலவுகள்} மாணவர்கள் பங்களிப்பு செய்வதோ, ஏற்பாடு செய்வதோ எதிர்பார்க்கப்படுகிறது.
  • வெளிநாடுகளில்
  • வகுப்புக்களை ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
    வகுப்புபிற்குரிய செலவுகளை {வகுப்பு நடாத்துவதற்குரிய இடம், ஆசிரியரின் பயண, தங்குமிட செலவுகள்} மாணவர்கள் பங்களிப்பு செய்வதோ, ஏற்பாடு செய்வதோ எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வம் உள்ளவர்கள்:
கீழ்வரும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
https://goo.gl/forms/gV2tr3Lif25qkHKx1

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...