குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 21, 2013

யோகசாதனைக் குறிப்புகள் - மனதின் ஆறு சக்திகள்


பொதுவாக எமது யோக தாந்திரீக  மரபில் மூன்று வகையான சக்தி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது, அதாவது இச்சா சக்தி (ஆன்ம பலம் அல்லது எடுத்த கரியத்தை எண்ணியவாறு முடிக்கும் ஆற்றல்) கிரியா சக்தி (செயல்புரியும் ஆற்றல்), ஞானாசக்தி (அறிவு சக்தி) என்பதே அவை மூன்றும்.   

இந்த மூன்று சக்திகளும் எங்கோ பரலோகத்தில் இருப்பதாக எண்ணி குழம்ப வேண்டாம், மனிதன் கடவுளின் சிறிய மாதிரி, ஆகவே பிரபஞ்ச மகா சக்தி மனிதனிலும் உண்டு, இதனையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்றார்கள். மனிதனில் உள்ளது என்றால் எங்கு உள்ளது? மனதில்தான் இந்த சக்திகள் உள்ளது. இறைவன் தனது பிரபஞ்ச மனதில் உள்ள இந்த சக்திகள் மூலம் பிரபஞ்சத்தில் காரியங்கள் நடத்துவது போல இறைவனின் சிறிய மாதிரியுருவான மனிதன் தனது மனது கொண்டு இந்த சக்திகளை பாவிக்க முடியும், அறிந்தோ அறியாமலோ இவற்றை நாம் அன்றாடம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். யோக சாதனை தாந்திரீகம் என்பன சாதாரண நிலையில் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதற்கும் மேல் சென்று அதீத சக்தியினை பெறும் முறைகளை கூறுகின்றன. இங்கு மனித மனதின் ஆறுசக்திகளும் பற்றி சுருக்கமாக பார்ப்போம். 

மனதிற்கு ஆசைகள் உதிக்கும் இந்த ஆசைகளை உருவாக்கும் ஆற்றல் இச்சா சக்தி எனப்படும், உருவாக்கிய ஆசைகளை அடைவதற்குரிய செயலில் ஈடுபடத்தூண்டும் செயலூக்கம் கிரியா சக்தி. இந்த செயலினை எப்படி செய்வது என்று திட்டம் போட்டு அடையும் விதமும் முறைகளும் ஞானா சக்தி, இந்த அடிப்படை சக்திகள் மூல சக்தியான பராசக்தியின் அமிசமாக மனிதனில் மனதின் ஒரு கூறாக இருக்கின்றன. 

இது தவிர மனதின் சக்திகளை ஆறுவிதமாக கீழ்வருமாறு பகுக்கலாம்;
  • வேதனா சக்தி – பிரித்துணரும் திறன்
  • ஸ்மரண சக்தி – ஞாபக சக்தி
  • பாவனா சக்தி – ஆக்கபூர்வகற்பனை (இது வெறுமனே எண்ணங்களை எழுந்த மானமாக கற்பனை செய்வதை குறிப்பதன்று, உணர்வுபூர்வமாக ஒரு ஒழுங்குமுறையில் கற்பனை செய்வதைகுறிக்கும், இப்படியான பாவனை பிரபஞ்சத்தில் கட்டாயம் நடந்தே தீரும் என்பது சித்த வித்தையில் அடிப்படை விதி)
  • மனுஷ்ய சக்தி - தீர்மானிக்கும் சக்தி, ஒரு விடயத்தினை நல்லதா கெட்டதா என தீர்மானிக்கும் சக்தி.
  • இச்சா சக்தி அல்லது சங்கல்ப சக்தி – ஆன்ம பலம் அல்லது சங்கல்பிக்கும் எண்ணத்தினை நிறைவேற்றும் ஆற்றல். 
  • தாரணா சக்தி – ஒரு விடயத்தினை ஏகாக்கிரமாக மனதில் நிறுத்தி சிந்திக்கும் திறன்.

5 comments:

  1. பதிவிற்கு நன்றி, இதனை பற்றி மேலும் அறிய ஆவலுடன் எதிர்பார்கிறோம்

    ReplyDelete
  2. பதிவிற்கு நன்றி, இதனை பற்றி மேலும் அறிய ஆவலுடன் எதிர்பார்கிறோம்

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Continue to the gud job. Thank you.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...